search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பும்ரா"

    • ரன் சேசிங்கில் ரோகித், இஷான் கிஷன் பேட்டிங் செய்த விதம், ஆட்டத்தை முன் கூட்டியே முடிப்பது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது.
    • மும்பை அணியில் பும்ரா இருப்பது எனது அதிர்ஷ்டம். நான் அவரிடம் கேட்கும் ஒவ்வொரு முறையும் அவர் விக்கெட்டுகளைப் எடுத்து தருகிறார்.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று மும்பையில் நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. கேப்டன் டு பிளிசிஸ் 61 ரன்னும், படிதார் 50 ரன்னும், தினேஷ் கார்த்திக் 53 ரன்னும் எடுத்தனர். மும்பை தரப்பில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் விளையாடிய மும்பை, 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து வென்றது. தொடர்ந்து இஷான் கிஷன் 69 ரன்னும், ரோகித் சர்மா 38 ரன்னும், சூர்ய குமார் யாதவ் 52 ரன்னும் எடுத்தனர்.

    வெற்றி குறித்து மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    வெற்றி பெறுவது எப்போதும் அற்புதமானது. நாங்கள் வெற்றி பெற்ற விதம் சிறப்பாக இருந்தது. இம்பாக்ட் பிளேயர் விதியால் கூடுதல் பந்து வீச்சாளரைப் பயன்படுத்த முடிகிறது. இது எனக்கு கூடுதல் பயனை அளித்தது. ரன் சேசிங்கில் ரோகித் சர்மா, இஷான் கிஷன் பேட்டிங் செய்த விதம், ஆட்டத்தை முன் கூட்டியே முடிப்பது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது.

    இந்த ஆடுகளத்தில் இலக்கு குறைவாக இருந்ததால், ரன் ரேட்டை உயர்த்த நினைத்தோம். மும்பை அணியில் பும்ரா இருப்பது எனது அதிர்ஷ்டம். நான் அவரிடம் கேட்கும் ஒவ்வொரு முறையும் அவர் விக்கெட்டுகளைப் எடுத்து தருகிறார். அவருக்கு அனுபவமும் நம்பிக்கையும் அதிகம். பெங்களூரு கேப்டன் டு பிளிசிஸ் சில இடங்களில் பந்தை அடித்தார். அது போன்று வேறு வீரர்கள் அடித்து நான் பார்த்ததில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெங்களூரு கேப்டன் டு பிபெலிசிஸ் கூறும்போது, ஆட்டத்தில் பனி ஒரு பெரிய பங்கை வகிக்கும் என்று எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு 215-220 ரன்கள் தேவைப்பட்டது. 190 ரன் போதுமானதாக இல்லை. பனி படிந்தவுடன் மிகவும் கடினமாக இருந்தது. பந்தை பலமுறை மாற்றினோம். மும்பை அணி வீரர்கள் எங்கள் பந்துவீச்சாளர்களை நிறைய தவறுகளைச் செய்ய வைத்தார்கள். முக்கியமான கட்டங்களில் முக்கிய விக்கெட்டுகளை இழந்தோம். பும்ரா சிறப்பாக பந்து வீசினார். மலிங்கா போன்ற ஒருவர் 20 ஓவர் கிரிக்கெட டில் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார். அதை தற்போது பும்ரா வைத்துள்ளார் என்றார்.

    மும்பை அணி 2-வது வெற்றியை பெற்றது. பெங்களூரு 5-வது தோல்வியை சந்தித்தது.

    • இந்த போட்டியில் நடுவர்கள் மும்பை அணிக்கு சாதகமாக வழங்கிய முடிவுகள் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.
    • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் 12 வீரர்கள் களத்தில் விளையாடுவதாக ரசிகர்கள் கிண்டல் செய்வது வழக்கம்.

