என் மலர்
நீங்கள் தேடியது "5 people arrested"
- காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன.
- அந்த பகுதியில் 2 காா்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் வேகமாகச் சென்றது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, யானை, மான், காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன.
இந்நிலையில், உதகை அருகே சோலூா் சோமா்டேல் எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாள்களாக அடையாளம் தெரியாத நபா்கள் கைகளில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், வனத் துறையினா் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், சோமா்டேல் எஸ்டேட் பகுதியில் பைக்காரா வனத் துறையினா் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த பகுதியில் 2 காா்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் வேகமாகச் சென்றது. இதையடுத்து, வனத் துறையினா் அந்த காா்களை தடுத்து நிறுத்தி அதில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்தினா். அப்போது அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினா்.
இதனால், சந்தேகமடைந்த போலீஸாா் காரை சோதனை செய்தபோது, அதில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெட்டு கத்திகள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் கூடலூா் பகுதியைச் சோ்ந்த குட்டி கிருஷ்ணன், திவாகா், சுரேஷ், மணி, விவேக் என்பதும், இறைச்சிக்காக வன விலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த வனத் துறையினா் அவா்களிடமிருந்த துப்பாக்கி, கத்திகளை பறிமுதல் செய்தனா்.
- விழுப்புரம் அருகே பா.ம.க. பிரமுகரை வெட்டிக்கொன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஆதித்யனை திட்டமிட்டு தீர்த்து கட்டியதாக வாக்கு மூலம் கூறியுள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி போலீஸ் சரகம் கப்பியாம்புலியூரை சேர்ந்தவர் ஆதித்யன் (வயது 45) பா.ம.க.மாவட்ட துணைச் செயலாளர். நேற்று முன்தினம் இரவு ஆதித்யன் பனையபுரத்தி லிருந்து கப்பியாம் புலியூ ருக்கு மோட்டார் சைக்கி ளில் சென்றார். மண்டபம் பெட்ரோல் பங்க் எதிரே உள்ள வாதானூரான் வாய்க்கால் அருகே வரு ம்போது மர்ம நபர்கள் வழி மறித்து கத்தியால் வெட்டி னர். ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இறந்தார். தகவல் அறிந்த விக்கிர வாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆதித்யன் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ் பி ஸ்ரீநாதா டிஎஸ்பி பார்த்திபன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இறந்தவர் மனைவி சாந்தி யிடம் விசாரணை செய்த னர்.
இது பற்றி ஆதித்யன் மனைவி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் கப்பி யாம்புலியூரை சேர்ந்த லட்சுமி நாராயணன் ,அவர் தம்பி ராமு,உறவினர் விஷ்ணு, வினோத், கோலியனூரைச் சேர்ந்த ராகவன். ஆகிய 5 பேரை தனிப்பிரிவு போலீ சார்கைது செய்துள்ளனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.விசாரணை யில் முன் விரோதம் காரண மாக ஆதித்யனை திட்டமிட்டு தீர்த்து கட்டியதாக வாக்கு மூலம் கூறியுள்ளனர். மேலும் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.பா.ம.க., பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட பதட்டம் காரணமாக கப்பி யாம்புலியூர், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ள்ளது.
- வாலிபர்களை போலீசார் சோதனை செய்த போது அவர்களிடம் கஞ்சா இருந்தது.
- போலீசார் 5 பேரையும் ேகார்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை, -
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மதுவிலக்கு பிரிவு போலீசார் தொண்டாமுத்தூர் முத்திபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்களை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் ஆரஞ்சு நிறத்திலான பெயர் தெரியாத 300 கிராம் போதைப் பொருளை மறைத்து வைத்து இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் போதை பொருளை வைத்து இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் அசருள் இஸ்லாம் (வயது 22), அப்துல் முத்தலீப் (37) என்பது தெரிய வந்தது. போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
சூலூரில் உள்ள தனியார் கல்லூரி அருகே மாணவர்களை குறி வைத்து சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்வந்தது. இதனையடுத்து சூலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த தேனி அருகே உள்ள சிங்கராஜபுரத்தை சேர்ந்த தனுஷ்கோடி (24), திண்டுக்கல்லை சேர்ந்த தமிழரசன் (25), திருப்பூரை சேர்ந்த சிமோன்ராஜ் (24) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
- 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை,
கோவை புறநகர் போலீசார் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்களை தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மலை கிராமங்களில் கஞ்சா செடிகளை கண்டு பிடித்து அளித்தனர்.
