search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "state govt"

      கிருஷ்ணகிரி:

      கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன், மருமகள் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவி மீது வன்கொடுமை செய்து கொடூர தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

      இதற்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே. அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர அ.தி.மு.க. செயலாளர் கேசவன் வரவேற்றார். ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

      ஆர்ப்பாட்டத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியதாவது:-


       கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி செயல் இழந்த அரசாக உள்ளது. சட்டம்-ஒழுங்கு முடங்கி சீர் கெட்டுள்ளது. தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் ஆகியோர் மாணவியை வேலைக்கு அமர்த்தி வன்கொடுமை செய்துள்ளனர். போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளரின் கண்டனத்திற்கு பிறகே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

      கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும் தொடர்ந்து கொலைகள் நடந்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு ஆட்சியாளர்களும், கடமை தவறிய அதிகாரிகளும் காரணம்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், முனிவெங்கடப்பன், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார், ஒன்றிய குழு தலைவர் அம்சாராஜன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு, முன்னாள் நகராட்சி தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், சைலேஷ் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      தொடர்ந்து எம்.ஜி.ஆரை அவதூறாக பேசியதாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் உருவ பொம்மையை அ.தி.மு.க.வினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-


      தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள், தங்களுக்குள் யார் பெரியவர்கள் என மல்லுக்கட்டி நிற்கின்றனர். இதனால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். மாநில அரசு நிதியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தோம். அதை கூட தி.மு.க., அரசால் செயல்படுத்த முடியவில்லை.

      தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது தந்தை கருணாநிதி பெயரை, சிலைகளை எங்கெல்லாம் வைக்கமுடியுமோ அதை செய்கிறார். மாடு பிடி அரங்கில், ஏறுதழுவும் சிலையில் கூட தனது முகம் போல வைத்துள்ளார். கோயம்பேடு பஸ் நிலையத்தை மாற்ற பார்க்கிறார். அரசியலில் தங்களை எதிர்த்தவர்கள் பெயர் எங்கும் இருக்க கூடாது என நினைக்கிறார். தமிழ்நாடு என்பதை கருணாநிதி நாடு என மாற்ற முயற்சிக்கிறார். வருகிற 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று வரும்போது, கருணாநிதி என்ற பெயரே இல்லாமல் செய்து விடுவோம்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      வேலூர் பாராளுமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Vellorepolls #Loksabhaelections2019
      சென்னை:

      வேலூர் பாராளுமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

      விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

      வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தும், தூத்துக்குடியில் வருமானவரித்துறை சோதனையை ஏவியும், ஆண்டிப்பட்டியில் துப்பாக்கி சூடு நடத்தியும் ஆளும் அ.தி.மு.க.வினர் நடத்திவரும் ஜனநாயகப் படுகொலைக்கு தேர்தல் ஆணையம் துணை போவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

      தமிழகத்தின் பல இடங்களில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆளும் கட்சியைச் சார்ந்த பலரது இடங்களிலிருந்தும் கோடிக்கணக்கான தொகையை வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை ஆகியவை கைப்பற்றியுள்ளன.

      ஆனால் வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். சுதந்திர இந்தியாவில் தேர்தல் ஆணையம் இந்த அளவுக்கு நம்பகத்தன்மையை இழந்து நிற்பது வேறெப்போதும் நடந்ததில்லை.

      தமிழகத்திலும் புதுவையிலும் உள்ள நாற்பது தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்பது தெளிவாகிவிட்ட நிலையில் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி ஆத்திரத்தில் வன்முறையில் ஈடுபடுகிறது. அதற்கு தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும், காவல்துறையும் துணை போவது வெட்கக்கேடானதாகும்.