    மும்பை:

    ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் நடுவர்கள் மும்பை அணிக்கு சாதகமாக வழங்கிய முடிவுகள் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

    மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் போட்டியில், நடுவர்கள் சர்ச்சைக்குரிய முடிவுகளை வழங்குவது தொடர்கதையாகவே இருந்துவருகிறது. ஐபிஎல்லில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே முட்டிய நோ-பால் சர்ச்சை தான், சர்வதேச அளவ் டி20 போட்டிகளில் கூட முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

    2019-ம் ஆண்டு மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய போட்டியில் கடைசி 1 பந்துக்கு 7 ரன்கள் அடிக்கவேண்டிய இடத்தில், லசித் மலிங்கா கடைசி பந்தை நோ-பாலாக வீசியும் நோ-பால் வழங்கப்படாமல் போட்டியில் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். பவுலிங் லைனை தாண்டி வந்து மலிங்கா பந்தைவீசியது ரீப்ளேவில் எளிதாகவே தெரிந்தது. ஆனால் அதை நடுவர் ஏன் நோ-பாலாக வழங்கவில்லை என்ற சர்ச்சை அப்போது பெரிதாக வெடித்தது.

    அப்போது தொடங்கிய நடுவர்கள் சர்ச்சையானது, நேற்றைய ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் போட்டியிலும் பெரிதாக வெடித்தது. நேற்றைய போட்டியில் நடுவர்களின் மோசமான முடிவுகளை பார்த்த ரசிகர்கள் "Umpires Indians" என்ற ஹேஷ்டேக்கை எக்ஸ் தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

     

    நேற்றைய போட்டியில் மும்பை அணிக்கு சாதகமாக நடுவர்கள் அளிக்கப்பட்ட முடிவுகள்:-

    தினேஷ் கார்த்திக்கு எதிராக நோ-பால் வழங்காமல் விட்டது. பவுண்டரி லைனில் பீல்டிங் செய்த மத்வால் பந்தை பிடிக்கும்போது பவுண்டரி லைனில் டச் செய்ததை பார்க்காமல் 1 ரன் வழங்கியது.

    மும்பை அணிக்கு இருந்த ரிவியூ தீர்ந்தபிறகும் களநடுவர் நாட்-அவுட் கொடுத்த பிறகும் மும்பை அணிக்காக ரிவியூ எடுக்கப்பட்டது. ஒயிடு இல்லாத பந்துக்கு ஆர்சிபி அணிக்கு ஒயிடு வழங்கியது. 

    என நடுவர்கள் வழங்கிய பல முடிவுகள் சர்ச்சையாக மாறி போட்டியின் முடிவில் பெரிய பங்காற்றின. அதைப்பார்த்த ரசிகர்கள் "Umpires Indians" என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து மும்பை இந்தியன்ஸ் அணியை ட்ரோல் செய்து வருகின்றனர்.

    முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் 12 வீரர்கள் களத்தில் விளையாடுவதாக ரசிகர்கள் கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கும் நிலையில் இந்த சம்பவம் அதை உண்மையாக்கும் வகையில் உள்ளது.

    • பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • மும்பை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 ஓவர்களில் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

    மும்பை:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 53 ரன்களுடன் (23 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 ஓவர்களில் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

    இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி அதிரடியாக விளையாடி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 69 ரன்கள் எடுத்தார்.

    இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பும்ரா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். பெங்களூருவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கபளீகரம் செய்த முதல் பவுலர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். பும்ரா 21 ரன் வழங்கி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    • ஒவ்வொரு பையனுக்கும் கிரிக்கெட்டில் பெரிதாக சாதித்து விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கும்.
    • இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் 25 வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதற்கு விரும்புவார்கள்.

    இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். இவரது படிப்பு முடிந்த உடன் குடும்பத்துடன் கனடாவுக்கு சென்று, அங்கேயே குடியேற விரும்பியதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் அவரது தயார் கனடா செல்ல விருமபாததால் இந்தியாவிலேயே தங்கியதாகவும், அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்து இந்திய அணியில் நட்சத்திர பந்து வீச்சாளராக மாறியதாகவும் தெரிவித்துள்ளார்.

    நீங்கள் கனடா சென்று, அங்கு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்பினீர்களா? என்று அவரது மனைவி சஞ்சனா கேட்டதற்கு பும்ரா அளித்த பதில் வருமாறு:-

    ஒவ்வொரு பையனுக்கும் கிரிக்கெட்டில் பெரிதாக சாதித்து விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் 25 வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதற்கு விரும்புவார்கள். அதனால் நீங்கள் மாற்றுத்திட்டத்தை வைத்திருக்க வேண்டியது அவசியம். படிப்பை முடித்ததும் கனடாவுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தேன். அங்கே என்னுடைய மாமா இருக்கின்றார்.

