என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூர் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?- தமிமூன் அன்சாரி பேட்டி
Byமாலை மலர்2 Jan 2019 6:21 AM GMT (Updated: 2 Jan 2019 6:21 AM GMT)
திருவாரூர் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்பது குறித்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமூன் அன்சாரி தெரிவித்துள்ளார். #ThiruvarurByElection
நாகப்பட்டினம்:
மனிதநேய ஜனநாயகக் கட்சின் பொதுச்செயலாளர் தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ. நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் விழுந்து மிகப்பெரிய சுற்று சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டு காலத்தில் இழந்த பசுமையை மீட்கும் நோக்கத்தோடு கஜா புயல் பாதித்த 4 மாவட்டத்திலும் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் 2019-ம் ஆண்டை பசுமையாண்டு என்று பெயரிட்டு பசுமை திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் மரக்கன்றுகளை 4 மாவட்டத்தில் வினியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு வந்த நேரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் சிவகங்கை மாவட்டம் இளையாங் குடியில்நடைபெற்றது.
திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம். திருவாரூர் இடைத்தேர்தலில் எந்த கூட்டணியையும், எந்த கட்சியையும் ஆதரிப்பது இல்லை என்று முடிவு எடுத்திருக்கிறோம்.
திருவாரூர் இடைத்தேர்தலில் மும்முனை போட்டி தான் இருக்கும். இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ, 2-வது இடத்திற்கு யார் வருகிறார்களோ அவர்கள் தான் தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக திகழ்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #ThiruvarurByElection
மனிதநேய ஜனநாயகக் கட்சின் பொதுச்செயலாளர் தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ. நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் விழுந்து மிகப்பெரிய சுற்று சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டு காலத்தில் இழந்த பசுமையை மீட்கும் நோக்கத்தோடு கஜா புயல் பாதித்த 4 மாவட்டத்திலும் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் 2019-ம் ஆண்டை பசுமையாண்டு என்று பெயரிட்டு பசுமை திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் மரக்கன்றுகளை 4 மாவட்டத்தில் வினியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு வந்த நேரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் சிவகங்கை மாவட்டம் இளையாங் குடியில்நடைபெற்றது.
திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம். திருவாரூர் இடைத்தேர்தலில் எந்த கூட்டணியையும், எந்த கட்சியையும் ஆதரிப்பது இல்லை என்று முடிவு எடுத்திருக்கிறோம்.
திருவாரூர் இடைத்தேர்தலில் மும்முனை போட்டி தான் இருக்கும். இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ, 2-வது இடத்திற்கு யார் வருகிறார்களோ அவர்கள் தான் தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக திகழ்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #ThiruvarurByElection
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X