search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coimbtore"

    • கெண்டே–பாளையம், தேக்கம்பட்டி வழியாக பெரியபுத்தூருக்கு தனியார் பஸ் இயங்கி வருகிறது.
    • டிரைவருக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் பத்ரகாளி அம்மன் கோவிலில் இருந்து சாலையூர், கெண்டே–பாளையம், தேக்கம்பட்டி வழியாக பெரியபுத்தூருக்கு தனியார் பஸ் இயங்கி வருகிறது.

    இந்த பஸ்சின் டிரைவராக வீரபாண்டி பிரிவை சேர்ந்த மனோஜ்குமார்(வயது24) என்பவரும், நடத்துனராக கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு சாவடியூர் புதூரை சேர்ந்த மணிகண்டன்(25) என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று இரவு பஸ்சை மனோஜ்குமார் ஓட்டி கொண்டு இருந்தார். பஸ்சில் 6 பயணிகளும் இருந்தனர்.அப்போது, காரமடை அடுத்துள்ள கெண்டேபாளையம் பகுதியில் சென்ற போது, சாலையின் குறுக்கே இளைஞர்கள் சிலர் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தினர்.

    அப்போது, இருசக்கர வாகனத்தை எடுக்குமாறு டிரைவர் கூறினார். இதனால் டிரைவருக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பஸ்சின் மீது இளைஞர்கள் பேருந்தின் மீது சாலையில் கிடந்த கல்லை எடுத்து வீசி கண்ணாடியை உடைத்துள்ளனர்.

    மேலும், டிரைவர் மனோஜ்குமார் மீது கல்வீசி தாக்கினர். இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்த பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியாகினர். உடனடியாக சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்த காரமடை சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராஹீம், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜூ ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த மனோஜ்குமாரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொண்டேபாளையத்தை சேர்ந்த ரகுராம்(21), கவுதம்(20), சுதாகர்(24), கவிமணி என்ற பகவதி(21), சுதி ஆனந்த்(22), புங்கம்பாளையம் பிரிவை சேர்ந்த நவீன்குமார்(19) ஆகியோர் தான் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரகாஷ் டாஸ்மாக் பாரில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.
    • போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30). இவர் ரத்தினபுரியில் உள்ள டாஸ்மாக் பாரில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது பாருக்கு டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பு 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் பிரகாஷிடம் மதுபாட்டில் வாங்கி வரும்படி கூறினர். அதற்கு அவர் டாஸ்மாக் கடை திறந்தால் தான் மது கிடைக்கும் என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை காட்டி மிரட்டி பிரகாஷிடம் இருந்த ரூ. 200 பணத்தை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து அவர் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் பார் காசாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்ற கண்ணப்ப நகரை சேர்ந்த பெயிண்டர் கார்த்திக் (30), லிங்கபூபதி (23), காமாட்சி நகரை சேர்ந்த விக்னேஷ்வரன் (26) ஆகியோரை கைது செய்தனர்.

    பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • கோபாலகிருஷ்ணன் தள்ளுவண்டியில் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார்.
    • சிறுவர்கள் இது குறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூர் அருகே உள்ள மேட்டூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 26). தள்ளுவண்டியில் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இவர் தினசரி வியாபாரத்துக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் போது அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் தொந்தரவு கொடுத்து கிண்டல் செய்து வந்தனர்.

    சம்பவத்தன்று கோபாலகிருஷ்ணன் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டு சென்றார். அப்போது சிறுவர்கள் தெருவில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர். கோபாலகிருஷ்ணன் வீட்டில் சாப்பிடுவதற்காக அமர்ந்தார். அப்போது சிறுவர்கள் அடித்த பந்து இவரது தட்டில் வந்து விழுந்தது.

    இதனால் கோபாலகிருஷ்ணனுக்கு ஆத்தரம் ஏற்பட்டது. உடனடியாக வெளியே வந்த அவர் அங்கு கிடந்த செங்கலை எடுத்து சிறுவர்கள் மீது வீசி விரட்டினார். வீட்டிற்கு சென்ற சிறுவர்கள் இது குறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.

