search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னாளபட்டியில் பேராசிரியர் மகனை வெட்டிக்கொல்ல முயன்ற  5 பேர் கைது
    X

    கோப்பு படம்.

    சின்னாளபட்டியில் பேராசிரியர் மகனை வெட்டிக்கொல்ல முயன்ற 5 பேர் கைது

    • அவர் கூலிப்படையை ஏவி வெட்டிக்கொல்ல முயன்றார்.
    • கொலைக்கு பயன்படுத்த ப்பட்ட மோட்டார் சைக்கிள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்தவர் கோகிலா தங்கசாமி. இவர் மதுரை காமராஜர் பல்கலை க்கழகத்தின் பேராசிரிய ராகவும், காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், லட்சுமி கல்வியியல் கல்லூரியில் முதல்வராகவும் பணி புரிந்தவர். இவரது மகன் தமிழிசை (வயது35). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரை கடந்த மாதம் 30ந் தேதி 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டினர். படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டார். இது குறித்து சின்னாளபட்டி இன்ஸ்பெ க்டர் வெங்கடாசலம் தலைமை யில் தனிப்படை அமைக்க ப்பட்டு குற்றவாளி களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் முத்தழகு பட்டியை சேர்ந்த சைமன் செபாஸ்டின் (22), ரிச்சர்டு சச்சின் (25), பேகம்பூர் ரபிக்ராஜா (21), காங்கே யத்தை சேர்ந்த பாண்டியன் (25), விராலிபட்டியை சேர்ந்த சிவசங்கர் (24) ஆகியோர் கைது செய்யப்ப ட்டுள்ளனர்.

    கோகிலா தங்கசாமிக்கும், உசிலம்பட்டியை சேர்ந்த மலர்விழி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் மலர்விழி காந்திகிராமம் லட்சுமி கல்வியியல் கல்லூரியில் முதல்வராக பொறு ப்பேற்றார். இவர்கள் 2 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் மலர்விழி தனது மருமகனான ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கிருபா கரன் (28) என்பவரிடம் இது குறித்து கூறி உள்ளார்.

    இதனைத் தொடர்ந்து அவர் கூலிப்படையை ஏவி தமிழிசையை வெட்டி க்கொல்ல முயன்றார். இச்சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டு கொலைக்கு பயன்படுத்த ப்பட்ட மோட்டார் சைக்கிள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முககிய குற்றவாளிகளான மலர்விழி, அவரது மகள் மேகா (24), மருமகன் கிருபாகரன் உள்பட 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×