என் மலர்tooltip icon

    உலகம்

    டிட்வா புயல் பாதிப்பு: இலங்கைக்கு ரூ.1,850 கோடி நிவாரணம் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்
    X

    டிட்வா புயல் பாதிப்பு: இலங்கைக்கு ரூ.1,850 கோடி நிவாரணம் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

    • கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அந்த நாடே சின்னாபின்னமானது.
    • இலங்கையில் புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர்.

    இலங்கையில் இந்த மாத தொடக்கத்தில் 'டிட்வா' புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அந்த நாடே சின்னாபின்னமானது.

    இலங்கையில் புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர். பலர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து தனிமை ஆகினர்.

    நிதி பற்றாக்குறை மற்றும், பொருளாதார மந்தநிலை காரணமாக சிக்கி தவிக்கும் இலங்கை, புயல் பாதிப்பால் பெரும் பாதிப்படைந்தனர்.

    இந்தநிலையில் புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக ரூ.1,850 கோடி (206 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அவசரநிதியை விடுவித்து நிவாரணமாக வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×