கோவையில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை - மேட்டுப்பாளையம் ரோடு நரசிம்மநாயக்கன் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பெரியநாயக்கன் பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்தனர்.அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். அந்த வாலிபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அதில் அந்த வாலிபரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சிவகங்கையை சேர்ந்த மணிகண்டன் (23) என்பதும் அவர் கோவை குனியமுத்தூர் பகுதயில் தங்கி பிளம்பர் வேலை செய்து வந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதேபோன்று பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் சமத்தூர் மணல்மேடு பகுதியில் தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட திண்டுகல்லை சேர்ந்த ரவி என்பவரை கோட்டூர் போலீசார் பிடித்தனர். ஆைனமலை பஸ் நிலையத்தில் கஞ்சா விற்ற திண்டுகல்லை சேர்ந்த மனோஜ்குமார் (27) என்பவரை ஆைனமலை போலீசார் பிடித்தனர். இதையடுத்து கோட்டூர் மற்றும் ஆைனமலை போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை செட்டிப்பாளையத்தில் பெட்டி கடையில் குட்கா விற்ற ராஜன் (57) மற்றும் மலுமிச்சம்பட்டியில் மளிகை கடையில் குட்கா விற்ற சிங்கமுத்து (53) என்பவரை செட்டிப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று அன்னூர் கனேசபுரத்தில் ஒரு கடையில் 5 கிலோ 400 கிராம் குட்காவை பதுக்கி வைத்து விற்ற செல்லதுரை (41) என்பவரை அன்னூர் போலீசார் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.கோவையில் நேற்று ஒரே நாளில் கஞ்சா-குட்கா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
- ஐ.ஜி தனிப்படை போலீசார் திண்டுக்கல் ஐ.ஜி தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் அழகு பாண்டி தலைமையில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
- கஞ்சா கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வருசநாடு:
ஆந்திரமாநிலத்தில் இருந்து தேனி மாவட்ட த்திற்கு கஞ்சா கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. தென்மண்டல ஐ.ஜி ஆஸ்ராகார்க்-க்கு கிடைத்த ரகசிய தகவலி ன்படி ஐ.ஜி தனிப்படை போலீசார் திண்டுக்கல் ஐ.ஜி தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் அழகு பாண்டி தலைமையில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் நேற்று 60 கிலோ கஞ்சாவை மீன்பெட்டிக்குள் வைத்து கடத்திய ராஜா(37) என்பவரை கைது செய்தனர். மேலும் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து கடமலைக்குண்டு போலீசில் ஒப்படைத்தனர். இந்தநிலையில் கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாக சிங்கராஜபுரத்தை சேர்ந்த நல்லமலை என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அருண், ஈஸ்வரன், சத்தியராஜ் ஆகி யோரை தேடி வருகின்றனர்.
தேவாரம் போலீசார் அவினாசி ஈஸ்வரன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை க்காக வைத்திருந்த செல்வ பிரசாத்(30), புஷ்பராஜ்(24), தங்கபாண்டி(23) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்க ளிடமிருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா கடத்தல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். பிடிபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரி த்துள்ளனர்.
- கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
- 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
கோவை,
கோவை பாப்ப நாயக்கன் பாளையம் பரமேஸ்வரன் லே-அவுட் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. . அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த கேரள மாநிலம் சித்தூரை சேர்ந்த சூர்யா (வயது 25), பொள்ளாச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் அகிலன் (20), புதுக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் இமான் ஷா (18) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
ரத்தினபுரி போலீசார் சாஸ்திரி நகரில் கஞ்சாவை பதுக்கி விற்ற சங்கனூரை சேர்ந்த ஷாஜூ (19) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் ஷாஜூவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
ஆலாந்துறை போலீசார் பூலுவப்பட்டி மார்க்கெட் அருகே கஞ்சாவை பதுக்கி விற்ற பெயிண்டர் பிரசாந்த் (19) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர்.
- அவர் கூலிப்படையை ஏவி வெட்டிக்கொல்ல முயன்றார்.