      துணை முதல்-அமைச்சரின் மகன் போட்டியிடும் தொகுதியில் வாக்குக்கு பணம் கொடுக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. முதல்-அமைச்சரே பணம் கொடுக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

      எம்.எல்.ஏ விடுதியில் அமைச்சர் உதயகுமாரின் அறையில் சோதனையிடப்பட்டதில் வாக்குக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டின் பல இடங்களில் அ.தி.மு.க. வினரிடம் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

      ஆனால் அது தொடர்பாக எந்தத் தொகுதியிலும் தேர்தல் நிறுத்தப்படவில்லை. வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் ஆளும் கட்சிகளுக்கு ஆதரவான ஒரு சார்பு தன்மையை வெளிப்படுத்துகிறது.

      தேர்தல் ஆணையத்தையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தி தி.மு.க. அணியின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என ஆளும் பா.ஜனதா, அ.தி.மு.க.வினர் நினைக்கின்றனர்.

      மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன்:-

      தமிழகத்தில் பல தொகுதிகளில் பண விநியோகம் ஆளுங்கட்சியினரால் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கொடுத்த புகார்கள் எவற்றிற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சென்னை சட்டமன்ற விடுதிக்குள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. அவரை நேரிடையாக விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை கைப்பற்றிய பணம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

      தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-பா.ஜ.க. அணி 40 தொகுதிகளிலும் படு தோல்வி அடையும் என்ற அச்சத்திலேயே மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் மீது அவதூறு பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி இம்மோசமான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

      இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரா.முத்தரசன்:-

      வேலூர் தொகுதியில் தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயக விரோத செயலாகும். குறுக்கு வழியில் வெற்றி பெற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து, அதிகார துஷ்பிரயோக செயலில் அ.தி.மு.க.வும், பா. ஜனதாவும் ஈடுபட்டு வருகிறது. இதனை தமிழக மக்கள் நிச்சயம் முறியடிப்பார்கள். அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்.

      இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன்:-

      தமிழக மக்கள் இந்த ஜனநாயக படுகொலையை ஒரு போதும் அங்கீகரிக்க மாட்டார்கள். தேர்தல் நடைபெறும் புதுச்சேரி உள்ளிட்ட 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணி கட்சியினர் படுதோல்வி அடைவது நிச்சயம். பின்னர் தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதியிலும் தேர்தல் நடந்துதான் ஆக வேண்டும். அப்போது தி.மு.க. கூட்டணி வேட்பாளரை எதிர்த்து நிற்கிற அனைவருக்கும் டெபாசிட் கிடைக்காத அளவுக்கு வெற்றியை தேடி தந்து வேலூர் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

      இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #Vellorepolls #Loksabhaelections2019
      பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ.2 ஆயிரம் வழங்கும் நிதி உதவி திட்டத்தை கலெக்டர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். #LSPolls
      சென்னை:

      விவசாயிகளுக்கு 3 கட்டமாக தலா ரூ.2 ஆயிரம் நிதி உதவியை மத்திய அரசும், தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியை தமிழக அரசும் அறிவித்தது.

      இதற்காக தமிழகம் முழுவதும் மனுக்கள் பெறப்பட்டது. விவசாயிகளுக்கு முதல் தவணையாக மத்திய அரசின் ரூ.2 ஆயிரம், வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. தமிழகத்தில் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.



      இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

      இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ.2 ஆயிரம் வழங்கும் நிதி உதவி திட்டத்தை கலெக்டர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

      தேர்தல் நடத்தை விதிகள் அமலானதால் இப்போது ரூ.2 ஆயிரம் பணம் வழங்கப்படாது என்றும் தேர்தல் முடிந்த பிறகுதான் வழங்கப்படும் என்றும் கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

      இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை தமிழகத்தில் 45 லட்சம் குடும்பத்துக்கு பணம் வழங்கப்பட்டு விட்டதாகவும் இன்னும் 15 லட்சம் பேருக்கு மட்டும்தான் வழங்க வேண்டி உள்ளது” என்றும் தெரிவித்தனர். #LSPolls
      நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #NeutrinoProject #SupremeCourt
      புதுடெல்லி:

      தமிழகத்தின் தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நிறுவனத்திற்கு நியூட்ரினோ மைய ஆய்வக பணிகளை தொடர டாடா நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தரப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

      மனுவை விசாரித்த தீர்ப்பாயம், “நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தேசிய வனவிலங்கு வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும், அதுவரை ஆய்வு மைய பணிகளை தொடங்கக்கூடாது” என இடைக்கால தடை விதித்தது.

