என் மலர்
செய்திகள்

சொத்துவரி உயர்வை திரும்ப பெறவேண்டும்- தமிமுன் அன்சாரி
சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று திருப்பூரில் மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். #ChennaiCorporation #ThamimunAnsari
திருப்பூர்:
மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது -
தமிழகத்தில் உள்ளாட்சி துறைகளில் சொத்துவரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் சாமானியர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

ஜெயலலிதா உயிரோடு இருந்து இருந்தால் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை ஓட்டு எடுப்புக்கு வாக்களித்து இருக்க மாட்டார்கள். அ.தி.மு.க. எம்.பி.க்கள் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்து இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #ChennaiCorporation #ThamimunAnsari
மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது -
தமிழகத்தில் உள்ளாட்சி துறைகளில் சொத்துவரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் சாமானியர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
மத்திய பா.ஜனதா அரசு அனைத்து துறையிலும் தோல்வி அடைந்துஉள்ளது. ஜி.எஸ்.டியால் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பும், எதிர்ப்பும் ஏற்பட்டு இருக்கிறது. மலேசியாவில் ஜி.எஸ்.டியை திரும்ப பெற்று விட்டனர். இந்தியாவில் ஜி.எஸ்.டியை முதல் கட்டமாக 10 சதவீதத்துக்கு கீழ் கொண்டு வரவேண்டும்.
திருப்பூரில் ஜி.எஸ்.டி.யால் பின்னலாடை தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இங்குள்ள உற்பத்தியாளர்கள் பங்களாதேசுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். எனவே பனியன் உற்பத்திக்கு 5 சதவீதத்துக்கு கீழ் ஜி.எஸ்.டி .வரியை கொண்டு வரவேண்டும். கோடம்பாக்கத்தில் இருந்து முதல்வர்கள் மற்றும் அரசியல் வாதிகளை கண்டறிந்த காலம் முடிந்து விட்டது. சினமா துறையில் அரசியலுக்கு வருபவர்கள் நிலைக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். #ChennaiCorporation #ThamimunAnsari
Next Story