    உடனடியாக சிறுவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (47), செந்தில்குமார் (39), சசிகுமார் (47), பிரதீப் (24) ஆகியோர் நடந்ததை கேட்பதற்காக கோபாலகிருஷ்ணனின் வீட்டிற்கு சென்றார். அவர்கள் சிறுவர்களை விரட்டியது குறித்து கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பார்த்த கோபாலகிருஷ்ணனின் மனைவி தனது கணவரை 4 பேரும் ஏதாவது செய்து விடுவார்கள் என நினைத்து வீட்டிற்குள் தள்ளி கதவை பூட்டினார். பின்னர் இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    வீட்டிற்குள் இருந்த கோபாலகிருஷ்ணன் போலீசார் வந்தால் சிறுவர்களை செங்கல் வீசி விரட்டியதற்காக தன் மீது வழக்கு போடுவார்கள் என நினைத்தார். இதனால் எப்படியும் தன்மீது வழக்கு போடுவார்கள் என நினைத்த கோபாலகிருஷ்ணன் 4 பேரையும் கத்தியால் குத்துவது என முடிவு செய்தார். அதன்படி வீட்டில் இருந்த கத்தி மற்றும் சுத்தியலுடன் கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்தார்.

    பின்னர் அங்கு நின்று கொண்டு இருந்த கண்ணன், செந்தில்குமார், சசிகுமார், பிரதீப் ஆகியோரை கத்தியால் குத்தி, சுத்தியலால் தாக்கினர். அதற்குள் அங்கு வந்த போலீசார் அவரை கைது செய்தனர். கத்திக்குத்தில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போத்தனூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • மனைவி விவாகரத்து பெற்றதால் விபரீத முடிவை எடுத்தார்.
    • ‘வங்கி பணத்தை எடுத்து இறுதிச் சடங்கு செய்ய வேண்டுேகாள் விடுத்தார்.

    கோவை

    கோவை தடாகம் அருகே உள்ள பன்னிமடை ஏ.என்.டி. நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 38). டிரான்ஸ்போர்ட் காண்டிராக்டர்.இவருக்கும் வனிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து வனிதா தனது கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். கடந்த 5 ஆண்டுகளாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.வனிதா விவாகரத்து கேட்டு தனது கணவர் வினோத்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அவரும் விவாகரத்து கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்தது வந்தது. வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்து நீதிபதி 2 பேருக்கும் விவாகரத்து வழங்கினார். இதனால் வினோத்குமார் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த வினோத்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பு வினோத்குமார் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்க வில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. அண்ணா, பாப்பாவை நன்றாக பார்த்துக்கொள். கடந்த 10 மாதங்களாக எனக்கு சாப்பாடு கொடுத்து பார்த்துக்கொண்ட பக்கத்து வீட்டுக் காரர்களுக்கு நன்றி. அண்ணா என்னுடைய எல்.ஐ.சி. பணத்தை எடுத்து வங்கியில் டெபாசிட் செய்து உள்ளேன். அந்த பணத்தை எடுத்து என் இறுதி சடங்கிற்கு செலவிடவும். இவ்வாறு அதில் எழுதி இருந்தார்.பின்னர் போலீசார் வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

    கோவை,

    கோவை பாப்ப நாயக்கன் பாளையம் பரமேஸ்வரன் லே-அவுட் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. . அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த கேரள மாநிலம் சித்தூரை சேர்ந்த சூர்யா (வயது 25), பொள்ளாச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் அகிலன் (20), புதுக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் இமான் ஷா (18) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ரத்தினபுரி போலீசார் சாஸ்திரி நகரில் கஞ்சாவை பதுக்கி விற்ற சங்கனூரை சேர்ந்த ஷாஜூ (19) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் ஷாஜூவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ஆலாந்துறை போலீசார் பூலுவப்பட்டி மார்க்கெட் அருகே கஞ்சாவை பதுக்கி விற்ற பெயிண்டர் பிரசாந்த் (19) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர். 

