என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஆந்திராவில் 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று தாய் தற்கொலை
- மருந்து கடையில் கொடுக்கும் சம்பளம் போதவில்லை. இதனால் பெங்களூருக்கு சென்று அங்கு வேறு வேலை தேடிக்கொண்டு குடும்பம் நடத்தலாம் என லாவண்யாவிடம் சுப்ரமணியம் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- லாவண்யா இதற்கு மறுப்பு தெரிவித்து இங்கேயே இருக்கலாம் என கணவரிடம் கூறினார்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் பீலேரு அடுத்த திகுவபல்லியை சேர்ந்தவர் சுப்ரமணியம் ரெட்டி. இவரது மனைவி லாவண்யா (வயது 24). தம்பதியின் மகன் பரமேஸ்வர ரெட்டி (4), மகள் மோஷிதா (2).
இவர்கள் மதனப்பள்ளி அடுத்த குர்ரம் கொண்டா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.
சுப்ரமணியம் ரெட்டி அங்குள்ள மருந்து கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் மருந்து கடையில் கொடுக்கும் சம்பளம் போதவில்லை. இதனால் பெங்களூருக்கு சென்று அங்கு வேறு வேலை தேடிக்கொண்டு குடும்பம் நடத்தலாம் என லாவண்யாவிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கு லாவண்யா மறுப்பு தெரிவித்து இங்கேயே இருக்கலாம் என கணவரிடம் கூறினார்.
இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுப்பிரமணியம்ரெட்டி நீ வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதால் தான் இங்கிருந்து வரமாட்டேன் என்கிறாய் என லாவண்யாவை சரமாரியாக தாக்கினார்.
இதையடுத்து லாவண்யா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு பூதலப்பட்டில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
கணவருடன் ஏற்பட்ட தகராறால் லாவண்யா மனம் உடைந்தார். நேற்று தனது குழந்தைகளுடன் அங்குள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். அங்குள்ள கிணற்றில் 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி விட்டு தானும் குதித்து உயிருக்கு போராடினார்.
கிணற்றில் அதிக அளவு தண்ணீர் இருந்ததால் அப்பகுதி மக்களால் அவர்களை மீட்க முடியவில்லை. அதற்குள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரில் மூழ்கிய 3 பேரின் உடல்களை மீட்டனர்.
இது குறித்து குர்ரம் கொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்