என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » madonna sebastian
நீங்கள் தேடியது "Madonna Sebastian"
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் - மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகி வரும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. #KombuVatchaSingamda
‘குற்றம் 23’, ‘தடம்’ படங்களை தொடர்ந்து ரெதான் சினிமாஸ் சார்பில் இந்தர்குமார் தயாரிப்பில் மூன்றாவதாக உருவாகியிருக்கும் படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’.
‘சுந்தரபாண்டியன்’ வெற்றியை தொடர்ந்து எஸ்.ஆர்.பிரபாகரன் - சசிகுமார் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது.
இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, ஹரீஷ் பெரடி, துளசி, தீபா ராமனுஜம், செண்ராயன் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மறைந்த இயக்குநர் மகேந்திரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
1990-1994 கால கட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த, பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
And it’s a #wrap#kombuvatchasingamdapic.twitter.com/tJ7pmr9gcT
— M.Sasikumar (@SasikumarDir) May 10, 2019
ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள செய்துள்ள இந்த படத்திற்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். டான் பாஸ்கோ படத்தொகுப்பையும், அன்பறிவ் ஸ்டன்ட் காட்சிகளையும் கவனிக்கின்றனர். #KombuVatchaSingamda #Sasikumar #MadonnaSebastian
மடோனா செபாஸ்டின் இசையமைப்பாளருடன் ராபியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் நிலையில், இருவருக்கும் காதல் இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள். #MadonnaSebastian
பிரேமம் என்கிற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மடோனா செபாஸ்டின், தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் படத்தில் நடித்தார். தொடர்ந்து கவண், பவர் பாண்டி, ஜுங்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த மடோனா தற்போது, சசிகுமார் ஜோடியாக கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் நடித்து வருகிறார்.
படங்களை தேர்வு செய்வது குறித்து அவர் கூறும்போது, ‘‘நான் கதைகள் தேர்வில் கவனமாக இருக்கிறேன். எந்த வகையான படங்களை தேர்வு செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும் விரும்புகிறேன்’’ என்றார்.
இந்தநிலையில் இசையமைப்பாளர் ராபி ஆபிரகாமுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை மடோனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். அந்த படத்தில், ‘‘சிலருடன் இருக்கும்போது மட்டும்தான் நாம் நாமாக இருக்க முடியும். அதுதான் உண்மையான சுதந்திரம். அப்படி ஒருவர் எனது வாழ்க்கையில் இருப்பது அதிர்ஷ்டம்’’ என்று பதிவிட்டுள்ளார்.
இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மடோனா செபாஸ்டியனும், ராபி ஆபிரகாமும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. எனினும் மடோனா அதனை மறுக்கவில்லை. #MadonnaSebastian
பிரேமம் படம் மூலம் மிகவும் பிரபலமான மடோனா செபஸ்டியன் அடுத்ததாக, கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் என்று கூறியிருக்கிறார். #MadonnaSebastian
சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஆர்.பிரபாகரன் தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தை இயக்க இருக்கிறார். இவர் இதற்குமுன் ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கி இருந்தார்.
தற்போது மீண்டும் சசிகுமாரை கதாநாயகனாக கொண்டு ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், தற்போது மடோனா செபஸ்டியன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மடோனா பாவாடை தாவணி அணிந்து அசல் கிராமத்துப் பெண்ணாகவே இப்படத்தில் நடிக்க இருக்கிறார். தனுஷ் இயக்கத்தில் வெளியான ப.பாண்டி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜுங்கா ஆகிய படங்களில் ஏற்கெனவே மடோனா கிராமத்து தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாயிஷா - மடோனா செபாஸ்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜுங்கா' படத்தின் விமர்சனம். #JungaReview #VijaySethupathi
கிராமத்தில் பேருந்து நடத்துநரான விஜய் சேதுபதியும் (ஜுங்கா), அந்த பேருந்தில் பயணியாக வரும் மடோனா செபாஸ்டியனும் காதலிக்கிறார்கள். இந்த நிலையில், மடோனாவின் பின்னால் சுற்றி அவளுக்கு தொல்லை கொடுக்கும் ஒருவரை, விஜய் சேதுபதி கண்டிக்கிறார். இதனால் கடுப்பாகும் அந்த நபர், அடியாட்களுடன் வந்து விஜய் சேதுபதியை அடித்துவிடுகிறார்.