- கொலைக்கு பயன்படுத்த ப்பட்ட மோட்டார் சைக்கிள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சின்னாளபட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்தவர் கோகிலா தங்கசாமி. இவர் மதுரை காமராஜர் பல்கலை க்கழகத்தின் பேராசிரிய ராகவும், காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், லட்சுமி கல்வியியல் கல்லூரியில் முதல்வராகவும் பணி புரிந்தவர். இவரது மகன் தமிழிசை (வயது35). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரை கடந்த மாதம் 30ந் தேதி 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டினர். படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டார். இது குறித்து சின்னாளபட்டி இன்ஸ்பெ க்டர் வெங்கடாசலம் தலைமை யில் தனிப்படை அமைக்க ப்பட்டு குற்றவாளி களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் முத்தழகு பட்டியை சேர்ந்த சைமன் செபாஸ்டின் (22), ரிச்சர்டு சச்சின் (25), பேகம்பூர் ரபிக்ராஜா (21), காங்கே யத்தை சேர்ந்த பாண்டியன் (25), விராலிபட்டியை சேர்ந்த சிவசங்கர் (24) ஆகியோர் கைது செய்யப்ப ட்டுள்ளனர்.
கோகிலா தங்கசாமிக்கும், உசிலம்பட்டியை சேர்ந்த மலர்விழி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் மலர்விழி காந்திகிராமம் லட்சுமி கல்வியியல் கல்லூரியில் முதல்வராக பொறு ப்பேற்றார். இவர்கள் 2 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் மலர்விழி தனது மருமகனான ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கிருபா கரன் (28) என்பவரிடம் இது குறித்து கூறி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் கூலிப்படையை ஏவி தமிழிசையை வெட்டி க்கொல்ல முயன்றார். இச்சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டு கொலைக்கு பயன்படுத்த ப்பட்ட மோட்டார் சைக்கிள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முககிய குற்றவாளிகளான மலர்விழி, அவரது மகள் மேகா (24), மருமகன் கிருபாகரன் உள்பட 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அதனை மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்தனர்.
மதுரை
மதுரை கீரைத்துறை சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் அனுப்பானடி பொண்ணுதோப்பு அருகில் சென்றபோது சந்தேகத்துக் கிடமான வகையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் சோதனை செய்தபோது, அவர்களிடம் அரிவாள் மற்றும் ஆயுதங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் அனுப்பானடி அம்பேத்கர் நகரை சேர்ந்த அண்ணன்-தம்பியான போஸ் மகன்கள் பிரவீன் குமார் என்ற அய்யர் (வயது25), செந்தில்குமார் (19) என்று தெரியவந்தது. அவர்கள் தாக்குதலுக்கு பதுங்கியிருந்ததால் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்
திருநகர் சப்-இன்ஸ்பெக்டர் குமாரி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் தனக்கன்குளம் போஸ்ட் ஆபீஸ் அருகில் சென்றபோது அவர்களை கண்டதும் 4 மர்ம நபர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 3 பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அவர்களிடம் சோதனை செய்தபோது கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தன. அதனை மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்தனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் திருநகர் மெயின்ரோடு ஜோசப் நகர் சின்னசாமி மகன் சுந்தரமூர்த்தி (23), விளாச்சேரி ஆதி சிவன் நகர் உதயன் மகன் அலெக்ஸ் (23), திருநகர் ஜோசப் நகர் 3-வது தெரு பிச்சை மகன் சுரேஷ் (23), நெல்லையப்பபுரம் அருண் (41) என்று தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அருண் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- பணம் மற்றும் சீட்டு கட்டுகளுடன் சூதாடி கொண்டு இருந்தனர்.
- போலீசார் அவர்கள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் காமாட்சி அம்மன் கோவில் அருகே பங்களாப்புதுார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் சிலர் அமர்ந்து கொண்டு பணம் மற்றும் சீட்டு கட்டுகளுடன் சூதாடி கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி னர்.
