search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று தாய் தற்கொலை
    X

    ஆந்திராவில் 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று தாய் தற்கொலை

    • மருந்து கடையில் கொடுக்கும் சம்பளம் போதவில்லை. இதனால் பெங்களூருக்கு சென்று அங்கு வேறு வேலை தேடிக்கொண்டு குடும்பம் நடத்தலாம் என லாவண்யாவிடம் சுப்ரமணியம் ரெட்டி தெரிவித்துள்ளார்.
    • லாவண்யா இதற்கு மறுப்பு தெரிவித்து இங்கேயே இருக்கலாம் என கணவரிடம் கூறினார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் பீலேரு அடுத்த திகுவபல்லியை சேர்ந்தவர் சுப்ரமணியம் ரெட்டி. இவரது மனைவி லாவண்யா (வயது 24). தம்பதியின் மகன் பரமேஸ்வர ரெட்டி (4), மகள் மோஷிதா (2).

    இவர்கள் மதனப்பள்ளி அடுத்த குர்ரம் கொண்டா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

    சுப்ரமணியம் ரெட்டி அங்குள்ள மருந்து கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் மருந்து கடையில் கொடுக்கும் சம்பளம் போதவில்லை. இதனால் பெங்களூருக்கு சென்று அங்கு வேறு வேலை தேடிக்கொண்டு குடும்பம் நடத்தலாம் என லாவண்யாவிடம் தெரிவித்துள்ளார்.

    இதற்கு லாவண்யா மறுப்பு தெரிவித்து இங்கேயே இருக்கலாம் என கணவரிடம் கூறினார்.

    இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுப்பிரமணியம்ரெட்டி நீ வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதால் தான் இங்கிருந்து வரமாட்டேன் என்கிறாய் என லாவண்யாவை சரமாரியாக தாக்கினார்.

    இதையடுத்து லாவண்யா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு பூதலப்பட்டில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

    கணவருடன் ஏற்பட்ட தகராறால் லாவண்யா மனம் உடைந்தார். நேற்று தனது குழந்தைகளுடன் அங்குள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். அங்குள்ள கிணற்றில் 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி விட்டு தானும் குதித்து உயிருக்கு போராடினார்.

    கிணற்றில் அதிக அளவு தண்ணீர் இருந்ததால் அப்பகுதி மக்களால் அவர்களை மீட்க முடியவில்லை. அதற்குள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

    தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரில் மூழ்கிய 3 பேரின் உடல்களை மீட்டனர்.

    இது குறித்து குர்ரம் கொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×