என் மலர்
நீங்கள் தேடியது "கேபி முனுசாமி"
- அ.தி.மு.க. சிதைந்து கிடப்பதாக சிலர் பேசுகிறார்கள்.
- அ.தி.மு.க. வலிமையான கட்சியாக இருக்கிறது என்பதை வருகிற பாராளுமன்ற தேர்தலின் மூலம் தெரியப்படுத்துவோம்.
சென்னை:
புதுச்சேரியில் நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க. பிளவுபட்டு கிடப்பதாகவும், பா.ம.க.வுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஜெயலலிதா இல்லையென்றால் பா.ம.க. என்ற கட்சியே வெளியில் தெரிந்து இருக்காது. அ.தி.மு.க. தயவால்தான் பா.ம.க.வுக்கு அங்கீகாரம் கிடைத்தது" என்று கூறி இருந்தார்.
இதற்கு பதில் அளித்து பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் கே.பாலு நிருபர்களிடம் கூறுகையில், "அ.தி.மு.க. 4 பிரிவாக பிரிந்து இருக்கிறது என்று குழந்தைகளுக்கு கூட நன்றாக தெரியும். 1996-ம் ஆண்டு அ.தி.மு.க. பலவீனப்பட்டு கிடந்தபோது அதற்கு உயிரூட்டியதே பா.ம.க.தான்.
1998-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வுடன் கூட்டணி வைக்காவிட்டால் அ.தி.மு.க. மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கும். பா.ம.க. வுடன் கூட்டணி அமைத்தப் பின் தான் 2001-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார்" என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதில் அளித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:-
பா.ம.க.வின் கருத்துக்கு பதில் சொல்லி எங்கள் சக்தியையும், நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. அ.தி.மு.க.வின் லட்சியமே வேறு. நாங்கள் எங்கள் லட்சியத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஏற்கனவே ஜெயலலிதா கைப்பற்றியது போல 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பது தான் எங்கள் லட்சியம்.
அ.தி.மு.க. சிதைந்து கிடப்பதாக சிலர் பேசுகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. வலிமையான கட்சியாக இருக்கிறது என்பதை வருகிற பாராளுமன்ற தேர்தலின் மூலம் தெரியப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல்
- ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபடுகின்றனர்.
சென்னை:
அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு அரசியல் அரங்கில் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கட்சி தலைமைக்காக சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். தேர்தல் முடியும்வரை இரு தரப்பினரும் அமைதியாக இருப்பார்கள் என்று தொண்டர்கள் நினைத்தனர். ஆனால் இரு தரப்பினரும் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபடுகின்றனர்.
சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்வது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் கே.பி.முனுசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தார். சாதாரண தொண்டன் போன்று ஓ.பன்னீர்செல்வத்தால் உண்மையாக உழைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள கே.பி.முனுசாமி மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியதுடன், அவர் தொடர்பான ஒரு ஆடியோவை வெளியிட்டார். அதில், கே.பி.முனுசாமியிடம், ரூ.50 லட்சம் இப்போது ரெடி, 50 லட்சம் பின்னர் தருகிறேன் என கிருஷ்ணமூர்த்தி பேசுகிறார்.
இதுபற்றி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு கே.பி.முனுசாமி என்னிடம் 1 கோடி ரூபாய் கேட்டார். பணம் கொடுப்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வேண்டாம் என்று கே.பி.முனுசாமி கூறினார். என்னைப்போல் பலர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.
ஓபிஎஸ் அண்ணனை தரம் தாழ்ந்து பேசுவதால் அவர் பேசிய ஆடியோவை தற்போது வெளியிடுகிறேன். கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவன்.
அவர் பணம் சம்பாதிப்பதற்காகவே எடப்பாடி அணியில் இருக்கிறார். கே.பி.முனுசாமிக்கு பதவி கொடுத்ததே ஓ.பன்னீர்செல்வம்தான். நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கு அவர் பணம் கேட்கிறார். தொண்டர்களிடமும் பணம் வசூலிக்கிறார்.
இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
- கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவதாக கிருஷ்ணமூர்த்தி எச்சரித்தார்.
- கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டது எனது குரல்தான் என கே.பி.முனுசாமி தெரிவித்தார்
சென்னை:
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு கே.பி.முனுசாமி 1 கோடி ரூபாய் கேட்டதாக கூறியதுடன், பணம் கேட்பது தொடர்பான ஆடியோவை வெளியிட்டார்.
ஓபிஎஸ் அண்ணனை தரம் தாழ்ந்து பேசுவதால் அவர் பேசிய ஆடியோவை தற்போது வெளியிடுகிறேன். கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவன் என்றும் கிருஷ்ணமூர்த்தி எச்சரித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி விளக்கம் அளித்துள்ள கே.பி.முனுசாமி, "கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டது எனது குரல்தான்" என்றார். ஆனால் தேர்தல் செலவுக்காக கடனாக பணம் கேட்டதை தவறாக திரித்து கூறுவதாகவும், ஆடியோ, வீடியோ எதை வெளியிட்டாலும் பயப்படப் போவதில்லை என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
- சிலர் தர்ம யுத்தம் நடத்தினர். ஆனால் உண்மையாக தர்மயுத்தம் நடத்தி எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார்.
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ன செய்ய நினைத்தார்களோ அதை எடப்பாடி செய்து காட்டுவார்.
ஈரோடு:
அ.தி.மு.க. சார்பில் ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு செல்லும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடுகின்றனர்.
ஈரோட்டில் அ.தி.மு.க. தேர்தல் பணிமனையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, கருப்பணன், கே.வி.ராமலிங்கம், நத்தம் விஸ்வநாதன் அக்ரிகிருஷ்ணமூர்த்தி, கோகுல் இந்திரா, கே.பி.முனுசாமி உட்பட பலர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பின்னர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
உச்சநீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது. அ.தி.மு.க. மாபெரும் இயக்கம் எம்.ஜி.ஆர். ஆல் தோற்றுவிக்கப்பட்டு ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இயக்கம். 31 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளோம். அப்படிப்பட்ட இயக்கத்தை போராடி எடப்பாடி பழனிசாமி இன்று மீட்டு உள்ளார். இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் மத்தியில் சட்டப் போராட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமி மீட்டு உள்ளார். ஒன்றரை கோடி தொண்டர்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
சிலர் தர்ம யுத்தம் நடத்தினர். ஆனால் உண்மையாக தர்மயுத்தம் நடத்தி எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ன செய்ய நினைத்தார்களோ அதை எடப்பாடி செய்து காட்டுவார். இந்த தீர்ப்பு நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் நமது வேட்பாளர் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓ.பி.எஸ். மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் முனுசாமி, நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்திருப்பது என்றால் ஓ.பி.எஸ். நீக்கப்பட்டது செல்லும் என்று தானே அர்த்தம். விரைவில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டு முறைப்படி எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றார்.
- தி.மு.க. ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது.
- ஆயிரம் யூனிட்டுக்கு எங்கள் ஆட்சியில் ரூ.6.20 ஆனால் இப்போது ரூ.11. இதனால் மாதம் ரூ.4500 கூடுதல் செலவு.
சென்னை:
சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கந்தன் சாவடியில் நடந்தது.
இதில் அ.தி.மு.க. துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது ஆட்சி, மக்களுக்கான ஆட்சியாக இருந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது.
தேர்தலின்போது சொன்னது என்ன? இப்போது செய்வது என்ன? மாதம் ஒருமுறை மின் கட்டணம் அளவீடு செய்யப்படும். இதன்மூலம் ஒரு குடும்பத்துக்கு ரூ.6 ஆயிரம் லாபம் கிடைக்கும் என்றார் மு.க. ஸ்டாலின்.
ஆனால் இப்போது 2 மாதத்துக்கு ஒருமுறை அளவீடு.
ஆயிரம் யூனிட்டுக்கு எங்கள் ஆட்சியில் ரூ.6.20 ஆனால் இப்போது ரூ.11. இதனால் மாதம் ரூ.4500 கூடுதல் செலவு.