      இந்த தீர்ப்பை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் சார்பில்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவிற்கு மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

      ‘நியூட்ரினோ ஆய்வு மையம் விவகாரத்தில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் ஒப்புதல் பெறப்படும் வரை தான் திட்ட நடைமுறைகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை டாடா நிறுவனத்தின் சார்பில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் ஒப்புதலை பெற்றுவிட்டால், திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். அதனால் இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள முந்தைய உத்தரவை ரத்து செய்து, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என மனுதாரர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #NeutrinoProject #SupremeCourt
      ஸ்மார்ட் கார்டு ஓட்டுநர் உரிமத்தில் உரிமையாளரின் முகவரி இடம்பெறுவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. #MadrasHC
      சென்னை:

      தென்னிந்திய ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

      வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தற்போது ஸ்மார்ட் கார்டு லைசென்ஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

      இந்த புதிய முறை சென்னை உட்பட 3 மாவட்டங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வாகன உரிமம் வழங்கும் போது அந்த உரிமத்தை பெறுபவர்களின் முகவரியை குறிப்பிடாமல், டிரைவிங் ஸ்கூல் முகவரியை குறிப்பிடுகின்றனர்.

      ஓட்டுநர் உரிமம் பெறும் நபரின் முகவரி இடம் பெறுவதில்லை. இதனால் பல பிரச்சனைகள் உருவாகும்.

      எனவே ஓட்டுநர் உரிமத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் பெயரைப் போடாமல், உரிமம் பெறுபவரின் முகவரி போட உத்தரவிட வேண்டும்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார் இதுகுறித்து மத்திய-மாநில அரசுகள் 4 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு உள்ளனர். #MadrasHC #SmartCardLicense #SmartCardDrivingLicense
      மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத்தான் ஊராட்சி சபை கூட்டம் நடத்துவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
      திருச்சி:

      தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தி.மு.க. சார்பில் மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற முழக்கங்களுடன் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

      அதன்படி திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கிவைத்து திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசினார். நேற்று மாலை தஞ்சை மாவட்டத்தில் நடந்த ஊராட்சி சபை கூட்டங்களிலும் பங்கேற்று பேசினார்.

      இதையடுத்து இரவு திருச்சி வந்த மு.க.ஸ்டாலின் சங்கம் ஓட்டலில் தங்கினார். இன்று காலை காரில் புறப்பட்ட அவர் மணப்பாறை ஒன்றியம் சீகம்பட்டியில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

      இன்று தமிழ்நாடு இருக்கிற நிலை உங்களுக்கு தெரியும். இந்த கிராமசபை கூட்டம் நடைபெறும் இடத்தில் கோவில் உள்ளது. கோவிலுக்கு நான் செல்ல வேண்டியது என்பதில்லை. உங்களை பார்ப்பதே கோவிலுக்குள் சென்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

      மகாத்மா காந்தி கிராமங்களை அதிகம் விரும்புவார். ஒரு கிராமத்திற்கு நல்லது செய்யவேண்டும் என்றால் பண்டைய காலத்தில் மக்கள் அந்த கிராமத்திற்கு ஒரு மக்கள் பிரதிநிதியை தேர்வு செய்வார்கள்.

      பண்டைய காலத்தில் அதற்காக குடவோலை என்ற முறையை பயன்படுத்தினார்கள். குடவோலை சீட்டு மூலம் மக்கள் பிரதிநிதியை தேர்வு செய்ததற்கான சான்றுகள் காஞ்சிபுரம் ஊருக்கு அருகிலும், கும்பகோணம் அருகில் பள்ளி பாக்கியத்திலும் கல்வெட்டுக்களாக இருந்தது.

