search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் உண்மை தன்மையை நிரூபிக்க வேண்டும்- தமிமுன் அன்சாரி
    X

    பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் உண்மை தன்மையை நிரூபிக்க வேண்டும்- தமிமுன் அன்சாரி

    மீ டூ விவகாரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வெளிவருவது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அதன் உண்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டும் என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். #thamimunansari #metoo

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் எம். எல்.ஏ.வுமான தமிமூன் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கி விட்டதால் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இரண்டாவது கட்ட தூர்வாரும் பணிகளை ஆறுகள் மற்றும் ஏரிகளில் செய்யவேண்டும். சபரிமலை விவகாரத்தில் இந்து மக்கள் மற்றும் இந்து மதத் தலைவர்களின் கருத்துக் களைத்தான் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    மத சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்கள் உணர்ச்சிப்பூர்வமாக உத்தரவை பிறப்பிக்காமல் அறிவுரை கூறுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    சபரிமலை கோவிலுக்குள் உள்ளே நுழைய முயன்ற சமூக ஆர்வலர் ரெகனாவிற்கும், முஸ்லிம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது. அவர் 2016-ம் ஆண்டு மதமாற்றம் ஆகிவிட்டார். மனிதநேய ஜனநாயக கட்சி தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. நல்லது செய்தால் வரவேற்போம். குறைகளை சுட்டிக்காட்டுவோம்.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அரசில் தொய்வு இருந்தது உண்மை. எடப்பாடி அரசு 6 மாதத்திற்குள் கவிழ்ந்து அனைவரும் நினைத்தது போன்று எனது எம்.எல்.ஏ. பதவியும் போய்விடும் என்று நான் பயந்தேன். ஆனால் அதையெல்லாம் முறியடித்து அ.தி.மு.க. அரசு ஒன்றரை ஆண்டு காலம் ஆட்சி நீடித்து வருகிறது.

    தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தமிழக அரசின் செயல்பாடு குறித்து இன்னமும் 6 மாதம் கழித்துதான் கருத்து கூற முடியும். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் நான் கோரும் கோரிக்கைகள் 90 சதவீதம் அரசால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.


    காமராஜர் ஆட்சிக்கு பிறகு நடைபெற்ற அனைத்து ஆட்சியிலும் ஊழல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டு தான் வந்துள்ளது. எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள் வரிப் பணத்தில் தான் சாலை பணிகள் உட்பட அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. எனவே எந்த அரசு வந்தாலும் அதை நினைவில் வைத்துக் கொண்டு பணிகளை செய்ய வேண்டும்.

    தற்போது நடைபெற்று வரும் அரசியல் சதுரங்க விளையாட்டில் நாளை என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எம்.எல்.ஏ. கருணாஸ் கூறிய கருத்துக்கள் ஏற்புடையது அல்ல . ஆனால் அவர் மன்னிப்பு கேட்டும் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு எச். ராஜா மற்றும் எஸ்.வி. சேகர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான்.

    மீ டூ விவகாரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வெளிவருவது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அதன் உண்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கண்டிப்பாக வெற்றி பெறப்போவது கிடையாது. மனிதநேய ஜனநாயக கட்சி யாருடன் கூட்டணி என்பதை அந்த நேரத்தில்தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thamimunansari #metoo

    Next Story
    ×