என் மலர்
நீங்கள் தேடியது "Junior Asia Cup"
- ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது.
- இறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.
துபாய்:
12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதின.
லீக் சுற்றுகள் முடிவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதியில் இலங்கையை வீழ்த்தி இந்தியாவும், 2வது அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இறுதி களத்தில் சந்திப்பது 11 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே லீக் சுற்றில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது நினைவு கூரத்தக்கது.
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 138 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்திய அணி 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
துபாய்:
12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், முதல் அரையிறுதியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சமிகா 42 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி 18 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மற்றொரு அரையிறுதியில் வங்கதேசத்தை பாகிஸ்தான் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
- முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவரில் 225 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை அணி 186 ரன்னில் சுருண்டது.
துபாய்:
12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
'பி' பிரி–வில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வங்கதேச அணி, இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த வங்கதேச அணி 46.3 ஓவரில் 225 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 49.1 ஓவரில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்களதேசம் 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3 விக்கெட் வீழ்த்திய வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் இக்பால் ஹூசைன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை நடைபெறும் முதலாவது அரை இறுதியில் இந்தியா- இலங்கை மோதுகின்றன. மற்றொரு அரை இறுதியில் வங்கதேசம்-பாகிஸ்தான் அணிகள் சந்திக்கின்றன.
- முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 408 ரன்களைக் குவித்தது.
- அந்த அணியின் அபிக்யான் குண்டு இரட்டை சதமடித்து அசத்தினார்.
துபாய்:
12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
'ஏ' பிரிவில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, மலேசியா உடன் மோதியது. டாஸ் வென்ற மலேசியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 408 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக அபிக்யான் குண்டு சிக்சர், பவுண்டரிகளாக விளாசி 209 ரன்கள் குவித்தார்.
மலேசியா சார்பில் முகமது அக்ரம் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, 409 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மலேசியா அணி களமிறங்கியது. இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மலேசிய அணி விரைவில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இறுதியில், 32.1 ஓவரில் மலேசிய அணி 93 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் 315 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தியா சார்பில் தீபேஷ் தேவேந்திரன் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகனாக அபிக்யான் குண்டு தேர்வு செய்யப்பட்டார்.
- இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இன்று மோதுகிறது.
- இதில் சூர்யவன்ஷி 171 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
துபாய்:
12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.
இதில் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் வங்காளதேசம், நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் இன்று 8 முறை சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இன்று விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணி தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே, வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். இதில் ஆயுஷ் மாத்ரே 4 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து சூர்யவன்ஷி மற்றும் ஆரோன் ஜார்ஜ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். குறிப்பாக சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அதனை தொடர்ந்து ஆரோன் அரை சதம் கடந்து விளையாடி வருகிறார்.
இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யவன்ஷி 171 ரன்களில் ஆட்டமிழந்தார். 29 ரன்னில் தனது முதல் இரட்டை சதத்தை அவர் தவறவிட்டார். இதில் 9பவுண்டரிகள், 14 சிக்சர்கள் அடங்கும். இதுவரை இந்திய அணி 32.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.
- ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் (20 வயதுக்குட்பட்டோர்) கால்பந்து தொடர் தாய்லாந்தில் நடைபெறுகிறது.
- இந்திய அணி தனது கடைசி தகுதிச்சுற்று ஆட்டத்தில் மியான்மருடன் மோதியது.
யாங்கோன்:
ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் (20 வயதுக்குட்பட்டோர்) கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற உள்ளது.
இதற்கான தகுதிச்சுற்று மியான்மரில் நடக்கிறது. இதில் இந்திய மகளிர் அணி டி பிரிவில், மியான்மர், இந்தோனேசியா, துர்க்மெனிஸ்தானுடன் இடம் பெற்றிருந்தது.
இந்தியா முதல் ஆட்டத்தில் இந்தோனேஷியாவுக்கு எதிராக சமனும் (0-0), 2-வது போட்டியில் துர்க்மெனிஸ்தானுக்கு எதிராக அபார வெற்றியும் (7-0) பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.
இந்நிலையில், இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் மியான்மருடன் விளையாடியது. இதில் வெற்றி பெற்றால் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் விளையாடிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் கோல் அடித்தது.
அதன்பின் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் மியான்மரை வீழ்த்தி ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்று அசத்தியது. இந்தியா தரப்பில் பூஜா வெற்றிக்குரிய அந்த கோலை அடித்தார்.
இந்திய அணி கடந்த 2006-ம் ஆண்டு ஜூனியர் (19 வயதுக்குட்பட்டோர்) ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாடி இருந்தது. அதன்பிறகு 20 ஆண்டு கழித்து தற்போதுதான் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய நேபாளம் 52 ரன்களில் ஆல் அவுட்டானது.
- இந்தியா சார்பில் ராஜ் லிம்பானி 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
துபாய்:
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.
ஏ பிரிவில் இந்திய அணி 2 ஆட்டங்களில் விளையாடி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றியும், பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியும் கண்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி 3-வது லீக் ஆட்டத்தில் இன்று நேபாள அணியுடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமால் 22.1 ஓவரில் 52 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் ஒரு பேட்ஸ்மேன்கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை.
