search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stone Pelting"

    • பஸ் கம்மாபுரம் அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது.
    • பஸ் நிறுத்திய டிரைவர், பின்பக்கம் வந்து பார்த்து, உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

    கடலூர்:

    சேத்தியாத்தோப்பில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு டவுன் பஸ் ஒன்று இன்று காலை விருத்தாசலத்திற்கு புறப்பட்டது. இந்த பஸ் கம்மாபுரம் அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது.இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர், பஸ்சின் மீது கற்களை வீசியுள்ளார். இது பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த திடீர் நிகழ்வால் பஸ்சில் பயணம் செய்தவர்கள் அலறினர்.பஸ் நிறுத்திய டிரைவர், பின்பக்கம் வந்து பார்த்து, உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இந்த பஸ்சினை பின்தொடர்ந்து வந்த மற்றொரு டவுன் பஸ் டிரைவரும், பஸ்சினை ஓரங்கட்டி நிறுத்தினார்.கல்வீசிய மர்மநபரை கைது செய்தால் மட்டுமே பஸ்சினை எடுப்போமென 2 பஸ் டிரைவர்களும் கூறினர். இதனால் வேலைக்கு செல்வதற்காக பஸ்சில் வந்த பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கம்மாபுரம் போலீசார், அரசு பஸ் டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவரை பிடித்து விடுவோம். நீங்கள் பயணிகளின் நலன் கருதி பஸ்சினை இயக்குங்கள் என்று போலீசார் கூறினர்.இதனை ஏற்ற அரசு டவுன் பஸ் டிரைவர்கள், அங்கிருந்து பஸ்சினை இயக்கினர். இதையடுத்து பஸ்சில் வந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டபடி பயணம் செய்தனர். இந்த திடீர் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • விருத்தாசலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • அறக்கட்டளை ஒன்றை விருத்தாசலத்தில் நடத்தி வருகிறார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஹவுசிங்போர்டை சேர்ந்தவர் புகழேந்தி. இவர் மணவாளநல்லூரை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.தியாகராஜன் மகனும், தி.மு.க பிரமுகருமான இளையராஜாவை கடந்த 8-ந்தேதி 6 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்றனர். அவர்களை விருத்தாசலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    இந்த கொலை முயற்சி வழக்கில் புகழேந்தியும் உள்ளார். புகழேந்தி இந்த வழக்கில் முக்கிய குற்றவாலியான ஆடலரசு தம்பி ஆவார். இவர் அறக்கட்டளை ஒன்றை விருத்தாசலத்தில் நடத்தி வருகிறார். அந்த அறக்கட்டளைக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி புகழேந்தி வீட்டின் முன்புறம் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு மர்ம கும்பல் ஒன்று புகழேந்தி வீட்டிற்கு வந்தது. அப்போது அந்த கும்பல் வீட்டின் முன்பு இருந்த ஆம்புலன்சை கல்லால் தாக்கி கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து சென்றனர். இன்று காலை வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த தாக்குதலால் ரெயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • படுகாயம் அடைந்த கேரள பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    திருச்சி:

    காரைக்காலில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 8.30 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு பயணிகள் ஏறி, இறங்கினர்.

    அதன் பின்னர் கரூர் நோக்கி அந்த ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில் முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொது பெட்டிகளில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

    இந்த ரெயில் நேற்று இரவு 9 மணி அளவில் கரூர் மாவட்டம் குளித்தலை ரெயில் நிலையத்துக்கு முன்னதாக மருதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது மர்ம நபர்கள் சிலர் ரெயில் மீது சரமாரியாக கருங்கற்களை வீசி தாக்கினர். இந்தக் கற்கள் ரெயிலின் பொதுப் பெட்டியில் வந்து விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த தாக்குதலால் ரெயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த நிதின் (வயது 30) என்ற பயணியின் நெற்றி பொட்டில் கல் தாக்கியதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. உடனடியாக சக பயணிகள் அவருக்கு முதலுதவி செய்தனர். மேலும் இது தொடர்பாக கரூர் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