      ஆனால் அது இப்போது இல்லை. அதன்பிறகு தேர்தல் முறையில் படிப்படியாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு மூலம் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்தார்கள். இப்போது எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரம் மூலம் மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்கிறார்கள்.

      நாளை இதுவும் மாறலாம். தேர்தல் நேரங்களில் மக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து முட்டி, மோதி வாக்களிக்கிறார்கள். மக்கள் மூலம் தேர்வு செய்யப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை சட்டமன்றத்திற்கும், பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் உள்ள பாராளுமன்றத்திற்கும் செல்கிறார்கள்.

      இவ்வாறு மக்கள் பிரநிதிகளை தேர்வு செய்வதற்காக ஒவ்வொரு கட்சியும் தேர்தல் நேரங்களில் மக்களிடம் சென்று பிரசாரம் செய்கிறார்கள். தங்கள் கட்சி சார்பில் யார் நிற்கிறார்கள், என்ன செய்ய போகிறோம் என்று கூறி பிரசாரம் செய்கிறோம். ஆனால் இந்த பிரசாரம் கிராமங்கள் வரை சென்றடைகிறதா என்றால் இல்லை.

      எங்களை போன்ற தலைவர்கள் டவுன் மற்றும் பேரூர் பகுதிகளில் வேனில் நின்ற படி கையசைத்துவிட்டு பேசி ஓட்டு கேட்கிறோம். கிராமங்களுக்கு வேட்பாளர்கள் கூட செல்ல முடியவில்லை. இதற்கு நேரம் இல்லாததே உண்மையான காரணம். இதுதான் யதார்த்த நிலை.



      ஆனால் ஒரு காலத்தில் கிராமங்களில் இருந்துதான் பிரசாரங்கள் தொடங்கின. தெருக்கூத்துகள், ஓரங்க நாடகங்கள், கழைக்கூத்துகள் மூலம் பிரசாரங்கள் நடந்தன. அதன்பிறகு மாற்றம் ஏற்பட்டது. தற்போது கிராமங்களுக்கெல்லாம் டி.வி. வந்து விட்டது. முதல்வராக இருந்தபோது கருணாநிதிதான் இலவசமாக டி.வி.யை கொடுத்தார். டி.வி.க்கு இப்போது மவுசு குறைந்து விட்டது. தற்போது செல்போன் இல்லாமல் யாரும் இல்லை. ஒரு சிலர் 2 செல்போன்கள் வரை வைத்துள்ளனர்.

      செல்போன் இல்லாவிட்டால் வாழவே முடியாது என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் சில ஊடகங்கள் தி.மு.க.வின் வளர்ச்சியை பிடிக்காமல் திட்டமிட்டு எதிர்ச்செய்திகளை பரப்பி குழப்பம் ஏற்படுத்துகிறார்கள். அவர்களால் தி.மு.க. வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

      எனவே இதுபோன்ற கிராமசபை கூட்டங்களை நடத்தி மக்களை சந்தித்து வருகிறோம். இங்கே வந்துள்ள கூட்டத்தை பார்க்கும்போது, எங்களைவிட உங்களுக்குத் தான் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளதை பார்க்கிறோம். இந்த ஊராட்சி பகுதிகளில் பல பிரச்சனைகள் உள்ளது. குடிநீர், சாக்கடை, மின் விளக்கு, சாலை என பல பிரச்சனைகள் உள்ளன.

      நேற்று திருவாரூர், தஞ்சை கிராமசபை கூட்டங்களிலும் மக்கள் இதைத்தான் கூறினார்கள். இங்கு மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இந்த நிலைதான் உள்ளது. தமிழகத்தில் 12,617 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த அனைத்து ஊராட்சிகளுக்கும் நான் செல்ல முடியாது. முன்பு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது ஊராட்சிகளுக்கு சென்றுள்ளேன். என்னை போன்றே 400 பேரை தேர்வு செய்து அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்று கிராமசபை கூட்டங்களை நடத்த அறிவுறுத்தி உள்ளேன்.

