என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அணி கேப்டன்
- உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளிடம் இலங்கை அணி தோல்வி அடைந்தது.
- இதன்மூலம் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
கொழும்பு:
டி20 உலகக் கோப்பைக்கான சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளிடம் இலங்கை அணி தோல்வி அடைந்தது. இதன்மூலம் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறாமல், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில், இலங்கை அணியை அரையிறுதிக்கு அழைத்துச் செல்ல முடியாததற்காக ரசிகர்களிடம் அந்நாட்டு கேப்டன் தசுன் ஷனகா மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக, ஷனகா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நீங்கள் விரும்பியதை எங்களால் வழங்க முடியவில்லை. அதற்காக நாங்கள் வருந்துகிறோம். தற்போதைய நிலைமையை எங்களால் நிச்சயம் மாற்ற முடியும்.
என் மீதும், இலங்கை அணி மீதும் உங்களுக்கு இருக்கும் வேதனை, கோபத்தை நன்கு அறிவேன். இதனால் எழுந்துள்ள அனைத்து விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை விட்டு விடாதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.