    கல் வீசி தாக்குதல் சம்பவம் நடந்த போதும் ரெயில் நடுவழியில் எங்கும் நிறுத்தப்படவில்லை. தகவல் அறிந்த கரூர் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்தில் தயாராக நின்றனர். பின்னர் படுகாயம் அடைந்த கேரள பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால் அவர் அதே ரெயிலில் ஊருக்கு புறப்பட்டுச் செல்ல விரும்பியதால் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இசையரசன், போலீஸ் ஏட்டு வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதை ஆசாமிகள் கல் வீச்சில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    ஓடும் ரெயிலில் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரையில் கொத்தனார் கல்வீசி தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பி.பி.குளம் இந்திரா நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 61), கொத்தனார். இவரது மனைவி சிவகாமி. மோகனும், ஆட்டோ டிரைவர் வடிவேல் (43) என்பவரும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர்களுக்கு இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று வடிவேல் ஓட்டி வந்த ஆட்டோ நிலை தடுமாறி மோகன் வீட்டின்மீது மோதியது.

    இதனை மோகன் தட்டி கேட்டார். அப்போது அங்கு வந்த வடிவேல் மனைவி விஜி கணவருக்கு ஆதரவாக பேசினார். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வடிவேல், அவரது மனைவி விஜி ஆகியோர் கல்வீசி மோகனை கொடூரமாக தாக்கினர். இந்த சம்பவத்தில் மோகன் படுகாயம் அடைந்தார்.

    அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக மோகன் மனைவி சிவகாமி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் மோகனை ஆட்டோ டிரைவர் வடிவேல், அவரது மனைவி விஜி ஆகிய 2 பேரும் கல்வீசி தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

    போலீசார் மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொத்தனாரை கொடூரமாக கொலை செய்த கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்றஇரவு2 அரசு பஸ்கள் நின்று கொண்டி ருந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பஸ்களின் கண்ணாடி மீது கல் வீசினார்.
    • அதிர்ச்சியடைந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அந்த மர்ம நபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படை த்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் 2 அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்று இரவு சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கு ஒரு அரசு பஸ்சும், கள்ளக்குறிச்சியில் இருந்து ஆத்தூர் செல்வதற்காக ஒரு பஸ்சும் நின்று கொண்டி ருந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பஸ்களின் கண்ணாடி மீது கல் வீசினார். இதனால் 2 பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அந்த மர்ம நபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படை த்தனர்

    . விசாரணையில் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என்பதும், மது போதையில் பஸ்சின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்ததும் தெரிய வந்தது. அவரை இன்ஸ்பெக்டர் சத்திய சீலன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.   அரசு பஸ்சின் கண்ணா டியை உடைத்ததால் அதில் வந்த பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    • கெண்டே–பாளையம், தேக்கம்பட்டி வழியாக பெரியபுத்தூருக்கு தனியார் பஸ் இயங்கி வருகிறது.
    • டிரைவருக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் பத்ரகாளி அம்மன் கோவிலில் இருந்து சாலையூர், கெண்டே–பாளையம், தேக்கம்பட்டி வழியாக பெரியபுத்தூருக்கு தனியார் பஸ் இயங்கி வருகிறது.

    இந்த பஸ்சின் டிரைவராக வீரபாண்டி பிரிவை சேர்ந்த மனோஜ்குமார்(வயது24) என்பவரும், நடத்துனராக கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு சாவடியூர் புதூரை சேர்ந்த மணிகண்டன்(25) என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று இரவு பஸ்சை மனோஜ்குமார் ஓட்டி கொண்டு இருந்தார். பஸ்சில் 6 பயணிகளும் இருந்தனர்.அப்போது, காரமடை அடுத்துள்ள கெண்டேபாளையம் பகுதியில் சென்ற போது, சாலையின் குறுக்கே இளைஞர்கள் சிலர் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தினர்.