      இங்கே உங்கள் பிரச்சனைகளை தெரிவியுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறைவேற்றுவோம். உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் இதுபோன்ற நிலை இருந்திருக்காது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. உள்ளாட்சி தேர்லை நடத்தி இருந்தால் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் உங்கள் பிரச்சனைகளை தீர்த்திருக்கலாம்.

      தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ஒவ்வொரு கிராமங்களுக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கி பணிகளை செய்தோம். மற்ற துறைகளின் மூலமும் நிதி ஒதுக்கி ரூ.1 கோடி வரையில் பணிகளை செய்துள்ளோம். ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் தி.மு.க. வெற்றி பெற்று செல்வாக்கு பெற்றுவிடும் என்பதால் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் வேண்டுமென்றே வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடி செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை.

      உள்ளாட்சி தேர்தல் நடக்க வேண்டும் என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும். மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத்தான் இந்த ஊராட்சி சபை கூட்டம்.

      இவ்வாறு அவர் பேசினார். #DMK #MKStalin

      மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் 10 நாள் தொடர் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar
      சென்னை:

      தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

      பிரதமர் மோடியும், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனும் ரபேல் போர் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் பாராளுமன்றத்திற்கும், உச்சநீதி மன்றத்திற்கும் தவறான தகவல்களை அளித்துள்ளனர்.

      அரசு கருவூலத்திற்கு இழப்பு ஏற்படுத்தியுள்ள இந்த மோசமான மெகா ஊழலின் உண்மை விவரங்களை வெளிக்கொண்டுவர பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்படவேண்டும் என ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

      இதேபோல் அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்களையும் மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கின்ற பொறுப்பும் கடமையும் காங்கிரஸ் கட்சிக்கு உண்டு.

      மத்திய-மாநில அரசுகளின் செயல்களை மக்களுக்கு எடுத்துரைக்கின்ற விதமாக தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரசார பொதுக் கூட்டங்களை நடத்திட வேண்டுமென்று மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

      அதன்படி மாவட்டத் தலைவர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட எல்லா சட்டமன்ற தொகுதிகளிலும் வருகிற 2-ந்தேதியில் இருந்து 12-ந் தேதி முடிய தொடர் பொதுக்கூட்டங்களை நடத்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

      இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Congress #Thirunavukkarasar
      பஞ்சாப் ரெயில் விபத்தில் உயிரிழப்பு 61 ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்த கோர சம்பவத்திற்கு ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றம்சாட்டுகின்றன. #PunjabTrainAccident #Dussehra #SidhuWife
      அமிர்தசரஸ்:

      பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் நேற்று இரவு தசரா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரெயில் தண்டவாளத்துக்கு அருகே உள்ள மைதானத்தில் நிகழ்ச்சி நடந்தது. பஞ்சாப் உள்ளாட்சித்துறை மந்திரி நவ்ஜோத்சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

      தசரா கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக, தீமையை நன்மை வெற்றி கொள்வதை குறிக்கும் வகையில், ராவணனின் ராட்சத உருவ பொம்மை தீயிட்டு எரிக்கப்பட்டது. அதைக் காண்பதற்காக, சுமார் 600 பேர் திரண்டு இருந்தனர். சிலர் இடப்பற்றாக்குறையால், தண்டவாளத்திலும், தண்டவாளத்தின் அருகிலும் நின்று கொண்டிருந்தனர்.

      அப்போது, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு செல்லும் ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் அவ்வழியாக அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், எதிர்திசையில் மற்றொரு ரெயில் வந்து கொண்டிருந்தது.