பால் விலை உயர்த்தியதையும் சேர்த்தால் மாதம் ரூ.6 ஆயிரம் மக்கள் தலையில் சுமத்தி இருக்கிறார்கள்.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்றார்கள் தந்தார்களா? இப்படி ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? உண்மையான திராவிட மாடல் அ.தி.மு.க. ஆட்சிதான்.
தேர்தல் நேரத்தில் தேசிய கட்சிகளாக இருந்தாலும் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய கே.பி.கந்தன் ஒரு காலத்தில் தண்ணீர் கிடைக்காது காய்ந்து போன கந்தன்சாவடிக்கு அம்மா ஆட்சியில் நெமிலி குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தவர் கே.பி.முனுசாமி.
அவர் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது இந்த பகுதியின் அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி தந்தார் என்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, தலைமை கழக பேச்சாளர் வண்ணை கணபதி, பெரும்பாக்கம் ராஜசேகர், சி.மணிமாறன் எம்.எம்.பகீம், சென்னை மாநகராட்சி கழக குழு தலைவர் கே.பி.கே.சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எம்.வெங்கடேசன் நன்றி கூறினார்.
- மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார்.
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.
சென்னை:
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார். அந்த அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் பெற்று மாவட்ட அளவில் இருக்கின்ற மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் செயல்படக்கூடிய உத்வேகத்தை அவர்களுக்கு அளித்திருக்கிறார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார். தேர்தலில் கடுமையாக பாடுபட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள், தலைமை நிலைய செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.
கூட்டணி கட்சிகளுக்குள் சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் தேசிய நலன் கருதி இந்த கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்று முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். அதன்படி அவர் செயல்படுவார். அவருக்கு பின்னால் நாங்கள் இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிருஷ்ணகிரி அ.தி.மு.க கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
- எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றன.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அ.தி.மு.க கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விண்ணப்ப படிவத்தை மாவட்டம், பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி, ஒன்றிய நிர்வாகிகளிடம் வழங்கினார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட புதிய உறுப்பினர்களின் சேர்க்கை விண்ணப்ப படிவம் இன்று வழங்கப்பட்டது. ஏற்கனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இருந்து அதிகளவில் உறுப்பினர்களின் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் தற்போது பொதுச்செயலாளராக பதவி ஏற்றி இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றன.
இதற்கான உறுப்பினர் அட்டைகள் விரைவில் வழங்கப்படும். அதில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா மற்றும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் உருவ படம் இடம் பெற்றிருக்கும்.
ஸ்டெர்லைட் குறித்து கவர்னர் கூறிய கருத்து வேதனை அளிக்கிறது. உயர்ந்த பதவியில் இருக்கக்கூடியவர்கள் பொது இடங்களில் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவது அழகல்ல. நமது நாட்டின் பிரதமர் உலகளவில் உள்ள தலைவர்கள் எல்லாம் போற்றக்கூடிய ஒரு தலைவராக திகழ்கிறார். அப்படிக்கு இருக்கும் பட்சத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு வெளிநாட்டின் சதியோ, வெளிநாட்டின் தலையிடோ இருக்க வாய்ப்பு இல்லை. இதனை பிரதமர் மோடி ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். அவர் நம் நாட்டின் தலைசிறந்த பிரதமர் ஆவார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுமா? என்பது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து ஒவ்வொரும் வெவ்வேறான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து எங்கள் கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சில ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் எங்கள் நிலைப்பாடு குறுத்து தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
- தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்தியா கூட்டணிக்கு இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியவில்லை.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் இன்று காலை அ.தி.மு.க. துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் எவ்வித மாற்றமும் இல்லை. சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக பா.ஜக.வை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர்கள்.
அ.தி.மு.க. தலைவர்கள் அண்ணா, ஜெயலலிதா ஆகியோர் குறித்து தமிழக பா.ஜ.க. தலைமை உண்மைக்கு புறம்பாக பேசி, அவதூறாக விமர்சனம் செய்து வருவது, 2 கோடி அ.தி.மு.க. தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த முடிவை கழக செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அது தொண்டர்களின் உணர்வு அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும்.
