search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 people arrested"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    • மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பஜார் பகுதியில் கடந்த ஜூலை 25-ந் தேதி தொழிலதிபர் குமரன் (எ) குமரவேல் அவரது அலுவலகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப் பட்டவர்களில் 7 பேர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பொது மக்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் இவர்களது நடவடிக்கை இருந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், மேலும் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையிலும் குமரவேல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் (27), விக்னேஷ் (26), நவ்பல் (22), ஞானசேகர் (58), விக்ரமன் (56) ஆகிய 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் ஜெயசீலன் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி விருதுநகர் மேற்கு போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பணம் இரட்டிப்பு தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 2 லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 51). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் வருசநாடு வாலிப்பாறையைச் சேர்ந்த பார்த்திபன் (42) தொழில் முறையில் அறிமுகமாகி உள்ளார்.

    இவர்கள் பழக்கம் அதிகரித்த நிலையில் ரவிச்சந்திரனிடம் பார்த்திபன் தனக்கு ரூ.2 லட்சம் கொடுத்தால் அதனை 100 ரூபாய் நோட்டுகளாக ரூ.3 லட்சம் வரை கூடுதலாக தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    அதன்படி ரவிச்சந்திரன் ரூ.2 லட்சம் பணத்துடன் தாடிச்சேரி செல்லும் கரட்டுப்பாதை நாகம்மாள் கோவில் அருகே காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் ரவிச்சந்திரனிடம் பணத்தை பெற்றுக் கொண்டு கூறியபடி ரூ.3 லட்சம் பணம் தராமல் ஏமாற்றிச் சென்றனர்.

    அதன் பிறகு பார்த்திபனிடம் செல்போனில் பேசிய போதும், அவர் சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார். அதன் பிறகுதான் பணத்தை பறித்துச் சென்றது பார்த்திபனின் கூட்டாளிகள் என தெரிய வந்தது.

    இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் ரவிச்சந்திரன் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ், சப்-இன்ஸ்பெக்டர் கோகுல கண்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட பார்த்திபன், கடமலைக்குண்டுவைச் சேர்ந்த சாம்சன் (46), வாலிப்பாறையைச் சேர்ந்த சின்னன் (48), பசும்பொன் (40), தர்மாபுரியைச் சேர்ந்த சுபாஷ் (43) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

    இவர்கள் இதே போல் வேறு யாரிடமாவது பண மோசடியில் ஈடுபட்டுள்ளனரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாலிபர் ரெங்கநாதபுரம் மலைக்கோவில் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • கொலை சம்பந்தமாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள செல்லமந்தாடி ரோடு ஓடைபட்டியை சேர்ந்த நடராஜன் மகன் ஆனந்தசுதன் (23). 10ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவரது தந்தை இறந்துவிடவே தாய் சிவகாமி (45). அறிவுத்திரு க்கோவில் பைபாஸ் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    நேற்று இரவு ரெங்கநாத புரம் மலைக்கோவில் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்தசுதன் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீ சாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டு க்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து டி.எஸ்.பி. உதயகுமார் மேற்பார்வை யில் தாலுகா இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், தாடி க்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் அடங்கிய தனி படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கொலையில் ஈடுபட்ட லட்சுமிநகரை சேர்ந்த முரளிராஜா (35), குடைபாறைப்பட்டியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (32), கே.கே.நகரை சேர்ந்த இன்னாசி ஸ்டீபன் (31), முத்தழகுபட்டியை சேர்ந்த ராபின் ஸ்டீபன் (28), அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (29) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசா ரணை நடத்தியதில் திடுக்கி டும் தகவல்கள் வெளி யானது. அறிவுத்தி ருக்கோ வில் அருகே முரளிராஜா என்பவர் ஓட்டல் நடத்தி வந்துள்ளார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த 2 மாதமாக கடையை பூட்டிவிட்டார். இந்நிலையில் கடையில் வேலை பார்த்த ஆனந்தசுதனின் தாய் சிவகாமி இடத்து உரிமை யாளரிடம் தாங்கள் கடையை நடத்துவதாக கேட்டுள்ளனர். அவரும் சம்மதிக்கவே ஆனந்த் மெஸ் என்ற பெயரில் ஒருவாரமாக கடை நடத்தி வந்துள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் ஏற்கனவே முரளிராஜா விடம் கடன் கொடுத்தவர்கள் கடைக்கு தேடி வந்துள்ளனர். அவர்களிடம் ஆனந்தசுதன் தனக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், தற்போது கடையை தானே நடத்து வதாகவும் கூறியுள்ளார். மேலும் முரளிராஜாவின் வீட்டையும் அடையாளம் காட்டியுள்ளார். இதனால் கடன் காரர்கள் தினந்தோ றும் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த முரளிராஜா அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி அவரது தினசரி நட வடி க்கைகளை கண்காணித்து நேற்று இரவு கடைமுடிந்து வீட்டிற்கு செல்லும் போது தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முரளிராஜா தீர்த்துக்கட்டியுள்ளார்.

    இதனையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்பு டைய கல்லுப்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். அவரையும் போலீசார் தேடி வருகின்ற னர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சட்டவிரோத மது விற்ப னையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
    • மேலும் அவர்கள் பதுக்கி வைத்தி ருந்த 41 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    சட்டவிரோத மது விற்ப னையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு தாலு கா, தாளவாடி, அம்மாபே ட்டை, அந்தியூர், கடம்பூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதி யில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடு பட்டிருந்தனர்.

    அப்போ து அரசு மதுபா னத்தை சட்ட விரோதமாக கடத்தி வந்து அதிக விலை க்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த, ஈரோடு, மேட்டுக்கடையை சேர்ந்த நாகராஜ் (45), தாள வாடி நேரு நகரைச் சேர்ந்த ஆரோ க்கியசாமி (47), அந்தி யூர், கண்ணப்ப–ள்ளியைச் சேர்ந்த செந்தில் (42), அந்தி யூர், வ.உ.சி. நகரைச் சேர்ந்த தர்மராஜ் (19), அந்தியூரைச் சேர்ந்த சின்னக்கண்ணன் (55) ஆகிய 5 பேரைக் கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்கள் பதுக்கி வைத்தி ருந்த 41 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு திருநகர் காலனி ஜெயகோபால் வீதியில் பழைய டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் கருங்கல்பாளையம் போலீசார் அப்பகுதிக்கு சென்று சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்றதாக கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த சந்திரசேகரன் (30), அதேபகுதியை சேர்ந்த சக்திவேல் (37) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 138 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.3,690 பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் மது விலக்கு போலீசார் மேற்கொண்ட ரோந்தில் ஈரோடு வெட்டுக்காட்டு வலசு பகுதியில் மது விற்றதாக மணிவேல்(40), பெரியவலசு பகுதியில் சுப்பிரமணி மனைவி அனுசியா (48), பவானி பகுதியில் வெள்ளியங்கிரி (52) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பணம் மற்றும் சீட்டு கட்டுகளுடன் சூதாடி கொண்டு இருந்தனர்.
    • போலீசார் அவர்கள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் காமாட்சி அம்மன் கோவில் அருகே பங்களாப்புதுார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் சிலர் அமர்ந்து கொண்டு பணம் மற்றும் சீட்டு கட்டுகளுடன் சூதாடி கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி னர்.

    இதில் அவர்கள் கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டடிபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (52), திருப்பூர் ஜே.பி.நகரை சேர்ந்த அருள்மணி (46), டி.என்.பாளையம் காமராஜ் வீதியை சேர்ந்த ஈஸ்வரன் (58), டி.என்.பாளையம் குமரன் கோவில் வீதியை சேர்ந்த ராஜகோபால் (50) மற்றும் டி.என்.பாளையம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த ஈஸ்வரன் (56) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.4,700 பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து பங்களா ப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 5 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அதனை மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்தனர்.


    மதுரை

    மதுரை கீரைத்துறை சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் அனுப்பானடி பொண்ணுதோப்பு அருகில் சென்றபோது சந்தேகத்துக் கிடமான வகையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களை போலீசார் சோதனை செய்தபோது, அவர்களிடம் அரிவாள் மற்றும் ஆயுதங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் அனுப்பானடி அம்பேத்கர் நகரை சேர்ந்த அண்ணன்-தம்பியான போஸ் மகன்கள் பிரவீன் குமார் என்ற அய்யர் (வயது25), செந்தில்குமார் (19) என்று தெரியவந்தது. அவர்கள் தாக்குதலுக்கு பதுங்கியிருந்ததால் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மற்றொரு சம்பவம்