      தசரா கொண்டாட்டத்துக்காக பட்டாசுகள் இடைவிடாமல் வெடித்துக் கொண்டிருந்தன. அந்த சத்தத்தால், ரெயில்கள் வரும் சத்தம், யாருக்கும் கேட்கவில்லை. அதனால், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள், ஆர்வ மிகுதியால் அங்கேயே இருந்தனர். மேலும் பலரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

      ரெயில்கள் மிக நெருக்கமாக வந்தபோதுதான் தெரிந்தது. ஆனால், தப்பிக்க வழி இல்லாததால், கண் இமைக்கும் நேரத்தில், அவர்கள் மீது ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. அடுத்த நொடியில், அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

      இந்த கோர விபத்தில், 61 பேர் பலியாகி உள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்களில் பலரது கைகால்கள் உடைந்தும், தலையில் பலத்த அடிபட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.



      சம்பவத்தை தொடர்ந்து, சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர், தனது காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார். விபத்து காரணமாக, அந்த பாதையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தை பார்வையிட சென்ற மாநில கல்வி மந்திரி ஓ.பி.சோனியை பொதுமக்கள் தாக்கினர்

      ரெயில் விபத்து பற்றி முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். தண்டவாளம் அருகே உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து இந்த விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

      இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேசமயம், விபத்து தொடர்பாக ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றம்சாட்டத் தொடங்கி உள்ளன.

      ரெயில்வே தண்டவாளம் அருகே தசரா விழாவிற்கு அனுமதி அளித்த அரசுதான் இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், விபத்து நடந்ததும் சிறப்பு விருந்தினர் நவ்ஜோத் கவுர் அந்த இடத்தைவிட்டு சென்றது தவறு என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

      நடந்த சம்பவத்திற்கு மாநில அரசு தான் முழு  பொறுப்பு என்றும், நிர்வாகம் மீது பல்வேறு கேள்விகள் எழுவதால் இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்  மத்தியமந்திரியும் அகாலி தளம் தலைவருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் வலியுறுத்தி உள்ளார். மாநில அரசு சரியாக செயல்பட்டிருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என மத்திய மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

      முறையாக அனுமதியில்லாமல் காங்கிரஸ் கட்சி இந்த விழாவை நடத்தியதாக சில தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதி  தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரித்து, தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வலியுறுத்தி உள்ளார். #PunjabTrainAccident #Dussehra #SidhuWife
      மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #AIIMS
      மதுரை:

      மதுரையை சேர்ந்த ரமேஷ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

      எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம், தோப்பூர் பகுதியில் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதால் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள்.

      தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதமே மத்திய அரசு அறிவித்தது. ஆனால் எந்த இடத்தில் அமைய உள்ளது என்பதை 3 ஆண்டுகள் கழித்து அறிவித்துள்ளனர்.

      பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டவுடன், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. ஆனால் மதுரை தோப்பூரில் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை.

      எனவே தமிழகத்தில் மதுரை மாவட்டம், தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்று அரசிதழில் மத்திய அரசு வெளியிட வேண்டும்.

      மேலும் அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்தவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

      மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

      இந்து மனு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் இந்த பிரச்சனை குறித்து விளக்கம் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.  #AIIMS
      சபரிமலை கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மனுத்தாக்கல் செய்ய கேரள அரசு மறுத்துவிட்ட நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து பெண்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #Sabarimala #SabrimalaVerdict #PinarayiVijayan #WomenProtest
      திருவனந்தபுரம்:

      கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

      இந்த தீர்ப்புக்கு பல தரப்புகளில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள மாநில அரசு முறையீட்டு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு இருந்தது. இந்த கோரிக்கையை நிராகரித்த முதல்மந்திரி பினராயி விஜயன், கோவிலுக்கு பெண்கள் வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.