தன்னை அடித்தவர்களை பழிவாங்க வேண்டும் என்று யோசிக்கும் விஜய் சேதுபதி, தனது நண்பன் யோகி பாபுவிடம் இதுபற்றி கூறி, யோசனை கேட்கிறார். தனக்கு ஒரு அரசியல்வாதியை தெரியும் என்று கூறி, விஜய் சேதுபதியின் சம்பள பணத்தை வாங்கி செலவு செய்துவிடுகிறார் யோகி பாபு. இதனால் கடுப்பாகும் விஜய் சேதுபதி, தன்னை அடித்தவர்களை தேடிச் சென்று புரட்டி எடுக்கிறார். விஜய் சேதுபதி அடிதடியில் ஈடுபட்டது அவரது அம்மாவான சரண்யா பொன்வண்ணனுக்கு தெரிய வருகிறது.
அப்பா, தாத்தாவைப் போல நீயும் டானாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத் தான் விஜய் சேதுபதியை வேறு ஊருக்கு அழைத்து வந்ததாக கூறும் சரண்யா பொன்வண்ணன், சென்னையில் விஜய் சேதுபதியின் அப்பா, தாத்தா பெரிய டான் என்றும், அவர்களுக்கு ஒரு சொந்தமாக தியேட்டர் இருந்ததாகவும் கூறுகிறார். தனது குடும்பம் டான் குடும்பம் என்பதை அறிந்து குஷியாகும் விஜய் சேதுபதி, அவர்களது திரையரங்கை மீட்பதற்காக சென்னை வருகிறார்.
சென்னையில் சிறிய, சிறிய கட்டப் பஞ்சாயத்துகளை செய்து, சென்னையில் டானாகிறார். இதனால் பல்வேறு கட்டப் பஞ்சாயத்துகள் அவரைத் தேடி வருகிறது. அவரும் அவை அனைத்தையும் முடித்து வைக்கிறார். தனது தியேட்டரை மீட்கவும் பணத்தை சேர்த்து வருகிறார்.
இது சென்னையில் இருக்கும் மற்ற டான்களுக்கு பிடிக்காமல் போக, விஜய் சேதுபதியை கொல்ல முடிவு செய்கின்றனர். அதேநேரத்தில் மற்றொரு டானான ராதாரவி விஜய் சேதுபதியை பழிவாங்க, தியேட்டரை இடித்து விட திட்டம் போடுகிறார்.
இந்த நிலையில், தியேட்டர் உரிமையாளரான சுரேஷ் மேனனை சந்தித்து, தியேட்டரை தான் வாங்கிக் கொள்வதாக விஜய் சேதுபதி கூறுகிறார். ஆனால் சுரேஷ் மேனன், விஜய் சேதுபதியை அசிங்கப்படுத்தி அனுப்ப, அவரை பழிவாங்க அவரது மகளான சாயிஷாவை கடத்த பாரிஸ் செல்கிறார் விஜய் சேதுபதி.
பாரிஸில் சாயிஷாவை சுற்றி எப்போதும் பாதுகாப்புக்கு ஆட்கள் இருக்க, சாயிஷாவை கடத்த விஜய் சேதுபதி முயற்சி செய்கிறார்.
கடைசியில், விஜய் சேதுபதி, சாயிஷாவை கடத்தினாரா? தனது தியேட்டரை கைப்பற்றினாரா? தனது காதலியான மடோனாவை திருமணம் செய்தாரா? சாயிஷாவுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
பேருந்து நடத்துநர், கஞ்ச டான், பணக்கார டான் என வித்தியாசமான கெட்-அப்புகளில், வந்து ரசிக்க வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அதிலும் கஞ்ச டான் செய்யும் அட்டகாசங்கள் ரசிகர்களிடையே கவனத்தை பெறுகிறது. யோகி பாபு காமெடியில் கலக்கியிருக்கிறார். யோகி பாபு, விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து செய்யும் அட்டகாசங்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது.
