search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் அருகே  பா.ம.க. பிரமுகரை வெட்டிக்கொன்ற 5 பேர் கைது
    X

    கொலை செய்யப்பட்ட ஆதித்யன்.

    விழுப்புரம் அருகே பா.ம.க. பிரமுகரை வெட்டிக்கொன்ற 5 பேர் கைது

    • விழுப்புரம் அருகே பா.ம.க. பிரமுகரை வெட்டிக்கொன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஆதித்யனை திட்டமிட்டு தீர்த்து கட்டியதாக வாக்கு மூலம் கூறியுள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி போலீஸ் சரகம் கப்பியாம்புலியூரை சேர்ந்தவர் ஆதித்யன் (வயது 45) பா.ம.க.மாவட்ட துணைச் செயலாளர். நேற்று முன்தினம் இரவு ஆதித்யன் பனையபுரத்தி லிருந்து கப்பியாம் புலியூ ருக்கு மோட்டார் சைக்கி ளில் சென்றார். மண்டபம் பெட்ரோல் பங்க் எதிரே உள்ள வாதானூரான் வாய்க்கால் அருகே வரு ம்போது மர்ம நபர்கள் வழி மறித்து கத்தியால் வெட்டி னர். ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இறந்தார். தகவல் அறிந்த விக்கிர வாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆதித்யன் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ் பி ஸ்ரீநாதா டிஎஸ்பி பார்த்திபன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இறந்தவர் மனைவி சாந்தி யிடம் விசாரணை செய்த னர்.

    இது பற்றி ஆதித்யன் மனைவி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் கப்பி யாம்புலியூரை சேர்ந்த லட்சுமி நாராயணன் ,அவர் தம்பி ராமு,உறவினர் விஷ்ணு, வினோத், கோலியனூரைச் சேர்ந்த ராகவன். ஆகிய 5 பேரை தனிப்பிரிவு போலீ சார்கைது செய்துள்ளனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.விசாரணை யில் முன் விரோதம் காரண மாக ஆதித்யனை திட்டமிட்டு தீர்த்து கட்டியதாக வாக்கு மூலம் கூறியுள்ளனர். மேலும் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.பா.ம.க., பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட பதட்டம் காரணமாக கப்பி யாம்புலியூர், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ள்ளது.

    Next Story
    ×