    திருநகர் சப்-இன்ஸ்பெக்டர் குமாரி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் தனக்கன்குளம் போஸ்ட் ஆபீஸ் அருகில் சென்றபோது அவர்களை கண்டதும் 4 மர்ம நபர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 3 பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அவர்களிடம் சோதனை செய்தபோது கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தன. அதனை மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்தனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் திருநகர் மெயின்ரோடு ஜோசப் நகர் சின்னசாமி மகன் சுந்தரமூர்த்தி (23), விளாச்சேரி ஆதி சிவன் நகர் உதயன் மகன் அலெக்ஸ் (23), திருநகர் ஜோசப் நகர் 3-வது தெரு பிச்சை மகன் சுரேஷ் (23), நெல்லையப்பபுரம் அருண் (41) என்று தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அருண் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அவர் கூலிப்படையை ஏவி வெட்டிக்கொல்ல முயன்றார்.
    • கொலைக்கு பயன்படுத்த ப்பட்ட மோட்டார் சைக்கிள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்தவர் கோகிலா தங்கசாமி. இவர் மதுரை காமராஜர் பல்கலை க்கழகத்தின் பேராசிரிய ராகவும், காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், லட்சுமி கல்வியியல் கல்லூரியில் முதல்வராகவும் பணி புரிந்தவர். இவரது மகன் தமிழிசை (வயது35). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரை கடந்த மாதம் 30ந் தேதி 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டினர். படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டார். இது குறித்து சின்னாளபட்டி இன்ஸ்பெ க்டர் வெங்கடாசலம் தலைமை யில் தனிப்படை அமைக்க ப்பட்டு குற்றவாளி களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் முத்தழகு பட்டியை சேர்ந்த சைமன் செபாஸ்டின் (22), ரிச்சர்டு சச்சின் (25), பேகம்பூர் ரபிக்ராஜா (21), காங்கே யத்தை சேர்ந்த பாண்டியன் (25), விராலிபட்டியை சேர்ந்த சிவசங்கர் (24) ஆகியோர் கைது செய்யப்ப ட்டுள்ளனர்.

    கோகிலா தங்கசாமிக்கும், உசிலம்பட்டியை சேர்ந்த மலர்விழி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் மலர்விழி காந்திகிராமம் லட்சுமி கல்வியியல் கல்லூரியில் முதல்வராக பொறு ப்பேற்றார். இவர்கள் 2 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் மலர்விழி தனது மருமகனான ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கிருபா கரன் (28) என்பவரிடம் இது குறித்து கூறி உள்ளார்.

    இதனைத் தொடர்ந்து அவர் கூலிப்படையை ஏவி தமிழிசையை வெட்டி க்கொல்ல முயன்றார். இச்சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டு கொலைக்கு பயன்படுத்த ப்பட்ட மோட்டார் சைக்கிள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முககிய குற்றவாளிகளான மலர்விழி, அவரது மகள் மேகா (24), மருமகன் கிருபாகரன் உள்பட 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

    கோவை,

    கோவை பாப்ப நாயக்கன் பாளையம் பரமேஸ்வரன் லே-அவுட் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. . அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த கேரள மாநிலம் சித்தூரை சேர்ந்த சூர்யா (வயது 25), பொள்ளாச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் அகிலன் (20), புதுக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் இமான் ஷா (18) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ரத்தினபுரி போலீசார் சாஸ்திரி நகரில் கஞ்சாவை பதுக்கி விற்ற சங்கனூரை சேர்ந்த ஷாஜூ (19) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் ஷாஜூவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ஆலாந்துறை போலீசார் பூலுவப்பட்டி மார்க்கெட் அருகே கஞ்சாவை பதுக்கி விற்ற பெயிண்டர் பிரசாந்த் (19) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐ.ஜி தனிப்படை போலீசார் திண்டுக்கல் ஐ.ஜி தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் அழகு பாண்டி தலைமையில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
    • கஞ்சா கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வருசநாடு:

    ஆந்திரமாநிலத்தில் இருந்து தேனி மாவட்ட த்திற்கு கஞ்சா கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. தென்மண்டல ஐ.ஜி ஆஸ்ராகார்க்-க்கு கிடைத்த ரகசிய தகவலி ன்படி ஐ.ஜி தனிப்படை போலீசார் திண்டுக்கல் ஐ.ஜி தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் அழகு பாண்டி தலைமையில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதில் நேற்று 60 கிலோ கஞ்சாவை மீன்பெட்டிக்குள் வைத்து கடத்திய ராஜா(37) என்பவரை கைது செய்தனர். மேலும் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து கடமலைக்குண்டு போலீசில் ஒப்படைத்தனர். இந்தநிலையில் கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாக சிங்கராஜபுரத்தை சேர்ந்த நல்லமலை என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அருண், ஈஸ்வரன், சத்தியராஜ் ஆகி யோரை தேடி வருகின்றனர்.

    தேவாரம் போலீசார் அவினாசி ஈஸ்வரன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை க்காக வைத்திருந்த செல்வ பிரசாத்(30), புஷ்பராஜ்(24), தங்கபாண்டி(23) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்க ளிடமிருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா கடத்தல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். பிடிபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரி த்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print