search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abirami"

    • நடிகர் கமல்ஹாசன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

    இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் 'தக் லைஃப்' (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், இப்படத்தில் நடிகை அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜனவரியில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பிலும் இணையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.


    கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான 'விருமாண்டி' திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக அபிராமி நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் பேச்சு வழக்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து தற்போது இவர் கமலுடன் மீண்டும் இணையவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    கீழே கொடுக்கப்பட்டுள் அபிராமிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
    வானுலகத்தில் வாழும் தேவர்களுக்கு விருந்தாகப்
    பாற்கடலில் தோன்றிய அமுதத்தை வழங்கிய அபிராமி,
    அடியேன் தன்னை நாடித் தேடி வந்து வருந்தாதபடி
    என் இருதய கமலத்தில் தானே எழுந்தருளி வந்து புகுந்து,
    அதுவே பழைய இருப்பிடமாக எண்ணும்படி வீற்றிருந்தாள்.
    இனிமேல் எனக்குக் கைவராத பொருள் ஒன்றும் இல்லை.

    அம்பிகையைத் த்யானம் பண்ணியதால் குறைவிலா நிறைவு உண்டாயிற்று என்பது கருத்து.
    கள்ளக்காதல் விபரீதமாக பெற்ற குழந்தைகளையே கொன்ற அபிராமி புழல் ஜெயலில் கடந்த 4 நாட்களாக எதுவும் சாப்பிடாமல் தனது வாழ்க்கையே பறிபோனதாக புலம்புவதாக தெரியவந்துள்ளது. #KundrathurAbirami
    சென்னை:

    சென்னையை அடுத்த குன்றத்தூரைச் சேர்ந்த வங்கி அதிகாரி மனைவி அபிராமி கள்ளக்காதல் விவகாரத்தில் தனது 2 குழந்தைகளை கொன்று தப்பினார்.

    நாகர்கோவிலில் பிடிபட்ட அவரை சென்னை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அபிராமி எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ருசிக்கும் குணம் உடையவர்.

    கணவர் வேலைக்கு சென்றபின்பு செல்போனில் ‘டப்ஸ்மாஸ்’ செயலியில் மூழ்கி நடிகர்-நடிகைகளின் வசனங்களுக்கு ஏற்ப நடித்து படம் பிடிப்பார்.

    இதற்காக செல்போனில் ‘மியூசிக்கலி’ என்ற செயலி உள்ளது. அதை டவுன்லோடு செய்தால் அதில் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்களின் டப்ஸ்மாஸ்கள் இருக்கும். அதில் அபிராமி தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார்.

    கள்ளக்காதலனான பிரியாணி கடை ஊழியர் சுந்தரம் மட்டுமல்லாது வேறு சில இளைஞர்களுடன் இணைந்து ‘டப்ஸ்மாஸ்’ விளையாடி இருக்கிறார்.

    தனது வீட்டுக்கு அருகில் உள்ள பிரியாணி கடையில் இருந்து பிரியாணி வாங்கி சாப்பிடுவார். அப்போது கடை ஊழியருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் உருவானது. ஒரு தடவை கணவர், குழந்தைகளை உதறிவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடி இருக்கிறார். அதன்பிறகு பெற்றோர் அவரை கண்டித்து மீண்டும் கணவருடன் சேர்த்து வைத்து இருக்கிறார்கள்.

    இதனால் தனது மகிழ்ச்சி பறிபோனதை எண்ணிய அபிராமி கள்ளக்காதலனுடன் வாழ இடையூறாக இருந்த குழந்தைகளை கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    இதில் கணவரையும் கொல்ல அபிராமி திட்டமிட்டார். அவர் பணி நிமித்தமாக இரவு அலுவலகத்திலேயே தங்கியதால் தப்பினார்.

    சிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து யாரிடமும் பேசாமல், சாப்பிடாமல் விரக்தியுடன் காணப்பட்டார். 4 நாட்கள் சாப்பிடாமல் இருந்ததால் சிறையில் மயங்கி விழுந்தார். அதன்பிறகு முதல் உதவி அளித்து அவரை சாப்பிடச் செய்தனர்.

    தற்போது சக கைதிகளிடம் லேசாக பேசி வருகிறார். சிலரிடம் தனது நிலையை சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். நானும் சுந்தரமும் மியூசிக்கலில் டப்ஸ்மாஸ் செய்து சேர்ந்தோம். அதன் பிறகு எங்களிடையே நட்பு ஏற்பட்டு எனது வாழ்க்கையே நாசமாகிவிட்டது என்று கதறியுள்ளார். #KundrathurAbirami
    கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார். #Kundrathur #Abirami

    பூந்தமல்லி, செப். 3-

    சென்னை குன்றத்தூரை சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி தனது 2 குழந்தைகளுக்கு பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற் படுத்தியது.

    அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக அவர் குழந்தைகளை கொலை செய்தது தெரிய வந்தது. இந்த நிலையில் அபிராமி, பெற்ற குழந்தைகளையே கொலை செய்யும் அளவுக்கு கொடூர கொலையாளியாக மாறுவதற்கு காரணம் என்ன? என்பது பற்றி பரபரப்பான புதிய தகவல் கள் கிடைத்துள்ளன.

    சென்னை வடபழனியில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் பணியாற்றிய போது தான் அபிராமி, விஜயை சந்தித்துள்ளார். முதல் பார்வையிலேயே காதல் ஏற்பட்டது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண் டனர். இவர்களின் இல்லற வாழ்க்கையில் அஜய், கார்னிகா என 2 குழந்தைகள் பிறந்தன.

