search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thamimun ansari"

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #LSPolls #DMK #Congress
    சென்னை:

    மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இதையடுத்து தமிமுன் அன்சாரி தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில் மனித நேய ஜனநாயக கட்சியின் 6-வது தலைமை செயற்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நடந்தது. அவைத் தலைவர் நாசர் உமர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, பொருளாளர் ஹாரூன் ரஷீது மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பாராளுமன்ற தேர்தலில் பாசிசம் ஒழிக்கப்பட்டு சமூக நீதி நிலைநாட்டப்பட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு இந்திய மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.முக., முஸ்லிக் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

    சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும். பாலியல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    28 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்டவர்களையும், கோவை அபுதாகீர், திண்டுக்கல் மீரான் மைதீன் போன்றவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #LSPolls #DMK #Congress
    திருவாரூர் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்பது குறித்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமூன் அன்சாரி தெரிவித்துள்ளார். #ThiruvarurByElection
    நாகப்பட்டினம்:

    மனிதநேய ஜனநாயகக் கட்சின் பொதுச்செயலாளர் தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ. நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் விழுந்து மிகப்பெரிய சுற்று சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அடுத்த 10 ஆண்டு காலத்தில் இழந்த பசுமையை மீட்கும் நோக்கத்தோடு கஜா புயல் பாதித்த 4 மாவட்டத்திலும் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் 2019-ம் ஆண்டை பசுமையாண்டு என்று பெயரிட்டு பசுமை திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் மரக்கன்றுகளை 4 மாவட்டத்தில் வினியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பு வந்த நேரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் சிவகங்கை மாவட்டம் இளையாங் குடியில்நடைபெற்றது.

    திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம். திருவாரூர் இடைத்தேர்தலில் எந்த கூட்டணியையும், எந்த கட்சியையும் ஆதரிப்பது இல்லை என்று முடிவு எடுத்திருக்கிறோம்.

    திருவாரூர் இடைத்தேர்தலில் மும்முனை போட்டி தான் இருக்கும். இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ, 2-வது இடத்திற்கு யார் வருகிறார்களோ அவர்கள் தான் தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக திகழ்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThiruvarurByElection
    மீ டூ விவகாரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வெளிவருவது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அதன் உண்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டும் என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். #thamimunansari #metoo

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் எம். எல்.ஏ.வுமான தமிமூன் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கி விட்டதால் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இரண்டாவது கட்ட தூர்வாரும் பணிகளை ஆறுகள் மற்றும் ஏரிகளில் செய்யவேண்டும். சபரிமலை விவகாரத்தில் இந்து மக்கள் மற்றும் இந்து மதத் தலைவர்களின் கருத்துக் களைத்தான் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    மத சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்கள் உணர்ச்சிப்பூர்வமாக உத்தரவை பிறப்பிக்காமல் அறிவுரை கூறுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    சபரிமலை கோவிலுக்குள் உள்ளே நுழைய முயன்ற சமூக ஆர்வலர் ரெகனாவிற்கும், முஸ்லிம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது. அவர் 2016-ம் ஆண்டு மதமாற்றம் ஆகிவிட்டார். மனிதநேய ஜனநாயக கட்சி தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. நல்லது செய்தால் வரவேற்போம். குறைகளை சுட்டிக்காட்டுவோம்.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அரசில் தொய்வு இருந்தது உண்மை. எடப்பாடி அரசு 6 மாதத்திற்குள் கவிழ்ந்து அனைவரும் நினைத்தது போன்று எனது எம்.எல்.ஏ. பதவியும் போய்விடும் என்று நான் பயந்தேன். ஆனால் அதையெல்லாம் முறியடித்து அ.தி.மு.க. அரசு ஒன்றரை ஆண்டு காலம் ஆட்சி நீடித்து வருகிறது.

    தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தமிழக அரசின் செயல்பாடு குறித்து இன்னமும் 6 மாதம் கழித்துதான் கருத்து கூற முடியும். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் நான் கோரும் கோரிக்கைகள் 90 சதவீதம் அரசால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.


    காமராஜர் ஆட்சிக்கு பிறகு நடைபெற்ற அனைத்து ஆட்சியிலும் ஊழல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டு தான் வந்துள்ளது. எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள் வரிப் பணத்தில் தான் சாலை பணிகள் உட்பட அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. எனவே எந்த அரசு வந்தாலும் அதை நினைவில் வைத்துக் கொண்டு பணிகளை செய்ய வேண்டும்.

    தற்போது நடைபெற்று வரும் அரசியல் சதுரங்க விளையாட்டில் நாளை என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எம்.எல்.ஏ. கருணாஸ் கூறிய கருத்துக்கள் ஏற்புடையது அல்ல . ஆனால் அவர் மன்னிப்பு கேட்டும் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு எச். ராஜா மற்றும் எஸ்.வி. சேகர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான்.