சில ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் எங்கள் நிலைப்பாடு குறுத்து தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். ஊடகங்களில் அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கும் என விமர்சனம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் இந்த முடிவு நாடகம் என்று சொல்கிறார்கள். தேர்தல் நேரத்தில் உண்மை தெரியவரும். அது போன்ற விமர்சனங்களை தவிர்க்கவே இந்த பத்திரிகையாளர் சந்திப்பு.
சிலர் தேர்தல் வரும்போது உண்மைத் தெரியும் என்று எங்கள் முடிவு குறித்து விமர்சனம் செய்கிறார்கள். அவர்கள் தேர்தல் பயத்தின் காரணமாக இவ்வாறு பேசுகிறார்கள். அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. 30 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டுள்ளது. இன்று தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக விளங்கி வருகிறது.
அண்ணா குறித்து விமர்சனம் வைக்கப்படும்போது அவரின் பெயரை கட்சியின் பெயராக வைத்து இருக்கும் இயக்கத்தால் எப்படி அதனை சகித்துக் கொள்ள முடியும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகுகிறது. 2024 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். நாங்கள் ஒரு போதும் ஒரு கட்சியின் மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்று கூற மாட்டோம்.
அண்ணாமலையை மாற்ற கோருவது எங்கள் நோக்கமல்ல. இனி ஒருபோதும் பா.ஜ.க. உடன் கூட்டணி என்பதே கிடையாது. அது 2024 பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி 2026 சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி கூட்டணி கிடையாது அ.தி.மு.க. சார்பில் உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்தியா கூட்டணிக்கு இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியவில்லை. தமிழக மக்களின் நலன், உரிமைகள் சார்ந்தே 2024-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை அ.தி.மு.க. பொது செயலாளர் பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் சந்திப்போம்.
இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று ஸ்டாலினால் சொல்ல முடியுமா? காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி சேர்ந்து உள்ளனர். மிசாவை கொண்டு வந்தவர் இந்திரா காந்தி அப்போது சிறை சென்று வந்த ஸ்டாலினை மிசா வீரன் மாவீரன் என்றார்கள்.
காங்கிரசை முன்னாள் முதல்வர் கருணாநிதியும், ஸ்டாலினும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள் அவர்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளார்கள்.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிப்போம். நாங்கள் மக்கள் பிரச்சனையை வைத்தே பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம். அ.தி.மு.க.வின் குரல் மக்களுக்காக ஒலிக்கும் திராவிட மாடலை உருவாக்கிவர் அண்ணா என்பதை ஸ்டாலின் மறந்து விட்டு பேசி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்கள் பிரச்சனையை வைத்தே பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறி இருந்தார்.
- முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு, பா.ஜ.க. முன்னாள் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளார்.
சென்னை:
2024 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். அண்ணா குறுகிய காலத்தில் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்தவர். நாங்கள் ஒரு போதும் ஒரு கட்சியின் மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்று கூற மாட்டோம்.
அண்ணாமலையை மாற்ற கோருவது எங்கள் நோக்கமல்ல. இனி ஒரு போதும் பா.ஜ.க. உடன் கூட்டணி என்பதே கிடையாது.
2026ம் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிப்போம். நாங்கள் மக்கள் பிரச்சனையை வைத்தே பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறி இருந்தார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு, பா.ஜ.க. முன்னாள் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளார். அவரது பதிவில், "புனிதமான திருவள்ளுவர் மண்ணில் தாமரை பெரும் வெற்றி பெறும்" என்று கூறி உள்ளார்.
- சுய லாபத்திற்கு கொள்கையை விற்று ஆதாயம் தேடும் இரு தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து உள்ளனர்.
- தமிழகத்தில் எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்று.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் அ.தி.முக. கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை அ.தி.முக. இணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ.க. முயன்ற காரணத்தால் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது என்று அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளது உண்மையில்லை. அண்ணாமலை முதல்வர் வேட்பாளர் என்று பா.ஜ.க. ஒருபோதும் சொல்லவில்லை. அப்படி சொல்வது அபத்தமானது.
