search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kp munusamy"

    • இந்தியா இன்று பல்வேறு வகைகளில் உலகளவில் முன்னேறி வருகிறது.
    • உண்மையான மக்கள் செல்வாக்கு உள்ள இயக்கம் எது?

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் வருகிற 11-ந் தேதி , அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், மாற்று கட்சியினர் அ.தி.மு.க வில் இணையும் விழா நடைபெறுகிறது.

    இதில் கலந்து கொள்ள வரும் எடப்பாடி பழனிசாமிக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், ஓசூரில் நேற்று நடைபெற்றது.

    இதில், கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசியதாவது:-

    இந்திய திருநாட்டின் பாராளுமன்ற தேர்தலை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏனென்று சொன்னால் இந்தியா இன்று பல்வேறு வகைகளில் உலகளவில் முன்னேறி வருகிறது. இந்த சூழலில் இந்தியாவில் அடுத்த பிரதமர் யார் வரவுள்ளார் ? என உலக தலைவர்கள் எல்லோரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், தமிழகத்தை பொறுத்த வரையில் யார் உண்மையான மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர், உண்மையான மக்கள் செல்வாக்கு உள்ள இயக்கம் எது ? என்பதை தெளிவுபடுத்துகிற தேர்தலாக, இந்த தேர்தல் உள்ளது.

    சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, நாம் எதிர்நோக்குகின்ற பாராளுமன்ற பொது தேர்தல், இந்த பொதுத் தேர்தலில் இந்திய அளவில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒரு பக்கம் நிற்கிறது. அதுபோல தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் ஒரு கூட்டணி ஒரு பக்கமும், இந்த இரண்டு கூட்டணிகளையும் தவிர்த்து தமிழகத்தின் நலனில் அக்கறை உள்ள தலைவர்களை பிரதமராக தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பினை தாருங்கள், என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலை மையில் நாம் ஒரு மெகா கூட்டணி அமைத்து மக்களை சந்திக்க உள்ளோம், இவ்வாறு அவர் கூட்டத்தில் பேசினார்.

      கிருஷ்ணகிரி:

      கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன், மருமகள் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவி மீது வன்கொடுமை செய்து கொடூர தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

      இதற்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே. அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர அ.தி.மு.க. செயலாளர் கேசவன் வரவேற்றார். ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

      ஆர்ப்பாட்டத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியதாவது:-


       கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி செயல் இழந்த அரசாக உள்ளது. சட்டம்-ஒழுங்கு முடங்கி சீர் கெட்டுள்ளது. தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் ஆகியோர் மாணவியை வேலைக்கு அமர்த்தி வன்கொடுமை செய்துள்ளனர். போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளரின் கண்டனத்திற்கு பிறகே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

      கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும் தொடர்ந்து கொலைகள் நடந்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு ஆட்சியாளர்களும், கடமை தவறிய அதிகாரிகளும் காரணம்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், முனிவெங்கடப்பன், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார், ஒன்றிய குழு தலைவர் அம்சாராஜன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு, முன்னாள் நகராட்சி தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், சைலேஷ் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      தொடர்ந்து எம்.ஜி.ஆரை அவதூறாக பேசியதாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் உருவ பொம்மையை அ.தி.மு.க.வினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-


      தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள், தங்களுக்குள் யார் பெரியவர்கள் என மல்லுக்கட்டி நிற்கின்றனர். இதனால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். மாநில அரசு நிதியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தோம். அதை கூட தி.மு.க., அரசால் செயல்படுத்த முடியவில்லை.

      தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது தந்தை கருணாநிதி பெயரை, சிலைகளை எங்கெல்லாம் வைக்கமுடியுமோ அதை செய்கிறார். மாடு பிடி அரங்கில், ஏறுதழுவும் சிலையில் கூட தனது முகம் போல வைத்துள்ளார். கோயம்பேடு பஸ் நிலையத்தை மாற்ற பார்க்கிறார். அரசியலில் தங்களை எதிர்த்தவர்கள் பெயர் எங்கும் இருக்க கூடாது என நினைக்கிறார். தமிழ்நாடு என்பதை கருணாநிதி நாடு என மாற்ற முயற்சிக்கிறார். வருகிற 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று வரும்போது, கருணாநிதி என்ற பெயரே இல்லாமல் செய்து விடுவோம்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • ஜெயலலிதா தான் பா.ஜ.க.வை தென் மாநிலத்துக்கு அழைத்து வந்து கூட்டணி வைத்தார்.
      • அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தி பா.ஜ.க.வை பின்னிலைப்படுத்தி பேசி வருகிறார்.

      கிருஷ்ணகிரி:

      கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து பணிமனையில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா தொழிற்சங்க அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்

      பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கே.பி.முனுசாமி, அ.தி.மு.க. சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டோம். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமைத்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்த பின் அ.தி.மு.க எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற தகவலை வழங்குவோம் என தெரிவித்தார்.

      தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. ஒரு எம்.எல்.ஏ.வின் மகனும், மருமகளும் மோசமான செயலில் ஈடுபட்டார்கள் அதற்கு அடுத்ததாக பத்திரிகையாளர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். காவல்துறைக்கு தகவல் தெரிவித்தோம். காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து தான் அ.தி.மு.க பிப்ரவரி 1-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

      பா.ஜ.க தமிழகத்தில் 39 இடங்களில் வெற்றி பெறும் என அண்ணாமலை தெரிவித்த நிலையில் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தேர்தல் முடிந்த பின் மக்கள் வெளிப்படுத்துவார்கள். அதன் பின் அண்ணாமலை அதை உணர்வார். அவர் என் மண், என் மக்கள் என்பதை விட்டு விட்டு சென்னை கமலாலயத்தில் அமர்ந்துகொண்டு பேசுவது போல அவர் செல்லும் இடங்களில் பேசி வருகிறார்.

      மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி எங்கள் வீடு என பேசி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும் போது அவர் படிக்கின்ற மாணவராக இருந்து இருப்பார். ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருப்பவர் வரலாற்றை பிழையோடு கூறக்கூடாது. 1998 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கட்சி வட மாநிலத்தில் தான் இருந்தது. தமிழகத்தில் பா.ஜ.க கிடையாது. ஜெயலலிதா தான் பா.ஜ.க.வை தென் மாநிலத்துக்கு அழைத்து வந்து கூட்டணி வைத்தார். வடமாநிலத்தில் மட்டும் இருந்த பா.ஜ.க.வை தென்மாநிலத்தில் ஜெயலலிதா தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழருக்கான உரிமையை தர மறுத்ததால் கூட்டணியிலிருந்து வெளியேறினார். அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தி பா.ஜ.க.வை பின்னிலைப்படுத்தி பேசி வருகிறார். அவர் அரசியல் வரலாறு தெரியாமல் தலை சிறந்த தலைவர் நரேந்திர மோடி என கூறி அவரது நற்பெயரை சம்பாதிக்க முயற்சி செய்கிறார்.

      அண்ணாமலை வாஜ்பாய் பற்றி பேசுவது இல்லை. அண்ணாமலை அவர் கட்சினுடைய தலைவர்களை கலங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். பிரதமர் இதை அறிந்து அவருடைய பேச்சை கட்டுப்படுத்த உத்தரவு தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ராமர் கோவிலை பொருத்தவரை ராமர் அனைவருக்கும் தெய்வம் அந்த தெய்வத்தை யாராவது ஏமாற்றினால் அந்த தெய்வம் சும்மா இருக்காது.

      இவ்வாறு அவர் பேசினார்.

      • அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிந்தது.
      • அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பா.ஜனதா துணை தலைவர் வி.பி.துரைசாமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

      சென்னை:

      அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பா.ஜனதா துணை தலைவர் வி.பி.துரைசாமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

      அண்ணாமலை டெல்லியில் இருக்கும் நிலையில் நிர்வாகிகள் தனியாக ஆலோசனை நடத்தியதால் டெல்லி தலைமை மீண்டும் கூட்டணியை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்தது.

      அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிந்தது. இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்ற தலைமையின் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி.

      கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக பா.ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது பற்றி கே.பி. முனுசாமியை தொடர்பு கொண்டு கேட்டபோது 'உறுதியாக அப்படி எதுவும் நடக்கவில்லை' என்றார்.

      • சுய லாபத்திற்கு கொள்கையை விற்று ஆதாயம் தேடும் இரு தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து உள்ளனர்.
      • தமிழகத்தில் எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்று.

      கிருஷ்ணகிரி:

      கிருஷ்ணகிரியில் அ.தி.முக. கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை அ.தி.முக. இணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

      அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ.க. முயன்ற காரணத்தால் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது என்று அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளது உண்மையில்லை. அண்ணாமலை முதல்வர் வேட்பாளர் என்று பா.ஜ.க. ஒருபோதும் சொல்லவில்லை. அப்படி சொல்வது அபத்தமானது.

      30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. ஆட்சி செய்து பல்வேறு திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கி உள்ள நிலையில் பா.ஜ.க. தேசிய தலைமை எப்படி தமிழகத்தில் பா.ஜ.க. முதலமைச்சர் பதவி வேண்டும் என கேட்பார்கள் கேட்கமாட்டார்கள் அப்படி எல்லாம் பேசி அ.திமு.க என்ற கட்சியை பலவீனப்படுத்த முடியாது.

      பண்ருட்டி ராமச்சந்திரன் வயதுக்கு ஏற்றவாறு பேசவேண்டும், பதிலுக்கு நாங்களும் பேசலாம் ஆனால் எங்களுக்கு நாகரிகம் உள்ளது. காவிரி பிரச்சனையில் பண்ருட்டி ராமசந்திரன் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. என சென்ற இடங்களில் எங்கும் விசுவாசமாக இல்லை. நம்பிக்கை துரோகத்துக்கு பெயர் போன பண்ருட்டி ராமச்சந்திரன் நம்பிக்கை துரோகியுடன் அமர்ந்துகொண்டு அவரை நம்பிக்கை உரியவர் என கூறுகிறார். அ.தி.மு.க.வை கபளீகரம் செய்த சசிகலா இந்த இயக்கத்தில் இருக்கக்கூடாது என நான் போராடினேன்.

      அந்த சமயம் தர்ம யுத்தம் செய்கிறேன் என என்னுடன் வந்து சசிகலாவை விமர்சனம் செய்தார் ஓபிஎஸ். தற்போது கால சூழல் மாறிய உடன் சசிகலாவை தலைவியாக ஏற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார். தன்னுடைய சுய லாபத்திற்கு கொள்கையை விற்று ஆதாயம் தேடும் இரு தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து உள்ளனர். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      காவிரி நதிநீர் பிரச்சினை நீண்டகாலமாக உள்ள பிரச்சினை. இதில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை எனில் அடுத்த கட்டமாக அ.தி.மு.க. போராட்டம் நடத்துவது குறித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.

      தமிழகத்தில் எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்று. அதே நேரத்தில் தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வரமுடியாது. சமுக வலைத்தளங்களில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து தவறாக விமர்சனம் செய்கிறார்கள். இதை பார்த்து கொண்டு அ.தி.மு.க., சும்மா இருக்காது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • மக்கள் பிரச்சனையை வைத்தே பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறி இருந்தார்.
      • முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு, பா.ஜ.க. முன்னாள் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளார்.

      சென்னை:

      2024 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். அண்ணா குறுகிய காலத்தில் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்தவர். நாங்கள் ஒரு போதும் ஒரு கட்சியின் மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்று கூற மாட்டோம்.

