search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manithaneya Jananayaga Katchi"

    திருவாரூர் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்பது குறித்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமூன் அன்சாரி தெரிவித்துள்ளார். #ThiruvarurByElection
    நாகப்பட்டினம்:

    மனிதநேய ஜனநாயகக் கட்சின் பொதுச்செயலாளர் தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ. நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் விழுந்து மிகப்பெரிய சுற்று சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அடுத்த 10 ஆண்டு காலத்தில் இழந்த பசுமையை மீட்கும் நோக்கத்தோடு கஜா புயல் பாதித்த 4 மாவட்டத்திலும் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் 2019-ம் ஆண்டை பசுமையாண்டு என்று பெயரிட்டு பசுமை திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் மரக்கன்றுகளை 4 மாவட்டத்தில் வினியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பு வந்த நேரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் சிவகங்கை மாவட்டம் இளையாங் குடியில்நடைபெற்றது.

    திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம். திருவாரூர் இடைத்தேர்தலில் எந்த கூட்டணியையும், எந்த கட்சியையும் ஆதரிப்பது இல்லை என்று முடிவு எடுத்திருக்கிறோம்.

    திருவாரூர் இடைத்தேர்தலில் மும்முனை போட்டி தான் இருக்கும். இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ, 2-வது இடத்திற்கு யார் வருகிறார்களோ அவர்கள் தான் தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக திகழ்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThiruvarurByElection
    சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று திருப்பூரில் மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். #ChennaiCorporation #ThamimunAnsari
    திருப்பூர்:

    மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது -

    தமிழகத்தில் உள்ளாட்சி துறைகளில் சொத்துவரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் சாமானியர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

    மத்திய பா.ஜனதா அரசு அனைத்து துறையிலும் தோல்வி அடைந்துஉள்ளது. ஜி.எஸ்.டியால் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பும், எதிர்ப்பும் ஏற்பட்டு இருக்கிறது. மலேசியாவில் ஜி.எஸ்.டியை திரும்ப பெற்று விட்டனர். இந்தியாவில் ஜி.எஸ்.டியை முதல் கட்டமாக 10 சதவீதத்துக்கு கீழ் கொண்டு வரவேண்டும்.

    திருப்பூரில் ஜி.எஸ்.டி.யால் பின்னலாடை தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இங்குள்ள உற்பத்தியாளர்கள் பங்களாதேசுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். எனவே பனியன் உற்பத்திக்கு 5 சதவீதத்துக்கு கீழ் ஜி.எஸ்.டி .வரியை கொண்டு வரவேண்டும். கோடம்பாக்கத்தில் இருந்து முதல்வர்கள் மற்றும் அரசியல் வாதிகளை கண்டறிந்த காலம் முடிந்து விட்டது. சினமா துறையில் அரசியலுக்கு வருபவர்கள் நிலைக்க முடியாது.


    ஜெயலலிதா உயிரோடு இருந்து இருந்தால் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை ஓட்டு எடுப்புக்கு வாக்களித்து இருக்க மாட்டார்கள். அ.தி.மு.க. எம்.பி.க்கள் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்து இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChennaiCorporation  #ThamimunAnsari
    ×