search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் டாஸ்மாக் பார் காசாளரிடம் பணம் பறிப்பு
    X

    கோவையில் டாஸ்மாக் பார் காசாளரிடம் பணம் பறிப்பு

    • பிரகாஷ் டாஸ்மாக் பாரில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.
    • போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30). இவர் ரத்தினபுரியில் உள்ள டாஸ்மாக் பாரில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது பாருக்கு டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பு 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் பிரகாஷிடம் மதுபாட்டில் வாங்கி வரும்படி கூறினர். அதற்கு அவர் டாஸ்மாக் கடை திறந்தால் தான் மது கிடைக்கும் என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை காட்டி மிரட்டி பிரகாஷிடம் இருந்த ரூ. 200 பணத்தை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து அவர் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் பார் காசாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்ற கண்ணப்ப நகரை சேர்ந்த பெயிண்டர் கார்த்திக் (30), லிங்கபூபதி (23), காமாட்சி நகரை சேர்ந்த விக்னேஷ்வரன் (26) ஆகியோரை கைது செய்தனர்.

    பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×