என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ. கார் மோதி கல்லூரி மாணவர் படுகாயம்
Byமாலை மலர்21 Jun 2018 7:24 AM GMT (Updated: 21 Jun 2018 7:24 AM GMT)
வேதாரண்யம் அருகே தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ. கார் மோதிய விபத்தில் என்ஜினியரிங் கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்தார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வேட்டை காரனிருப்பு அடுத்த சடையன்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சந்தோஷ் (வயது 20). இவர் நாகையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று சந்தோஷ், வேட்டைக்காரனியிருப்பில் உள்ள ஒரு பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக நாகை எம்.எல்.ஏ. தமிமூன் அன்சாரி காரில் வந்தார். காரை டிரைவர் ஓட்டினார். திடீரென மோட்டார் சைக்கிள் மீது எம்.எல்.ஏ. கார் மோதியது.
இதில் மாணவர் சந்தோஷ் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் சந்தோசை மீட்டு எம்.எல்.ஏ. காரிலேயே சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வேட்டை காரனிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எம்.எல்.ஏ. கார் மோதி கல்லூரி மாணவர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வேட்டை காரனிருப்பு அடுத்த சடையன்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சந்தோஷ் (வயது 20). இவர் நாகையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று சந்தோஷ், வேட்டைக்காரனியிருப்பில் உள்ள ஒரு பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக நாகை எம்.எல்.ஏ. தமிமூன் அன்சாரி காரில் வந்தார். காரை டிரைவர் ஓட்டினார். திடீரென மோட்டார் சைக்கிள் மீது எம்.எல்.ஏ. கார் மோதியது.
இதில் மாணவர் சந்தோஷ் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் சந்தோசை மீட்டு எம்.எல்.ஏ. காரிலேயே சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வேட்டை காரனிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எம்.எல்.ஏ. கார் மோதி கல்லூரி மாணவர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X