சூதாடிய 5 பேர் கைது

பணம் மற்றும் சீட்டு கட்டுகளுடன் சூதாடி கொண்டு இருந்தனர்.போலீசார் அவர்கள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூதாடிய 5 பேர் கைது
Published on

டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் காமாட்சி அம்மன் கோவில் அருகே பங்களாப்புதுார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் சிலர் அமர்ந்து கொண்டு பணம் மற்றும் சீட்டு கட்டுகளுடன் சூதாடி கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி னர்.

இதில் அவர்கள் கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டடிபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (52), திருப்பூர் ஜே.பி.நகரை சேர்ந்த அருள்மணி (46), டி.என்.பாளையம் காமராஜ் வீதியை சேர்ந்த ஈஸ்வரன் (58), டி.என்.பாளையம் குமரன் கோவில் வீதியை சேர்ந்த ராஜகோபால் (50) மற்றும் டி.என்.பாளையம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த ஈஸ்வரன் (56) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.4,700 பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து பங்களா ப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 5 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com