search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புதுமண தம்பதி ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை
    X

    புதுமண தம்பதி ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை

    • கணவன்-மனைவி இருவரும் சில மாதமாக கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தனர்.
    • ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சிதறிக் கிடந்த உடல்களை மீட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், ரமனப்பள்ளியைச் சேர்ந்தவர் சாய்குமார் ரெட்டி (வயது 29), குடிநீர் சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி ஹேமமாலினி (28). தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    ஹேமமாலினி தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இருவரும் கடப்பா நகர் விஜய துர்கா காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    ஹேமமாலினி மரியாபுரத்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றினார்.

    கணவன்-மனைவி இருவரும் சில மாதமாக கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தனர்.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து வாழ்வதைவிட சாவது மேல் என நினைத்து தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தனர்.

    இருவரும் நேற்று இரவு கடப்பா புறநகர் பகுதியான கனுமலோபள்ளி ரெயில் நிலையம் அருகே சென்றனர். அப்போது வந்த ரெயில் முன்பு கணவன் மனைவி இருவரும் கட்டிப்பிடித்தபடி பாய்ந்தனர்.

    இதில் உடல் சிதறி இருவரும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் கணவன்-மனைவி ரெயிலில் சிக்கி இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

    ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சிதறிக் கிடந்த உடல்களை மீட்டனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×