      அண்ணாமலையை மாற்ற கோருவது எங்கள் நோக்கமல்ல. இனி ஒரு போதும் பா.ஜ.க. உடன் கூட்டணி என்பதே கிடையாது.

      2026ம் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிப்போம். நாங்கள் மக்கள் பிரச்சனையை வைத்தே பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறி இருந்தார்.

      இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு, பா.ஜ.க. முன்னாள் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளார். அவரது பதிவில், "புனிதமான திருவள்ளுவர் மண்ணில் தாமரை பெரும் வெற்றி பெறும்" என்று கூறி உள்ளார்.

      • சில ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் எங்கள் நிலைப்பாடு குறுத்து தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
      • தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்தியா கூட்டணிக்கு இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியவில்லை.

      கிருஷ்ணகிரி:

      கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் இன்று காலை அ.தி.மு.க. துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

      தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் எவ்வித மாற்றமும் இல்லை. சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக பா.ஜக.வை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர்கள்.

      அ.தி.மு.க. தலைவர்கள் அண்ணா, ஜெயலலிதா ஆகியோர் குறித்து தமிழக பா.ஜ.க. தலைமை உண்மைக்கு புறம்பாக பேசி, அவதூறாக விமர்சனம் செய்து வருவது, 2 கோடி அ.தி.மு.க. தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த முடிவை கழக செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அது தொண்டர்களின் உணர்வு அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

      சில ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் எங்கள் நிலைப்பாடு குறுத்து தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். ஊடகங்களில் அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கும் என விமர்சனம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் இந்த முடிவு நாடகம் என்று சொல்கிறார்கள். தேர்தல் நேரத்தில் உண்மை தெரியவரும். அது போன்ற விமர்சனங்களை தவிர்க்கவே இந்த பத்திரிகையாளர் சந்திப்பு.

      சிலர் தேர்தல் வரும்போது உண்மைத் தெரியும் என்று எங்கள் முடிவு குறித்து விமர்சனம் செய்கிறார்கள். அவர்கள் தேர்தல் பயத்தின் காரணமாக இவ்வாறு பேசுகிறார்கள். அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. 30 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டுள்ளது. இன்று தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக விளங்கி வருகிறது.

      அண்ணா குறித்து விமர்சனம் வைக்கப்படும்போது அவரின் பெயரை கட்சியின் பெயராக வைத்து இருக்கும் இயக்கத்தால் எப்படி அதனை சகித்துக் கொள்ள முடியும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகுகிறது. 2024 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். நாங்கள் ஒரு போதும் ஒரு கட்சியின் மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்று கூற மாட்டோம்.

      அண்ணாமலையை மாற்ற கோருவது எங்கள் நோக்கமல்ல. இனி ஒருபோதும் பா.ஜ.க. உடன் கூட்டணி என்பதே கிடையாது. அது 2024 பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி 2026 சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி கூட்டணி கிடையாது அ.தி.மு.க. சார்பில் உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.

      தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்தியா கூட்டணிக்கு இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியவில்லை. தமிழக மக்களின் நலன், உரிமைகள் சார்ந்தே 2024-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை அ.தி.மு.க. பொது செயலாளர் பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் சந்திப்போம்.

      இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று ஸ்டாலினால் சொல்ல முடியுமா? காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி சேர்ந்து உள்ளனர். மிசாவை கொண்டு வந்தவர் இந்திரா காந்தி அப்போது சிறை சென்று வந்த ஸ்டாலினை மிசா வீரன் மாவீரன் என்றார்கள்.

      காங்கிரசை முன்னாள் முதல்வர் கருணாநிதியும், ஸ்டாலினும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள் அவர்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளார்கள்.