    அப்போது குடும்பமாக செல்லலாம் என்று நாங்கள் முடிவெடுத்தோம். ஆனால் கனடா போன்ற வேறு கலாச்சாரத்தை கொண்ட நாட்டுக்கு நான் செல்வதை அவர் விரும்பவில்லை என எனது தயார் தெரிவித்தார். அதிர்ஷ்டவசமாக அது எனக்கு வேலை செய்தது. மாறாக கனடா அணிக்காக விளையாட முயற்சி செய்திருப்பேனா? அல்லது ஏதாவது செயதிருப்பேனா? என்பது தெரியவில்லை. இருப்பினும் அது வேலை செய்ததால் தற்போது இந்தியா மற்றும் மும்பை அணிக்காக விளையாடுகிறேன்" என்று கூறினார்.

    • 4-வது ஓவர் வீசிய பும்ரா ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
    • அதன்பின் 13-வது ஓவரில்தான் பும்ரா பந்து வீச அழைக்கப்பட்டார்.

    ஐதராபாத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 277 ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் பந்து வீசும்போது பும்ராவிற்கு முதல் ஓவர் வழங்கப்படவில்லை. 4-வது ஓவர்தான் அவருக்கு வழங்கப்பட்டது. அந்த ஓவரில் அவர் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதன்பின் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    6-வது ஓவர் அவருக்குப் பதிலாக கோட்சிக்கு வழங்கப்பட்டது. இதில் கோட்சி 23 ரன்கள் வாரி வழங்கினார். அதன்பின் 12 ஓவரில் 173 ரன்கள் குவித்த நிலையில் பும்ராவிற்கு மீண்டும் 13-வது ஓவர் வழங்கப்பட்டது.

    ஏன் முதல் ஓவருக்குப் பிறகு பும்ராவிற்கு 13-வது ஓவர் வரை வாய்ப்பு வழங்கப்படவில்லை என தான் குழப்பம் அடைந்ததாக வர்ணனையாளராக செயல்படும் ஆஸ்திரேலிய நடசத்திர வீரர் ஸ்டீவன் சுமித் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சுமித் கூறியதாவது:-

    மும்பை இந்தியன்ஸ் அணி அவர்களுடைய பந்து வீச்சை மாற்றியது குறித்து நான் குழப்பம் அடைந்தேன். பும்ரா 4-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் அவர் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதன்பின் அவரை 13-வது ஓவர் வரை பார்கக் முடியவில்லை. அதற்குள் ஐதராபாத் அணி 173 ரன்கள் விளாசிவிட்டது.

    அதற்குள் அனைத்து சேதாரங்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏற்பட்டு விட்டது. நீங்கள் உங்களுடைய சிறந்த பந்து வீச்சாளரை உடனே பந்து வீச அழைப்பது அவசியம். அந்த நேரத்தில் அவர் சில விக்கெட் எடுத்திருக்க முடியும். 13-வது ஓவரில் கொண்டு வந்ததன் மூலம் அவர்களது யுக்தியை தவற விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்.

    சில விசயங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தவறாக அமைந்தது. அதில் முக்கியமான ஒன்று இது. உலகின் சிறந்த பந்து வீச்சாளரை ஒரு ஓவருடன் நிறுத்த முடியாது.

    பும்ராவை முன்னதாக பந்து வீச அழைத்து, ஒரு ரிஸ்க் எடுத்திருந்தால் 277 ரன்கள் என்பது கண்டிப்பாக 240 ஆக குறைந்திருக்கும். ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் இதை சேஸிங் செய்திருக்கலாம். ஆகவே, 13 ஓவர் வரை ஒரு ஓவர்தான் அவர் வீசியது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

    இவ்வாறு சுமித் தெரிவித்துள்ளார்.

    • 2015-ல் பும்ராவை மும்பை விடுவிக்க விரும்பிய போது அதை ரோகித் நிராகரித்தார்.
    • இதேபோல 2016-ல் பாண்ட்யாவை மும்பை விடுவிக்க விரும்பிய போது அதையும் ரோகித் நிராகரித்தார்.