    மீ டூ விவகாரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வெளிவருவது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அதன் உண்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கண்டிப்பாக வெற்றி பெறப்போவது கிடையாது. மனிதநேய ஜனநாயக கட்சி யாருடன் கூட்டணி என்பதை அந்த நேரத்தில்தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thamimunansari #metoo

    கேரள வெள்ள நிவாரண நிதிக்கு மனித நேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார். #KeralaFloods
    சென்னை:

    கேரள வெள்ள நிவாரண நிதிக்கு மனித நேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கட்சியினரின் அறிவுறுத்தலின் பேரில், எனது ஒரு மாத சம்பளத்தை வழங்கி இருக்கிறேன். நாகப்பட்டினம் தொகுதி மக்கள் தங்களது நிவாரண உதவிகளை நாகை எம்.எல்.ஏ. அலுவலக்தில் வழங்கலாம். அப்படி பெறப்படும் பொருட்கள் ரெயில் மூலம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசு கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KeralaFloods

    சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று திருப்பூரில் மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். #ChennaiCorporation #ThamimunAnsari
    திருப்பூர்:

    மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது -

    தமிழகத்தில் உள்ளாட்சி துறைகளில் சொத்துவரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் சாமானியர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

    மத்திய பா.ஜனதா அரசு அனைத்து துறையிலும் தோல்வி அடைந்துஉள்ளது. ஜி.எஸ்.டியால் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பும், எதிர்ப்பும் ஏற்பட்டு இருக்கிறது. மலேசியாவில் ஜி.எஸ்.டியை திரும்ப பெற்று விட்டனர். இந்தியாவில் ஜி.எஸ்.டியை முதல் கட்டமாக 10 சதவீதத்துக்கு கீழ் கொண்டு வரவேண்டும்.

    திருப்பூரில் ஜி.எஸ்.டி.யால் பின்னலாடை தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இங்குள்ள உற்பத்தியாளர்கள் பங்களாதேசுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். எனவே பனியன் உற்பத்திக்கு 5 சதவீதத்துக்கு கீழ் ஜி.எஸ்.டி .வரியை கொண்டு வரவேண்டும். கோடம்பாக்கத்தில் இருந்து முதல்வர்கள் மற்றும் அரசியல் வாதிகளை கண்டறிந்த காலம் முடிந்து விட்டது. சினமா துறையில் அரசியலுக்கு வருபவர்கள் நிலைக்க முடியாது.


    ஜெயலலிதா உயிரோடு இருந்து இருந்தால் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை ஓட்டு எடுப்புக்கு வாக்களித்து இருக்க மாட்டார்கள். அ.தி.மு.க. எம்.பி.க்கள் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்து இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChennaiCorporation  #ThamimunAnsari
    வேதாரண்யம் அருகே தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ. கார் மோதிய விபத்தில் என்ஜினியரிங் கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்தார்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வேட்டை காரனிருப்பு அடுத்த சடையன்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சந்தோஷ் (வயது 20). இவர் நாகையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று சந்தோஷ், வேட்டைக்காரனியிருப்பில் உள்ள ஒரு பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக நாகை எம்.எல்.ஏ. தமிமூன் அன்சாரி காரில் வந்தார். காரை டிரைவர் ஓட்டினார். திடீரென மோட்டார் சைக்கிள் மீது எம்.எல்.ஏ. கார் மோதியது.

    இதில் மாணவர் சந்தோஷ் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் சந்தோசை மீட்டு எம்.எல்.ஏ. காரிலேயே சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வேட்டை காரனிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    எம்.எல்.ஏ. கார் மோதி கல்லூரி மாணவர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாக மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். #ThamimunAnsari #EdappadiPalanisamy
    சென்னை:

    மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கடந்த 9-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

    அப்போது பல்வேறு வி‌ஷயங்கள் குறித்தும் தமிமுன் அன்சாரி விவாதித்துள்ளார். இதுகுறித்து அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    ரமலான் நோன்பு தொடங்குவதற்குள் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் நோன்பு கஞ்சி அரிசி வழங்க வேண்டும் என்று முதல்- அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன்.

    இந்த கோரிக்கையை ஏற்று உடனடியாக அனைத்து பள்ளிவாசல்களுக்கும் தேவையான அரிசிகளை வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்தேன்.

    நான் முதல்-அமைச்சரிடம் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. ஏனென்றால் நான் எடப்பாடி பழனிசாமி பக்கமும் இல்லை, தினகரன் பக்கமும் இல்லை. இரு கட்சியிலும் இருந்து சமதூரத்தில் விலகி இருக்கிறேன். இருவரின் அரசியல் மீது விமர்சனம் உண்டு. என் கட்சி வழி காட்டுதல்படி நான் தனித்தே செயல்படுகிறேன்.

    காவிரி பிரச்சனை, நீட்தேர்வு, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி போன்றவற்றில் தனித்து போராடுகிறோம்.

    எடப்பாடி பழனிசாமி அரசு மீது எங்களுக்கு விமர்சனம் இருந்தாலும் மக்கள் பிரச்சனைக்கு பார்க்க வேண்டும் என்றால் உடனே நேரம் ஒதுக்கி தருகிறார். ஆனாலும் அவரது அரசியல் நிலைப்பாட்டில் எங்களுக்கு விமர்சனம் உண்டு.

    இதைபோல் தினகரன் மீது மரியாதை இருந்தாலும் பிரதமருக்கு எதிராக கருப்புகொடி போராட்டம் வேண்டாம் என்று அறிவித்தது அரசியலில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் பிரிந்த சமயத்தில் தனியரசு, கருணாஸ், நான் ஆகிய 3 பேரும் சமரசம் செய்ய முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. அதனால் நாங்கள் விலகி நிற்கிறோம்.


    அ.தி.மு.க. ஆட்சிக்கு பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது.

    எடப்பாடி பழனிசாமி அரசை அகற்றினால் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மத்திய பாரதிய ஜனதா அரசு செயல்படுகிறது.

    எடப்பாடி ஆட்சிக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர். அதனால் தான் அ.தி.மு.க. ஆட்சியின் குரல்வளையை நெரிக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தல் வரை அ.தி.மு.க. ஆட்சிக்கு சிக்கல் இருக்காது. அதன்பிறகு நிலைமை மாறலாம்.

    பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்.

    இவ்வாறு தமிமுன் அன்சாரி கூறினார். #ManithaneyaMakkalJananayakaKatchi #ThamimunAnsari #EdappadiPalanisamy
    ×