    திருமணத்துக்கு பின்னர் அபிராமி வேலைக்கு செல் வதை நிறுத்திவிட்டார். விஜயும் ஓட்டல் வேலையை விட்டு விட்டார். வங்கி ஒன்றில் கமி‌ஷன் அடிப்படை யில் வேலை செய்து வந்தார். ஆரம்பத்தில் சந்தோ‌ஷமாக இருந்த அபிராமியின் வாழ்க்கை ஆடம்பர எண்ணம் காரணமாக திசைமாறியது. இதனால் முதல் காதல் கசக்க தொடங்கியது.

    இதன் பின்னர் கடந்த 2 மாதங்களாக பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்து டன் அபிராமி பழக தொடங் கினார். கணவர், வேலை வி‌ஷயமாக வெளியில் செல்லும் நேரங்களில் அபிராமியின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

    இதனால் 2 பேருக்கும் இடையே நெருக்கம் அதிக மானது. பலமுறை உல்லாச மாக இருந்துள்ளனர். இதன் பின்னர் சுந்தரம் இல்லாமல் இனி, வாழவே முடியாது என்கிற மனநிலைக்கு அபிராமி தள்ளப்பட்டார்.

    இதன்பிறகு இந்த சுந்தரத் துடனான கள்ளக்காதல் விவகாரம் வெடிக்க தொடங்கியது. இதனால் கணவர் விஜயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது, சுந்தரத்தின் மீதான ஆசையை அபிராமியிடம் மனதில் கூடுதலாகவே ஏற்படுத்தியது.

    இதுபற்றி சுந்தரத்திடம் கூறிய அபி ராமி, நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கூறியுள்ளார். இதன் பின்னர்தான் இருவரும் சேர்ந்து குழந்தைகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை மட்டுமின்றி, கணவர் விஜயையும் சேர்த்தே தீர்த்துக் கட்ட அபிராமி திட்டம் போட்டார். சுந்தரத்துடனான கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்.

    அபிராமி, சுந்தரம் இருவர் மீதும் கொலை, கூட்டு சதி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர்.

    இந்த வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கி தர போலீசார் முடிவு செய்துள் ளனர்.

    இந்த நிலையில் குழந்தை கள் கொலை செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் சுதா கூறும்போது, சிறுவன் அஜய் 3 மாத குழந்தையாக இருக்கும் போதில் இருந்தே எங்களுக்கு தெரியும். 2-வது பெண் குழந்தையும் இங்கேதான் பிறந்தது. குழந்தைகளை கொல்லாமல் விட்டிருந்தால் நாங்களே பாசத்தோடு வளர்த்திருப்போம் என்றார். * * * அபிராமி

    சென்னை குன்றத்தூரில் தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தப்பி ஓடிய பெண்ணை நாகர்கோவிலில் இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜய் (வயது 30). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீடுகள் வாங்க, கடன் வாங்கி கொடுக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார்.

    இவருடைய மனைவி அபிராமி (25). இவர்களுக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர்.  கணவன்-மனைவி இருவரும் பட்டப்படிப்பு படித்து உள்ளனர்.

    மாத கடைசி என்பதால் நேற்று முன்தினம் விஜய், நிலுவையில் உள்ள ஆவணங்களை முடிக்க மதியம் வங்கிக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவருடைய மனைவியும், குழந்தைகளும் மட்டும் இருந்தனர்.

    வேலை அதிகம் இருந்ததால் விஜய், நேற்று முன்தினம் இரவு வங்கியில் தங்கி விட்டார். நேற்று அதிகாலையில் அவர், தனது வீட்டுக்கு வந்தார். வீட்டின் வெளியே அபிராமியின் மொபட் இல்லை. எனவே அருகில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று இருக்கலாம் என்று கருதிய விஜய், தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.

    ஆனால் அபிராமி அங்கு வரவில்லை என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த விஜய், தனது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் பதறிப்போன விஜய், மீண்டும் தனது வீட்டுக்கு சென்று பார்த்தார். வீட்டின் கதவு சாத்தப்பட்டு, வெளிப்புறமாக தாழ்ப்பாள் மட்டும் போடப்பட்டு இருந்தது. விஜய், கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

    அங்கு தனது 2 குழந்தைகளும், வாயில் நுரை தள்ளிய நிலையில் கட்டிலில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தைகளின் உடலை பார்த்து விஜய் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, போலீசுக்கு பயந்து அபிராமி தப்பிச்சென்று விட்டது தெரிந்தது. இதுபற்றி குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையில் நேற்று காலை விஜய் மற்றும் அபிராமியின் உறவினர்களின் செல்போன்களுக்கு அபிராமியிடம் இருந்து ஒரு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில் அவர், “எனது குழந்தைகளே சென்று விட்டபிறகு, இனி நான் இருந்தால் என்ன?, செத்தால் என்ன?” என குறிப்பிட்டு இருந்தார்.

    அதை பார்த்த விஜய், “ஏன் இப்படி செய்தாய்? எனக்கேட்டு மீண்டும் மனைவியின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பினார். ஆனால் அவரிடம் இருந்து அதற்கு பதில் வரவில்லை. இதனால் அவரது செல்போனுக்கு விஜய், தொடர்பு கொண்ட போது மீண்டும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

    அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரித்தபோது, கடைசியாக கோயம்பேடு பஸ் நிலையத்தை காட்டியது. எனவே அபிராமி, தனது வீட்டில் இருந்து மொபட்டில் கோயம்பேடு சென்று அங்கிருந்து பஸ்சில் வெளியூர் தப்பிச்சென்று இருக்கலாம் என தெரிய வந்தது.

    குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அபிராமியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நாகர்கோவில், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு விரைந்தனர்.

    இந்த நிலையில், பாலில் விஷம் கலந்து கொடுத்து தனது 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி நாகர்கோவிலில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.  அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    ×