search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் விதி அமலுக்கு வந்ததால் ஏழைகளுக்கு ரூ.2,000 உதவி தொகை நிறுத்தம்
    X

    தேர்தல் விதி அமலுக்கு வந்ததால் ஏழைகளுக்கு ரூ.2,000 உதவி தொகை நிறுத்தம்

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ.2 ஆயிரம் வழங்கும் நிதி உதவி திட்டத்தை கலெக்டர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். #LSPolls
    சென்னை:

    விவசாயிகளுக்கு 3 கட்டமாக தலா ரூ.2 ஆயிரம் நிதி உதவியை மத்திய அரசும், தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியை தமிழக அரசும் அறிவித்தது.

    இதற்காக தமிழகம் முழுவதும் மனுக்கள் பெறப்பட்டது. விவசாயிகளுக்கு முதல் தவணையாக மத்திய அரசின் ரூ.2 ஆயிரம், வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. தமிழகத்தில் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.



    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

    இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ.2 ஆயிரம் வழங்கும் நிதி உதவி திட்டத்தை கலெக்டர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலானதால் இப்போது ரூ.2 ஆயிரம் பணம் வழங்கப்படாது என்றும் தேர்தல் முடிந்த பிறகுதான் வழங்கப்படும் என்றும் கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை தமிழகத்தில் 45 லட்சம் குடும்பத்துக்கு பணம் வழங்கப்பட்டு விட்டதாகவும் இன்னும் 15 லட்சம் பேருக்கு மட்டும்தான் வழங்க வேண்டி உள்ளது” என்றும் தெரிவித்தனர். #LSPolls
    Next Story
    ×