என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

பா.ம.க.வுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை- கே.பி.முனுசாமி

- அ.தி.மு.க. சிதைந்து கிடப்பதாக சிலர் பேசுகிறார்கள்.
- அ.தி.மு.க. வலிமையான கட்சியாக இருக்கிறது என்பதை வருகிற பாராளுமன்ற தேர்தலின் மூலம் தெரியப்படுத்துவோம்.
சென்னை:
புதுச்சேரியில் நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க. பிளவுபட்டு கிடப்பதாகவும், பா.ம.க.வுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஜெயலலிதா இல்லையென்றால் பா.ம.க. என்ற கட்சியே வெளியில் தெரிந்து இருக்காது. அ.தி.மு.க. தயவால்தான் பா.ம.க.வுக்கு அங்கீகாரம் கிடைத்தது" என்று கூறி இருந்தார்.
இதற்கு பதில் அளித்து பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் கே.பாலு நிருபர்களிடம் கூறுகையில், "அ.தி.மு.க. 4 பிரிவாக பிரிந்து இருக்கிறது என்று குழந்தைகளுக்கு கூட நன்றாக தெரியும். 1996-ம் ஆண்டு அ.தி.மு.க. பலவீனப்பட்டு கிடந்தபோது அதற்கு உயிரூட்டியதே பா.ம.க.தான்.
1998-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வுடன் கூட்டணி வைக்காவிட்டால் அ.தி.மு.க. மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கும். பா.ம.க. வுடன் கூட்டணி அமைத்தப் பின் தான் 2001-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார்" என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதில் அளித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:-
பா.ம.க.வின் கருத்துக்கு பதில் சொல்லி எங்கள் சக்தியையும், நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. அ.தி.மு.க.வின் லட்சியமே வேறு. நாங்கள் எங்கள் லட்சியத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஏற்கனவே ஜெயலலிதா கைப்பற்றியது போல 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பது தான் எங்கள் லட்சியம்.
அ.தி.மு.க. சிதைந்து கிடப்பதாக சிலர் பேசுகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. வலிமையான கட்சியாக இருக்கிறது என்பதை வருகிற பாராளுமன்ற தேர்தலின் மூலம் தெரியப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