      இதற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கேரள மாநிலம் கொட்டையம் பகுதியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குறிப்பாக பெருந்திரளான பெண்கள், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முறையீடு செய்யுமாறு கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்து பேரணி நடத்தினர். #Sabarimala #SabrimalaVerdict #PinarayiVijayan #WomenProtest
      மத்திய, மாநில அரசுகள் தஞ்சாவூர்-மதுரை இடையே 4 வழிச்சாலைத் திட்டத்தை மக்கள் கருத்தை கேட்காமல் செயல்படுத்தக்கூடாது என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan
      சென்னை:

      த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      மத்திய மாநில அரசுகள் தஞ்சாவூர் மதுரை இடையே 4 வழிச்சாலைத் திட்டத்திற்காக செய்து வரும் நிலம் அளவிடும் பணிகளை கைவிட்டு, அப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயிகள் நலன் காக்க வேண்டும்

      மத்திய மாநில அரசுகள் தஞ்சாவூர் மதுரை இடையே 4 வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் அளவிடும் பணிகளை கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

      குறிப்பாக அரசு 4 வழிச்சாலை அமைக்க முடிவெடுத்தால் அந்த திட்டம் தொடர்பான பணிகளை ஆரம்பிக்கும் முன்பே 4 வழிச்சாலை அமைக்க இருக்கும் பகுதி வாழ் மக்கள் குறிப்பாக விவசாயிகளிடம் கருத்துக்கள் கேட்டறிய வேண்டும். அதன் பிறகே அத்திட்டம் தொடர்பான பணிகளை செய்யலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

      ஆனால் 4 வழிச்சாலை தொடர்பாக அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கருத்து ஏதும் கேட்காமல் கடந்த இரண்டு மாதங்களாக நிலம் அளவிடும் பணிகளை அரசு செய்து வருவது ஏற்புடையதல்ல.

      தற்போது சென்னை சேலம் இடையே 8 வழிச்சாலைத் திட்டத்தினால் விளைநிலங்களும், அதன் சார்ந்த நிலப்பகுதிகள், வனப்பகுதிகள் ஆகியவையும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது.

      மத்திய அரசின் திட்டம் என்றாலும், மாநில அரசின் திட்டம் என்றாலும் அது விவசாயத்தை பாதிக்குமா, மக்களுக்கு பாதிப்பை தருமா என்ற சந்தேகத்திற்கு இடம் கொடுக்காத வகையில் திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கலாம்.

      எனவே மத்திய மாநில அரசுகள் தஞ்சாவூர் மதுரை இடையே 4 வழிச்சாலைத் திட்டத்திற்காக செய்து வரும் நிலம் அளவிடும் பணிகளை கைவிட்டு, அப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயிகள் நலன் காக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.

      இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan  
      ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு ஏதுவான சூழலை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கி தருகிறார்கள் என்று திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். #VCK #Thirumavalavan #Sterlite
      தூத்துக்குடி:

      விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

      மீனாட்சிபுரம் மதமாற்றம் குறித்து முறையாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்று சொல்கிற கருத்துக்கும், என்னுடைய ஆய்வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

      கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.15 லட்சத்துகான காசோலையை திருவனந்தபுரத்தில் முதல்மந்திரி பினராயி விஜயனை சந்தித்து வழங்கியுள்ளோம். மேலும் ரூ.15 லட்சம் நிவாரண பொருட்கள் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் வழங்க உள்ளோம்.


      ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்வதற்காக தமிழர் அல்லாத ஒரு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தின் விருப்பப்படி தமிழர் அல்லாத நீதிபதியை நியமித்து இருப்பது, எந்த அளவுக்கு கோர்ட்டும், ஆட்சியாளர்களும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு துணை போகிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

      இவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு ஏதுவான சூழலை உருவாக்கி தருகிறார்கள் என்று மத்திய, மாநில அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனத்தை தெரிவிக்கிறது. தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு, தமிழர் ஒருவரை இந்த குழுவுக்கு தலைவராக நியமிக்க மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      இவ்வாறு அவர் கூறினார். #VCK #Thirumavalavan #Sterlite
      ×