search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி பேச்சு உறுதியாக நடக்கவில்லை: கே.பி.முனுசாமி
    X

    அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி பேச்சு உறுதியாக நடக்கவில்லை: கே.பி.முனுசாமி

    • அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிந்தது.
    • அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பா.ஜனதா துணை தலைவர் வி.பி.துரைசாமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை:

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பா.ஜனதா துணை தலைவர் வி.பி.துரைசாமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    அண்ணாமலை டெல்லியில் இருக்கும் நிலையில் நிர்வாகிகள் தனியாக ஆலோசனை நடத்தியதால் டெல்லி தலைமை மீண்டும் கூட்டணியை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்தது.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிந்தது. இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்ற தலைமையின் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி.

    கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக பா.ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது பற்றி கே.பி. முனுசாமியை தொடர்பு கொண்டு கேட்டபோது 'உறுதியாக அப்படி எதுவும் நடக்கவில்லை' என்றார்.

    Next Story
    ×