30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. ஆட்சி செய்து பல்வேறு திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கி உள்ள நிலையில் பா.ஜ.க. தேசிய தலைமை எப்படி தமிழகத்தில் பா.ஜ.க. முதலமைச்சர் பதவி வேண்டும் என கேட்பார்கள் கேட்கமாட்டார்கள் அப்படி எல்லாம் பேசி அ.திமு.க என்ற கட்சியை பலவீனப்படுத்த முடியாது.
பண்ருட்டி ராமச்சந்திரன் வயதுக்கு ஏற்றவாறு பேசவேண்டும், பதிலுக்கு நாங்களும் பேசலாம் ஆனால் எங்களுக்கு நாகரிகம் உள்ளது. காவிரி பிரச்சனையில் பண்ருட்டி ராமசந்திரன் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. என சென்ற இடங்களில் எங்கும் விசுவாசமாக இல்லை. நம்பிக்கை துரோகத்துக்கு பெயர் போன பண்ருட்டி ராமச்சந்திரன் நம்பிக்கை துரோகியுடன் அமர்ந்துகொண்டு அவரை நம்பிக்கை உரியவர் என கூறுகிறார். அ.தி.மு.க.வை கபளீகரம் செய்த சசிகலா இந்த இயக்கத்தில் இருக்கக்கூடாது என நான் போராடினேன்.
அந்த சமயம் தர்ம யுத்தம் செய்கிறேன் என என்னுடன் வந்து சசிகலாவை விமர்சனம் செய்தார் ஓபிஎஸ். தற்போது கால சூழல் மாறிய உடன் சசிகலாவை தலைவியாக ஏற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார். தன்னுடைய சுய லாபத்திற்கு கொள்கையை விற்று ஆதாயம் தேடும் இரு தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து உள்ளனர். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி நதிநீர் பிரச்சினை நீண்டகாலமாக உள்ள பிரச்சினை. இதில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை எனில் அடுத்த கட்டமாக அ.தி.மு.க. போராட்டம் நடத்துவது குறித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.
தமிழகத்தில் எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்று. அதே நேரத்தில் தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வரமுடியாது. சமுக வலைத்தளங்களில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து தவறாக விமர்சனம் செய்கிறார்கள். இதை பார்த்து கொண்டு அ.தி.மு.க., சும்மா இருக்காது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிந்தது.
- அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பா.ஜனதா துணை தலைவர் வி.பி.துரைசாமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை:
அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பா.ஜனதா துணை தலைவர் வி.பி.துரைசாமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்ணாமலை டெல்லியில் இருக்கும் நிலையில் நிர்வாகிகள் தனியாக ஆலோசனை நடத்தியதால் டெல்லி தலைமை மீண்டும் கூட்டணியை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்தது.
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிந்தது. இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்ற தலைமையின் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி.
கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக பா.ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது பற்றி கே.பி. முனுசாமியை தொடர்பு கொண்டு கேட்டபோது 'உறுதியாக அப்படி எதுவும் நடக்கவில்லை' என்றார்.
- எடப்பாடி பழனிசாமி மறைந்த பூங்காவனத்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
- முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
காவேரிப்பட்டிணம்:
கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தந்தை மறைவையொட்டி எடப்பாடி பழனிசாமி காவேரிப்பட்டிணத்தில் உள்ள அவரது இல்லத்தில் கே.பி முனுசாமி சந்தித்து ஆறுதல் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. அவருடைய தந்தை பூங்காவனம் (வயது103) கடந்த 18-ந் தேதி வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார்.
இதைத்தொடர்ந்து இன்று காவேரிப்பட்டிணத்திற்கு வருகை புரிந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, மறைந்த பூங்காவனத்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், பாலகிருஷ்ணரெட்டி, அ.தி.மு.க. கொறடா எஸ்.பி. வேலுமணி, உள்ளிட்டோரும் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஊத்தங்கரை எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்று உள்ளனர்.