இந்தியா சார்பில் ராஜ் லிம்பானி 7 விக்கெட்டும், ஆராத்யா சுக்லா 2 விக்கெட்டும், அர்ஷின் குல்கர்னி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
53 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 7.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. ஆதர்ஷ் சிங் 13 ரன்னும், அர்ஷின் குல்கர்னி 43 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 7 விக்கெட் வீழ்த்திய ராஜ் லிம்பானி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
- நேபாளத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசம் வீழ்த்தியது.
- விக்கெட்டை வீழ்த்திய சந்தோசத்தில் நேபாளம் அணியின் சுழற்பந்து வீச்சாளர் காயமடைந்தார்.
11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இதில் 5-வது லீக் ஆட்டத்தில் நேபாளம் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி 141 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேசம் அணி 28.4 ஓவரில் 142 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் விக்கெட்டை வீழ்த்திய சந்தோசத்தில் நேபாளம் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுவராஜ் காத்ரி காயமடைந்தார்.
வங்கதேச அணி வீரர் ஃபரித் ஹசன் 13 ரன்னில் யுவராஜ் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். அப்போது விக்கெட்டை கொண்டாடும் விதமாக தனது ஷீவை போன் பேசுவதுபோல வைத்து கொண்டாடினார். அடுத்த வந்த ரிசான் ஹொசான் கோல்டன் டக் ஆகி யுவராஜ் பந்தில் அவுட் ஆனார்.
இதனால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக துள்ளிக் குதித்து ஓடினார். சக வீரருடன் கைதட்டி கொண்டாடிய போது காலை சரியாக உன்ற முடியாமல் பிரண்டது. வலியால் துடித்த அவரை சக வீரர்கள் ஓய்வு அறைக்கு தூக்கி சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்று முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஷார்ஜா:
11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற யு.ஏ.இ. பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 44 ஓவரில் 137 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ரேயான் கான் அதிகபட்சமாக 35 ரன்னும், அக்ஷத் ராய் 26 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் யுதாஜித் குஹா 3 விக்கெட்டும், சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 138 என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் கடந்தனர். ஆயுஷ் மாத்ரே 67 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 76 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
- அரையிறுதி போட்டியில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- மற்றொரு அரையிறுதி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் இந்தியா (12 புள்ளி) முதலிடமும், ஜப்பான் (9 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
'பி' பிரிவில் பாகிஸ்தான் (12 புள்ளி) முதலிடத்தையும், மலேசியா (7 புள்ளி) 2-வது இடத்தையும் கைப்பற்றி அரையிறுதியை எட்டின.
அரையிறுதி போட்டியில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் மற்றொரு அரையிறுதி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் 5-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 5 ஆவது முறையாக ஜூனியர் ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
- டாஸ் வென்று முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற யு.ஏ.இ. பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 44 ஓவரில் 137 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 138 என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
இப்போட்டியில் ஐக்கிய அரபு அமீரக வீரர் அடித்த பந்தை பவுண்டை லைனில் தடுத்த இந்திய வீரர்கள் விக்கெட் கீப்பர் ஹர்வன்ஷ் சிங்கிடம் பந்தை வீசினர். அந்த பந்தை பிடித்த ஹர்வன்ஷ் சிங் திரும்பி பார்க்காமலேயே எம்.எஸ்.டோனியை போல ஸ்டம்பை தாக்கி ரன் அவுட் செய்ய முயற்சித்தார்.
ஆனால் அதற்கு ஐக்கிய அரபு அமீரக வீரர் கிரீசுக்குள் வந்துவிட்டதால் ரன் அவுட் இல்லாமல் போனது. ஆனால் டோனியை போல நோ-லுக் ரன் அவுட்டை முயற்சித்த இளம் விக்கெட் கீப்பர் ஹர்வன்ஷ் சிங்கை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
- டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா 3 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஷார்ஜா:
11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
லீக் சுற்றுகள் முடிவில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை , வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில், 2வது அரையிறுதியில் இலங்கை, இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் லக்வின் அபேசிங்க 69 ரன் எடுத்தார்.
இந்தியா சார்பில் சேத்தன் சர்மா 3 விக்கெட், ஆயுஷ் மத்ரே, கிரண் சோர்மலே ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் இலங்கை பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
ஆயுஷ் மத்ரே 34 ரன்னிலும், ஆண்ட்ரே சித்தார்த் 22 ரன்னிலும் அவுட்டாகினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி அரை சதமடித்து 67 ரன்னுக்கு அவுட்டானார்.
இறுதியில் இந்தியா 21.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது வைபவ் சூர்யவன்ஷி க்கு வழங்கப்பட்டது.
முதல் அரையிறுதியில் பாகிஸ்தானை சுருட்டி எளிதில் வீழ்த்தியது வங்கதேசம். இறுதிப்போட்டியில் வங்கதேசத்துடன் இந்திய அணி மோதுகிறது.






