என் மலர்
நீங்கள் தேடியது "Sri Lanka India series"
- இலங்கை தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்க உள்ளார்.
- இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி ஜூலை 27-ந் தேதி நடக்கிறது.
இந்திய அணி 3 வடிவிலான தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் முதலில் டி20 தொடரும் அடுத்து ஒருநாள் தொடரும் அதன் பின் டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி ஜூலை 27-ந் தேதி நடக்கிறது.
டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 தொடரில் ரோகித், விராட் கோலி ஆகியோர் ஓய்வு அறிவித்தனர். இதனால் ரோகித், விராட் மட்டுமின்றி பும்ரா ஆகியோருக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இலங்கை தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ள கவுதம் கம்பீர், ரோகித், விராட் கோலி, பும்ரா ஆகியோரை இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.
மேலும் டி20 தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, தனிப்பட்ட காரணங்களுக்காக விலக உள்ளதாக பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- இலங்கையிலும் இதே பிரச்சனை உள்ளது.
- தற்போதுள்ள இளைஞர்கள் அதிக வருமானம் ஈட்டுகிறார்கள் என்பதில் பெருமை அடைகிறேன்.
டி20 லீக் போட்டிகளால் சர்வதேச கிரிக்கெட் தரம் குறைந்து வருகிறது. தலைசிறந்த முன்னாள் வீரர்களை போன்ற வீரர்களை உருவாக்க முடியவில்லை என்று இலங்கை அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்த கேப்டனான அர்ஜுன ரனதுங்கா தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரனதுங்கா கூறியதாவது:-
நான் 1990களின் தொடகத்தில் கேப்டனாக இருந்தபோது, இந்திய அணி கவாஸ்கர், வெங்சர்கார், அமர்நாத் போன்ற பேட்டிங் ஆர்டர்களை பெற்றிருந்தது. அவர்களை எங்களால் இரண்டு முறை (டெஸ்ட் போட்டி) ஆட்மிழக்க செய்ய முடியவில்லை. அவர்களை தொடர்ந்து அசாருதீன், தெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, டிராவிட் பின்தொடர்ந்து வந்தார்கள்.
அவர்களிடம் அற்புதனமாக தரமான வீரர்கள் இருந்தனர். நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். என்னை தவறாக நினைக்காதீர்கள். தற்போது அதை போன்ற கிளாஸ் பிளேயர்கள் இந்தியாவில் உள்ளனரா? நான் அப்படி நினைக்கவில்லை. இதை வெளிப்படையாக தெரிவிக்கிறேன். நான் என்னுடைய 1990 இலங்கை அணியுடன், இந்த இந்திய அணிக்கு எதிரான விளையாடினால், என்னால் இரண்டு முறை ஆட்டமிழக்க செய்ய முடியும். இந்திய மண்ணில் இந்தியாவை தோற்கடிப்பேன்.

நாம் இளைஞர்களுக்கு முறையாக கிரிக்கெட் சொல்லிக்கொடுக்கிறோமா?. இந்தியாவில் கவாஸ்கர், வெங்சர்கார், அமர்நாத் போன்றோரை உருவாக்க முடியுமா?. ஒருவேளை தெண்டுல்கர், டிராவிட் போன்று? வெளிப்படைய நீங்கள் சொல்லுங்கள். எனக்கு இதில் சந்தேகம் உள்ளது. இலங்கையிலும் இதே பிரச்சனை உள்ளது.
தற்போதுள்ள இளைஞர்கள் அதிக வருமானம் ஈட்டுகிறார்கள் என்பதில் பெருமை அடைகிறேன். அவர்கள் பிரான்சிஸ் கிரிக்கெட்டுகளை விரும்புகின்றனர். நாட்டிற்காக விளையாடவில்லை என்றாலும், பிரான்சிஸ் கிரிக்கெட்டில் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். இன்னும் ஐந்து வருடத்தில் வீரர்கள் நாட்டிற்காக விளையாடும் மதிப்பு போய்விடும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பிரான்சிஸ் கிரிக்கெட் மட்டும்தான் இருக்கும்.
இவ்வாறு ரனதுங்கா தெரிவித்துள்ளார்.