இதில் அவர்கள் கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டடிபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (52), திருப்பூர் ஜே.பி.நகரை சேர்ந்த அருள்மணி (46), டி.என்.பாளையம் காமராஜ் வீதியை சேர்ந்த ஈஸ்வரன் (58), டி.என்.பாளையம் குமரன் கோவில் வீதியை சேர்ந்த ராஜகோபால் (50) மற்றும் டி.என்.பாளையம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த ஈஸ்வரன் (56) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.4,700 பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து பங்களா ப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 5 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
- 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு திருநகர் காலனி ஜெயகோபால் வீதியில் பழைய டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில் கருங்கல்பாளையம் போலீசார் அப்பகுதிக்கு சென்று சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்றதாக கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த சந்திரசேகரன் (30), அதேபகுதியை சேர்ந்த சக்திவேல் (37) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 138 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.3,690 பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மது விலக்கு போலீசார் மேற்கொண்ட ரோந்தில் ஈரோடு வெட்டுக்காட்டு வலசு பகுதியில் மது விற்றதாக மணிவேல்(40), பெரியவலசு பகுதியில் சுப்பிரமணி மனைவி அனுசியா (48), பவானி பகுதியில் வெள்ளியங்கிரி (52) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- சட்டவிரோத மது விற்ப னையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- மேலும் அவர்கள் பதுக்கி வைத்தி ருந்த 41 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
சட்டவிரோத மது விற்ப னையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி ஈரோடு தாலு கா, தாளவாடி, அம்மாபே ட்டை, அந்தியூர், கடம்பூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதி யில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடு பட்டிருந்தனர்.
அப்போ து அரசு மதுபா னத்தை சட்ட விரோதமாக கடத்தி வந்து அதிக விலை க்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த, ஈரோடு, மேட்டுக்கடையை சேர்ந்த நாகராஜ் (45), தாள வாடி நேரு நகரைச் சேர்ந்த ஆரோ க்கியசாமி (47), அந்தி யூர், கண்ணப்ப–ள்ளியைச் சேர்ந்த செந்தில் (42), அந்தி யூர், வ.உ.சி. நகரைச் சேர்ந்த தர்மராஜ் (19), அந்தியூரைச் சேர்ந்த சின்னக்கண்ணன் (55) ஆகிய 5 பேரைக் கண்டு பிடித்தனர்.
இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்கள் பதுக்கி வைத்தி ருந்த 41 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
- வாலிபர் ரெங்கநாதபுரம் மலைக்கோவில் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- கொலை சம்பந்தமாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகில் உள்ள செல்லமந்தாடி ரோடு ஓடைபட்டியை சேர்ந்த நடராஜன் மகன் ஆனந்தசுதன் (23). 10ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவரது தந்தை இறந்துவிடவே தாய் சிவகாமி (45). அறிவுத்திரு க்கோவில் பைபாஸ் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார்.
நேற்று இரவு ரெங்கநாத புரம் மலைக்கோவில் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்தசுதன் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீ சாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டு க்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து டி.எஸ்.பி. உதயகுமார் மேற்பார்வை யில் தாலுகா இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், தாடி க்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் அடங்கிய தனி படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கொலையில் ஈடுபட்ட லட்சுமிநகரை சேர்ந்த முரளிராஜா (35), குடைபாறைப்பட்டியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (32), கே.கே.நகரை சேர்ந்த இன்னாசி ஸ்டீபன் (31), முத்தழகுபட்டியை சேர்ந்த ராபின் ஸ்டீபன் (28), அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (29) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசா ரணை நடத்தியதில் திடுக்கி டும் தகவல்கள் வெளி யானது. அறிவுத்தி ருக்கோ வில் அருகே முரளிராஜா என்பவர் ஓட்டல் நடத்தி வந்துள்ளார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த 2 மாதமாக கடையை பூட்டிவிட்டார். இந்நிலையில் கடையில் வேலை பார்த்த ஆனந்தசுதனின் தாய் சிவகாமி இடத்து உரிமை யாளரிடம் தாங்கள் கடையை நடத்துவதாக கேட்டுள்ளனர். அவரும் சம்மதிக்கவே ஆனந்த் மெஸ் என்ற பெயரில் ஒருவாரமாக கடை நடத்தி வந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் ஏற்கனவே முரளிராஜா விடம் கடன் கொடுத்தவர்கள் கடைக்கு தேடி வந்துள்ளனர். அவர்களிடம் ஆனந்தசுதன் தனக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், தற்போது கடையை தானே நடத்து வதாகவும் கூறியுள்ளார். மேலும் முரளிராஜாவின் வீட்டையும் அடையாளம் காட்டியுள்ளார். இதனால் கடன் காரர்கள் தினந்தோ றும் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த முரளிராஜா அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி அவரது தினசரி நட வடி க்கைகளை கண்காணித்து நேற்று இரவு கடைமுடிந்து வீட்டிற்கு செல்லும் போது தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முரளிராஜா தீர்த்துக்கட்டியுள்ளார்.
இதனையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்பு டைய கல்லுப்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். அவரையும் போலீசார் தேடி வருகின்ற னர்.