    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துவிட்டன. 17-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 22-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

    இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். கோப்பையை அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், தலா 5 தடவை கைப்பற்றியுள்ளன. சென்னை அணிக்கு டோனியும், மும்பை அணிக்கு ரோகித் சர்மாவும் 5 முறை கோப்பையை பெற்றுக் கொடுத்தனர்.

    இந்த ஐ.பி.எல் . சீசனில் மும்பை அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இல்லை. அவரை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கேப்டனாக நியமித்துள்ளது.

    இந்த நிலையில் ரோகித் சர்மா குறித்து மும்பை இந்தியன்ஸ் ஆகியவை அணிக்காக ஆடிய விக்கெட் கீப்பர் பார்தீவ் படேல் மனம் திறந்து உள்ளார்.

    பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரை மும்பை அணி விடுவிக்க விரும்பிய போது அவர்களுக்கு ஆதரவாக ரோகித் சர்மா இருந்தார் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பார்த்தீவ் படேல் கூறியதாவது:- 

    ரோகித் சர்மா எப்போதுமே வீரர்களுக்கு ஆதரவாக இருப்பார். அதற்கு மிகப்பெரிய உதாரணம், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆவார்கள். பும்ரா 2014-ம் ஆண்டு முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தார். 2015-ல் அவர் முதல் சீசனை விளையாடிய போது சிறப்பாக அமையவில்லை.

    இதனால் அவரை விடுவிக்க மும்பை அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் அந்த வீரர் பிரகாசிப்பார். இதனால் அவரை அணியில் தொடர்ந்து வைத்து இருக்க வேண்டும் என்று பும்ராவுக்கு ஆதரவாக ரோகித் சர்மா தெரிவித்தார். அதற்கான பலனை நாங்கள் அடுத்த சீசனில் பார்த்தோம். பும்ரா அபாரமாக பந்து வீசினார்.

    இதே நிலைதான் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் இருந்தது. 2015-ல் இணைந்தார். 2016-ல் அவருக்கு மோசமாக இருந்தது. அவரை நீக்க மும்பை அணி விரும்பியது. அப்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆதரவாக ரோகித்சர்மா செயல்பட்டார்.

    இவ்வாறு பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.

    குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல்லில் அறிமுகமானபோது ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியில் இருந்தது. குஜராத்துக்கு கேப்டன் ஆனார். குஜராத் அணி முதல் சீசனிலேயே கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை நுழைந்தது. தற்போது இந்த சீசனில் அங்கிருந்து மீண்டும் மும்பை அணிக்கு மாற்றமாகி கேப்டனாக பணியாற்ற உள்ளார்.

    • முதல் டெஸ்ட் போட்டிக்குப்பின் கே.எல். ராகுல் விளையாடவில்லை.
    • பும்ராவுக்கு 4-வது டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டது.

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே.எல்.ராகுல். இங்கிலாந்துக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் அவர்தான் அதிகபட்சமாக 86 ரன் எடுத்தார். ஆனால் அந்த டெஸ்டில் இந்தியா தோற்றது.

    அதைத்தொடர்ந்து நடைபெற்ற 2-வது, 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகளில் ராகுல் விளையாடவில்லை. தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகினார்.

    இந்த நிலையில் மார்ச் 7-ந்தேதி தரம்சாலாவில் தொடங்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் ராகுல் விளையாடமாட்டார். காயம் முழுமையாக குணம் அடையாததால் இது தொடர்பாக டாக்டர்களின் ஆலோசனையை பெறுவதற்காக அவர் லண்டன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஐ.பி.எல். மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு முழு உடல் தகுதி பெற்றுவிட வேண்டும் என்பதில் ராகுல் தீவிரமாக உள்ளார். இதன் காரணமாக அவர் இங்கிலாந்து சென்றுள்ளார்.

    ஐ.பி.எல். போட்டி வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 24-ந்தேதி சந்திக்கிறது. இதில் லக்னோ கேப்டனான ராகுல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    4-வது டெஸ்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அணிக்கு திரும்புகிறார். 5-வது டெஸ்டில் அவர் விளையாட இருக்கிறார். அவர் 3 டெஸ்டில் 17 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

    • இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.
    • ஒரு பேட்டர் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளது.

