என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    உழைக்கும் தொண்டர்களை மதிக்கும் இயக்கம் அ.தி.மு.க.- கே.பி.முனுசாமி
    X

    உழைக்கும் தொண்டர்களை மதிக்கும் இயக்கம் அ.தி.மு.க.- கே.பி.முனுசாமி

    • நகரில் உள்ள 66 பூத்துகளில் கூடுதலாக 5 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும்.
    • ஊரக வேலை உறுதி திட்டத்தில் 150 நாட்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 1500 பேர் அந்த கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தலைமையில் இணைந்தனர்.

    விழாவில் கே.பி.முனுசாமி பேசியதாவது:-

    அ.தி.மு.க. சுயமரியாதை உள்ள இயக்கம். இந்த இயக்கத்தில் உழைப்பவர்களுக்கு மதிப்பு உண்டு. அதனால் மாற்றுக்கட்சிகளில் இருந்தவர்கள் இன்று அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளீர்கள். இந்த கட்சியில் வாரிசு அரசியல் கிடையாது. நீங்கள் எல்லாம் இந்த இயக்கத்தில் சேர்ந்துள்ளதால் கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க.வின் வாக்கு மேலும் உயரும்.

    நகரில் உள்ள 66 பூத்துகளில் கூடுதலாக 5 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

    அதன்படி குலவிளக்கு திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம், டவுன் பஸ்களில் ஆண்களுக்கும் கட்டணமில்லாத பயணம் திட்டங்களை நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவோம்.

    ஊரக வேலை உறுதி திட்டத்தில் 150 நாட்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மகளிருக்கு ஸ்கூட்டி வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் என 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்க நடவடிக்கை, இல்லத்தரசிகளுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்க நடவடிக்கை, மாற்றுத்திறனாளிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இவ்வாறு தேர்தல் வாக்குறுதிகளாக அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று பேசினார்.

    Next Story
    ×