    • வாலிபரிடம் தேசிய கீதம் பாடும்படி கூறினர்.
    • போலி பாஸ்போர்ட் எடுத்து ஷார்ஜாவுக்கு வேலைக்கு சென்று உள்ளார்.

    கோவை,

    வளைகுடா நாடான ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு அதிகாலை 4.30 மணியளவில் ஏர் அேரபியா விமானம் வந்தது.

    விமானத்தில் இருந்து பயணிகள் வெளியே வந்து கொண்டு இருந்தனர். அப்போது விமான நிலைய அதிகாரிகள் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் உடைமைகளை சோதனை செய்து கொண்டு இருந்தனர். அதிகாரிகளுக்கு விமானத்தில் வந்த வாலிபர் ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அதிகாரிகள் அந்த வாலிபரின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர். அந்த பாஸ்போர்ட் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா முகவரியில் இருந்தது. மேலும் அந்த பாஸ்போர்ட் போலியானது என்பது தெரிய வந்தது.இது குறித்து அதிகாரிகள் அந்த வாலிபர் விசாரணை நடத்தினர்.

    ஆனால் அந்த வாலிபர் தான் இந்தியன் எனவும், தனது சொந்த மாநிலம் மேற்குவங்கம் என கூறினார்.

    இதனையடுத்து அதிகாரிகள் அந்த வாலிபரிடம் தேசிய கீதம் பாடும்படி கூறினர். ஆனால் அந்த வாலிபருக்கு பாட தெரியவில்லை.

    தொடர்ந்து அந்த வாலிபரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் வங்கதேச நாட்டை சேர்ந்த அன்வர் உசேன் (வயது 28) என்பது தெரிய வந்தது.

    டெய்லரான இவர் முதலில் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் போலி பாஸ்போர்ட் எடுத்து ஷார்ஜாவுக்கு வேலைக்கு சென்று உள்ளார். அங்கு போதிய சம்பளம் கிடைக்காததால் மீண்டும் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கோவைக்கு வந்தது தெரிய வந்தது.

    போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கோவைக்கு வந்த வங்கதேச வாலிபரை விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீ சாரிடம் ஒப்படை த்தனர். போலீசார் அவர் மீது வெளி நாட்டினர் என்பதை மறைத்து போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • பொள்ளாச்சி நகரின் மத்தியில் கோவில் உள்ளது.
    • அன்னதானம் நடைபெறுகிறது.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி நகரின் மத்தியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 3 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப் பட்டது. இதையடுத்து விமான பாலாலயம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. மேலும் திருப்பணிகள் தொடங்கி நடந்தது. பழமை வாய்ந்த விமான கோபுரத்துக்கும், சிற்பங்களுக்கும் வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

    இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 12-ந்தேதி யாக சாலை அமைக்கும் பணிக்கு கால்கோள் போடப்பட்டது. நேற்று கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையொட்டி விநாயகர் வழிபாடு, புண்யாகம், அனுக்ஞை, தன பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

    இன்று காலை 8.45 மணிக்கு விநாயகர் பூஜை, 10.30 மணிக்கு திரவியாகுதி, 11 மணிக்கு மூலவருக்கு பிரசன்னாபிஷேகம், நாளை (புதன்கிழமை) 9.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, இரவு 7 மணிக்கு யாக 5 சாலை பிரவேசம், முதற்கால 5 யாக பூஜை நடக்கிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாகபூஜை நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான கும் பாபிஷேகம் வருகிற 27-ந்தேதி காலை 9.45 மணிக்கு ராஜகோபுரம், மாரியம்மன் விமான கோபுர மகா கும்பாபிஷேகமும், காலை 9.55 மணிக்கு விநாயகர், முருகன், அங்காளம்மன் மற்றும் அன்னை மாரியம்மன் மூலாலய மகா கும்பாபிஷேகமும் நடைபெ றுகிறது.

    இதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார வழிபாடு, அன்னதானம் நடைபெறுகிறது. மாலையில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

    ×