சாயிஷாவும் பணக்கார வீட்டு பெண்ணாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். விஜய் சேதுபதியிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கும் சாயிஷா, பாடல் காட்சிகளில் ரசிகர்களை தனது நடனத்தால் கட்டிப் போட்டிருக்கிறார். மடோனா செபாஸ்டியன், விஜய் சேதுபதியின் காதலியாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.
சரண்யா பொன்வண்ணன், விஜய் சேதுபதியின் பாட்டி கதாபாத்திரங்கள் ரசிகர்களை ஈர்க்கும்படியாக உள்ளது. இருவரும் திரையில் கலக்கியிருக்கிறார்கள். ராதா ரவி, சுரேஷ் மேனன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மொட்டை ராஜேந்திரனும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு இந்த படத்தை ஒரு வித்தியாசமான காமெடி படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் கோகுல். தான் ஒரு டான் குடும்பம் என்பதை அறியாத நாயகன், டானாக மாறி செய்யும் அட்டகாசங்கள் படத்தின் திரைக்கதையாக நகர்கிறது. ஒரு பக்கம் கஞ்ச டானாக வரும் விஜய் சேதுபதி, விஜய் சேதுபதிக்கு செலவு வைக்கும் யோகி பாபு என காட்சிகள் சுறுசுறுப்பை கூட்டுகின்றன. மற்றொரு பக்கம் சரண்யா பொன்வண்ணனும், பாட்டியும் செய்யும் லூட்டிகள் ரசிக்க வைத்திருக்கிறது. இரண்டாவது பாதியில் பாட்டி கலக்கியிருக்கிறது என்றே சொல்லலாம். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர்.
சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாகவே வந்திருக்கிறது. டூட்லியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்திருக்கின்றன. சண்டைக் காட்சிகளில் கேமரா விளையாடியிருக்கிறது. சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் `ஜுங்கா' பார்க்கலாம் தெம்பா. #JungaReview #VijaySethupathi
Junga Review Junga Vijay sethupathi Makkal Selvan Sayesha Saigal Madonna Sebastian Gokul Yogi Babu Siddharth Vipin Junga A Lovable Don Rajendran Radha Ravi ஜுங்கா விமர்சனம் ஜுங்கா விஜய் சேதுபதி சாயிஷா சய்கல் கோகுல் யோகி பாபு சித்தார்த் விபின் ராதா ரவி சுரேஷ் மேனன் மடோனா செபாஸ்டியன் மெட்டை ராஜேந்திரன்
மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து அடுத்ததாக கன்னட மொழி படத்தில் கால் பதிக்க இருக்கிறார் மடோனா செபஸ்டியன். #Madonna
மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் மடோனா செபஸ்டியன். தமிழில் காதலும் கடந்து போகும், கவண், ப.பாண்டி ஆகிய படங்களில் நடித்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு எனத் தொடரும் மடோனாவின் பயணம் தற்போது கன்னடத்திலும் தொடங்க உள்ளது.
கன்னடத்தில் நடிகர் சுதீப் திரைக்கதை எழுதி நடித்த கொட்டிகொபா படத்தின் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இதனால் மூன்றாம் பாகத்துக்கும் திரைக்கதை எழுதிய அவர், அந்தப் படத்தின் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
அறிமுக இயக்குனர் சிவகார்த்திக் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதமே தொடங்கி நடைபெற்றது. ஆனால் கதாநாயகி யார் என்பது மட்டும் முடிவாகாமல் இருந்த நிலையில் தற்போது மடோனா செபாஸ்டின் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
இன்று செர்பியாவின் தலைநகர் பெல்கிரேட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் மடோனா கலந்துகொள்ளவிருக்கிறார். 40 நாட்கள் தொடர்ச்சியாக இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு படத்தை வெளியிடபடக் குழு திட்டமிட்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X