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகள் முடிவடைந்தன. இதன் முடிவில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இந்த தொடரில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் அடுத்து நடந்த 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் 5-வது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து 2 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு பேட்டர் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளது.

    அந்த வகையில் கேஎல் ராகுல், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.ஏற்கனவே இருவரும் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
    • முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல் ஆகியோர் விலகியுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

    பணிச்சுமை கருதி பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதாகவும், காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் கே.எல்.ராகுல் விலகியுள்ளதாகவும் பி.சி.சி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பும்ராவுக்கு பதிலாக முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இவர்கள் இருவரும் விலகிய நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் பின்வருமாறு;-

    ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரேல், கே.எஸ்.பாரத், படிக்கல், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், அகாஷ் தீப்.

    • இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.
    • பணிச்சுமை காரணமாக அவருக்கு ஏற்கனவே 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

    ராஞ்சி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியிலிருந்து ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிச்சுமை காரணமாக அவருக்கு ஏற்கனவே 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும் அந்த போட்டியிலிருந்து மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

    இதனால் 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ராவிற்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 4-வது போட்டியின் முடிவை பொறுத்தே அவர் கடைசி போட்டியில் இடம்பெறுவாரா இல்லையா என்பது தெரிய வரும் என தகவல் வெளியாகியுள்ளது. 

    • அஸ்வின் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • ஜூரேல் 46 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசினர். அறிமுக போட்டியில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்தார். இதனால் முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. ஜடேஜா 110 ரன்னுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா மேலும் இரண்டு ரன் எடுத்து 112 ரன்னில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்னில் வெளியேறினார்.

    8-வது விக்கெட்டுக்கு ஜுரேல் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இந்திய அணியின் ஸ்கோர் 408 ரன்னாக இருக்கும்போது அஸ்வின் 37 ரன்னில் வெளியேறினார்.

    ஜுரேல்

    அடுத்து பும்ரா களம் இறங்கினார். அறிமுக வீரர் ஜுரேல் அரைசதம் நோக்கி சென்றார். ஆனால் 46 ரன்கள் எடுத்த நிலையில் ரேஹன் பந்தில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அப்போது இந்திய 415 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி விக்கெட்டுக்கு பும்ரா உடன் சிராஜ் ஜோடி சேர்ந்தார். பும்ரா கிடைத்தது வரை லாபம் என்ற வகையில் அதிரடியாக விளையாடினார். இன்று பந்து நன்றாக அவரது பேட்டில் பட ரன்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இதனால் இந்தியா 450 ரன்களை நோக்கி சென்றது. ஆனால் 26 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. சிராஜ் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹன் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • 2021-ம் ஆண்டு பும்ரா- சஞ்சனா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, தொலைக்காட்சி தொகுப்பாளரும் மாடலுமான சஞ்சனா கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2021-ம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    அதன்பின் குழந்தையுடன் நேரம் செலவிடும் புகைப்படங்கள் பும்ரா அவ்வப்போது வெளியிட்டு வந்தார். ஆனால் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை அதிகளவில் பதிவிடவில்லை.

    இந்நிலையில் பும்ரா - சஞ்சனா கணேசன் ஜோடி இணைந்து காதலர் தினத்தை முன்னிட்டு விளம்பர வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோவுக்கு ரசிகர் ஒருவர் அண்ணியின் உடல் கொஞ்சம் குண்டாக உள்ளது என்று உருவக் கேலி செய்தார்.

     

    அந்த கமெண்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சஞ்சனா கணேசன், "உன் பள்ளியில் கொடுக்கப்படும் அறிவியல் புத்தகத்தில் உள்ள பாடத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது. ஆனால் ஒரு பெண்ணின் உடல் வடிவம் பற்றி இங்கு கருத்து கூறுகிறாய்.. ஒழுங்காக இங்கிருந்து ஓடிவிடு" என்று பதில் அளித்துள்ளார். இந்த பதில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

    2014-ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்ட சஞ்சனா கணேசன் இறுதிச்சுற்று வரை சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×