என் மலர்
நீங்கள் தேடியது "5 பேர் ைகது"
- காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன.
- அந்த பகுதியில் 2 காா்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் வேகமாகச் சென்றது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, யானை, மான், காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன.
இந்நிலையில், உதகை அருகே சோலூா் சோமா்டேல் எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாள்களாக அடையாளம் தெரியாத நபா்கள் கைகளில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், வனத் துறையினா் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், சோமா்டேல் எஸ்டேட் பகுதியில் பைக்காரா வனத் துறையினா் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த பகுதியில் 2 காா்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் வேகமாகச் சென்றது. இதையடுத்து, வனத் துறையினா் அந்த காா்களை தடுத்து நிறுத்தி அதில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்தினா். அப்போது அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினா்.
இதனால், சந்தேகமடைந்த போலீஸாா் காரை சோதனை செய்தபோது, அதில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெட்டு கத்திகள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் கூடலூா் பகுதியைச் சோ்ந்த குட்டி கிருஷ்ணன், திவாகா், சுரேஷ், மணி, விவேக் என்பதும், இறைச்சிக்காக வன விலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த வனத் துறையினா் அவா்களிடமிருந்த துப்பாக்கி, கத்திகளை பறிமுதல் செய்தனா்.