    அப்போது, இருசக்கர வாகனத்தை எடுக்குமாறு டிரைவர் கூறினார். இதனால் டிரைவருக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பஸ்சின் மீது இளைஞர்கள் பேருந்தின் மீது சாலையில் கிடந்த கல்லை எடுத்து வீசி கண்ணாடியை உடைத்துள்ளனர்.

    மேலும், டிரைவர் மனோஜ்குமார் மீது கல்வீசி தாக்கினர். இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்த பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியாகினர். உடனடியாக சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்த காரமடை சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராஹீம், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜூ ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த மனோஜ்குமாரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொண்டேபாளையத்தை சேர்ந்த ரகுராம்(21), கவுதம்(20), சுதாகர்(24), கவிமணி என்ற பகவதி(21), சுதி ஆனந்த்(22), புங்கம்பாளையம் பிரிவை சேர்ந்த நவீன்குமார்(19) ஆகியோர் தான் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மேச்சேரி- ஓமலூர் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் மேலாளராக உள்ளார்.
    • பங்க் ஊழியர்களிடம் வாலிபர் ஒருவர் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு, பெட்ரோல் பம்ப் மீது கல்லை கொண்டு எரிந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள சாத்தப்பாடியை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 53). இவர் மேச்சேரி- ஓமலூர் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் மேலாளராக உள்ளார். கடந்த 17-ந்தேதி பங்க் ஊழியர்களிடம் வாலிபர் ஒருவர் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு, பெட்ரோல் பம்ப் மீது கல்லை கொண்டு எரிந்தார். இது தொடர்பாக வேலாயுதம், மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மேச்சேரி பாரப்பட்டியை சேர்ந்த சூர்யபிரகாஷ் (வயது 27) என்பவர் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காளி தேவியின் உக்கிரத்தை தணிக்கும் வகையில் வினோதமான வழிபாடு நடைபெற்றது. #HimachalDhamiVillage #StonePeltingRitual
    ஷிம்லா:

    இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகையான தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தென் மாநிலங்களில் 6-ம் தேதியும், வட மாநிலங்களில் 7-ம் தேதியும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதேபோல் வெளிநாடுகளிலும் உள்ள இந்துக்களும் இப்பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

    ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக தீபாவளியை முன்னிட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், இமாச்சல பிரதேசத்தில் உள்ள தாமி என்ற கிராமத்தில், தீபாவளியையொட்டி வினோதமான ஒரு வழிபாடு நடத்தப்படுகிறது. தலைநகர் சிம்லாவில் இருந்து 26 கிமீ தொலைவில் இந்த கிராமத்தில், மக்களின் காவல் தெய்வமான காளி தேவியின் உக்கிரத்தை தணிக்கும் வகையில், பாரம்பரியமாக இந்த பூஜை நடத்தப்படுகிறது.



    அதாவது, கிராமத்தின் இரண்டு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து கற்களை வீசி தாக்கிக்கொள்வார்கள். அதில் முதலில் காயமடையும் நபர் துணிச்சல் மிக்கவராக கருதப்படுகிறார். அத்துடன், அவர் தன் ரத்தத்தை காளியின் நெற்றியில் திலகமாக பூசுவார். இந்த ஆண்டு தாமி கிராமத்தில் நேற்று கல்வீச்சு சடங்கு நடந்தது. இதில், 28 வயது வாலிபர் சுராஜ் முதலில் காயமடைந்ததால், அவர் தனது ரத்தத்தினால் காளிக்கு திலகமிட்டார். அப்போது கிராம மக்கள் அனைவரும் காளிதேவியை வணங்கி வழிபட்டனர்.

    இந்த வினோதமான கல்வீசி தாக்கும் சடங்கில் பங்கேற்ற மேலும் சிலர் காயமடைந்தனர். அனைவருக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த வழிபாடு ஆபத்து நிறைந்ததாக இருந்தபோதிலும், மக்களின் வலுவான கடவுள் நம்பிக்கைக்கு மதிப்பு அளிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #HimachalDhamiVillage #StonePeltingRitual


    ×