      2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிப்போம். நாங்கள் மக்கள் பிரச்சனையை வைத்தே பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம். அ.தி.மு.க.வின் குரல் மக்களுக்காக ஒலிக்கும் திராவிட மாடலை உருவாக்கிவர் அண்ணா என்பதை ஸ்டாலின் மறந்து விட்டு பேசி வருகிறார்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார்.
      • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

      சென்னை:

      அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

      மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார். அந்த அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் பெற்று மாவட்ட அளவில் இருக்கின்ற மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் செயல்படக்கூடிய உத்வேகத்தை அவர்களுக்கு அளித்திருக்கிறார்.

      ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார். தேர்தலில் கடுமையாக பாடுபட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள், தலைமை நிலைய செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

      கூட்டணி கட்சிகளுக்குள் சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் தேசிய நலன் கருதி இந்த கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்று முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். அதன்படி அவர் செயல்படுவார். அவருக்கு பின்னால் நாங்கள் இருப்போம்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • சிலர் தர்ம யுத்தம் நடத்தினர். ஆனால் உண்மையாக தர்மயுத்தம் நடத்தி எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார்.
      • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ன செய்ய நினைத்தார்களோ அதை எடப்பாடி செய்து காட்டுவார்.

      ஈரோடு:

      அ.தி.மு.க. சார்பில் ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு செல்லும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடுகின்றனர்.

      ஈரோட்டில் அ.தி.மு.க. தேர்தல் பணிமனையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, கருப்பணன், கே.வி.ராமலிங்கம், நத்தம் விஸ்வநாதன் அக்ரிகிருஷ்ணமூர்த்தி, கோகுல் இந்திரா, கே.பி.முனுசாமி உட்பட பலர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

      பின்னர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

      உச்சநீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது. அ.தி.மு.க. மாபெரும் இயக்கம் எம்.ஜி.ஆர். ஆல் தோற்றுவிக்கப்பட்டு ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இயக்கம். 31 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளோம். அப்படிப்பட்ட இயக்கத்தை போராடி எடப்பாடி பழனிசாமி இன்று மீட்டு உள்ளார். இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் மத்தியில் சட்டப் போராட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமி மீட்டு உள்ளார். ஒன்றரை கோடி தொண்டர்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

      சிலர் தர்ம யுத்தம் நடத்தினர். ஆனால் உண்மையாக தர்மயுத்தம் நடத்தி எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ன செய்ய நினைத்தார்களோ அதை எடப்பாடி செய்து காட்டுவார். இந்த தீர்ப்பு நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் நமது வேட்பாளர் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      ஓ.பி.எஸ். மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் முனுசாமி, நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்திருப்பது என்றால் ஓ.பி.எஸ். நீக்கப்பட்டது செல்லும் என்று தானே அர்த்தம். விரைவில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டு முறைப்படி எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றார்.

      • கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவதாக கிருஷ்ணமூர்த்தி எச்சரித்தார்.
      • கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டது எனது குரல்தான் என கே.பி.முனுசாமி தெரிவித்தார்

      சென்னை:

      ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு கே.பி.முனுசாமி 1 கோடி ரூபாய் கேட்டதாக கூறியதுடன், பணம் கேட்பது தொடர்பான ஆடியோவை வெளியிட்டார்.

      ஓபிஎஸ் அண்ணனை தரம் தாழ்ந்து பேசுவதால் அவர் பேசிய ஆடியோவை தற்போது வெளியிடுகிறேன். கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவன் என்றும் கிருஷ்ணமூர்த்தி எச்சரித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      இதுபற்றி விளக்கம் அளித்துள்ள கே.பி.முனுசாமி, "கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டது எனது குரல்தான்" என்றார். ஆனால் தேர்தல் செலவுக்காக கடனாக பணம் கேட்டதை தவறாக திரித்து கூறுவதாகவும், ஆடியோ, வீடியோ எதை வெளியிட்டாலும் பயப்படப் போவதில்லை என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

      • கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல்
      • ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபடுகின்றனர்.

      சென்னை:

      அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு அரசியல் அரங்கில் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கட்சி தலைமைக்காக சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

      இதற்கிடையே பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். தேர்தல் முடியும்வரை இரு தரப்பினரும் அமைதியாக இருப்பார்கள் என்று தொண்டர்கள் நினைத்தனர். ஆனால் இரு தரப்பினரும் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபடுகின்றனர்.

      சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்வது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் கே.பி.முனுசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தார். சாதாரண தொண்டன் போன்று ஓ.பன்னீர்செல்வத்தால் உண்மையாக உழைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

      இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள கே.பி.முனுசாமி மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியதுடன், அவர் தொடர்பான ஒரு ஆடியோவை வெளியிட்டார். அதில், கே.பி.முனுசாமியிடம், ரூ.50 லட்சம் இப்போது ரெடி, 50 லட்சம் பின்னர் தருகிறேன் என கிருஷ்ணமூர்த்தி பேசுகிறார்.

      இதுபற்றி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

      2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு கே.பி.முனுசாமி என்னிடம் 1 கோடி ரூபாய் கேட்டார். பணம் கொடுப்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வேண்டாம் என்று கே.பி.முனுசாமி கூறினார். என்னைப்போல் பலர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.

      ஓபிஎஸ் அண்ணனை தரம் தாழ்ந்து பேசுவதால் அவர் பேசிய ஆடியோவை தற்போது வெளியிடுகிறேன். கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவன்.

      அவர் பணம் சம்பாதிப்பதற்காகவே எடப்பாடி அணியில் இருக்கிறார். கே.பி.முனுசாமிக்கு பதவி கொடுத்ததே ஓ.பன்னீர்செல்வம்தான். நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கு அவர் பணம் கேட்கிறார். தொண்டர்களிடமும் பணம் வசூலிக்கிறார்.

      இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • அ.தி.மு.க. சிதைந்து கிடப்பதாக சிலர் பேசுகிறார்கள்.
      • அ.தி.மு.க. வலிமையான கட்சியாக இருக்கிறது என்பதை வருகிற பாராளுமன்ற தேர்தலின் மூலம் தெரியப்படுத்துவோம்.

      சென்னை:

      புதுச்சேரியில் நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க. பிளவுபட்டு கிடப்பதாகவும், பா.ம.க.வுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

      இதற்கு கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஜெயலலிதா இல்லையென்றால் பா.ம.க. என்ற கட்சியே வெளியில் தெரிந்து இருக்காது. அ.தி.மு.க. தயவால்தான் பா.ம.க.வுக்கு அங்கீகாரம் கிடைத்தது" என்று கூறி இருந்தார்.

      இதற்கு பதில் அளித்து பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் கே.பாலு நிருபர்களிடம் கூறுகையில், "அ.தி.மு.க. 4 பிரிவாக பிரிந்து இருக்கிறது என்று குழந்தைகளுக்கு கூட நன்றாக தெரியும். 1996-ம் ஆண்டு அ.தி.மு.க. பலவீனப்பட்டு கிடந்தபோது அதற்கு உயிரூட்டியதே பா.ம.க.தான்.

      1998-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வுடன் கூட்டணி வைக்காவிட்டால் அ.தி.மு.க. மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கும். பா.ம.க. வுடன் கூட்டணி அமைத்தப் பின் தான் 2001-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார்" என்று கூறி இருந்தார்.

      இந்த நிலையில் இதற்கு பதில் அளித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:-

      பா.ம.க.வின் கருத்துக்கு பதில் சொல்லி எங்கள் சக்தியையும், நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. அ.தி.மு.க.வின் லட்சியமே வேறு. நாங்கள் எங்கள் லட்சியத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்.

      வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஏற்கனவே ஜெயலலிதா கைப்பற்றியது போல 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பது தான் எங்கள் லட்சியம்.

      அ.தி.மு.க. சிதைந்து கிடப்பதாக சிலர் பேசுகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. வலிமையான கட்சியாக இருக்கிறது என்பதை வருகிற பாராளுமன்ற தேர்தலின் மூலம் தெரியப்படுத்துவோம்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      ×