search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது... கே.பி.முனுசாமி
    X

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது... கே.பி.முனுசாமி

    • ஜெயலலிதா தான் பா.ஜ.க.வை தென் மாநிலத்துக்கு அழைத்து வந்து கூட்டணி வைத்தார்.
    • அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தி பா.ஜ.க.வை பின்னிலைப்படுத்தி பேசி வருகிறார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து பணிமனையில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா தொழிற்சங்க அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கே.பி.முனுசாமி, அ.தி.மு.க. சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டோம். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமைத்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்த பின் அ.தி.மு.க எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற தகவலை வழங்குவோம் என தெரிவித்தார்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. ஒரு எம்.எல்.ஏ.வின் மகனும், மருமகளும் மோசமான செயலில் ஈடுபட்டார்கள் அதற்கு அடுத்ததாக பத்திரிகையாளர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். காவல்துறைக்கு தகவல் தெரிவித்தோம். காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து தான் அ.தி.மு.க பிப்ரவரி 1-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

    பா.ஜ.க தமிழகத்தில் 39 இடங்களில் வெற்றி பெறும் என அண்ணாமலை தெரிவித்த நிலையில் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தேர்தல் முடிந்த பின் மக்கள் வெளிப்படுத்துவார்கள். அதன் பின் அண்ணாமலை அதை உணர்வார். அவர் என் மண், என் மக்கள் என்பதை விட்டு விட்டு சென்னை கமலாலயத்தில் அமர்ந்துகொண்டு பேசுவது போல அவர் செல்லும் இடங்களில் பேசி வருகிறார்.

    மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி எங்கள் வீடு என பேசி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும் போது அவர் படிக்கின்ற மாணவராக இருந்து இருப்பார். ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருப்பவர் வரலாற்றை பிழையோடு கூறக்கூடாது. 1998 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கட்சி வட மாநிலத்தில் தான் இருந்தது. தமிழகத்தில் பா.ஜ.க கிடையாது. ஜெயலலிதா தான் பா.ஜ.க.வை தென் மாநிலத்துக்கு அழைத்து வந்து கூட்டணி வைத்தார். வடமாநிலத்தில் மட்டும் இருந்த பா.ஜ.க.வை தென்மாநிலத்தில் ஜெயலலிதா தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழருக்கான உரிமையை தர மறுத்ததால் கூட்டணியிலிருந்து வெளியேறினார். அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தி பா.ஜ.க.வை பின்னிலைப்படுத்தி பேசி வருகிறார். அவர் அரசியல் வரலாறு தெரியாமல் தலை சிறந்த தலைவர் நரேந்திர மோடி என கூறி அவரது நற்பெயரை சம்பாதிக்க முயற்சி செய்கிறார்.

    அண்ணாமலை வாஜ்பாய் பற்றி பேசுவது இல்லை. அண்ணாமலை அவர் கட்சினுடைய தலைவர்களை கலங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். பிரதமர் இதை அறிந்து அவருடைய பேச்சை கட்டுப்படுத்த உத்தரவு தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ராமர் கோவிலை பொருத்தவரை ராமர் அனைவருக்கும் தெய்வம் அந்த தெய்வத்தை யாராவது ஏமாற்றினால் அந்த தெய்வம் சும்மா இருக்காது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×