search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "for gambling"

    • ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.
    • சீட்டு கட்டுகள், ரூ.1800 பணம் பறி முதல் செய்யப்பட்டது.

    ஈரோடு, 

    கோபிசெட்டிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் கபிலக்கண்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது கோபி அடுத்த கூகலூர், மனுவகாடு, மாரியம்மன் கோவில் அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது. அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த தேவாமணி (55), சேகர் (42), செந்தில் (49), ஜெயராஜ் தேவேந்தர் (36), தாமோதரன்(27), பூபதி (32), குமரேசன் (32), சதீஷ்(28) ஆகியோர் என தெரிய வந்தது.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள், ரூ.1800 பணம் பறி முதல் செய்யப்பட்டது.

    • காவிரி கரையில் சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர்.
    • கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    ஈரோடு, 

    ஈரோடு கருங்கல்பாளை யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருங்கல்பாளையம் கருமாரியம்மன் கோவில் காவிரி கரையில் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.

    போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் லட்சுமணன்(46), அருன் குமரன்(40), மணிகண்டன்(28), காட்டுராஜா(50), பிரபு (38), சரவணன்(48), குமார்(40), சேட்டு (50) ஆகியோர் என்பதும் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.6, 150 பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.

    • காவிரி கரை அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.
    • பணம் வைத்து சூதாடியதும் தெரிய வந்தது.

    ஈரோடு, 

    ஈரோடு கருங்கல்பாளை யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருங்கால் பாளையம் அடுத்த வைர பாளையம் காவிரி கரை அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.

    போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கவுதம் (30), மணி வண்ணன்(39), சுப்பிரமணி (30), மணிகண்டன்(38), செந்தில்குமார்(41), சக்திவேல்(48), சபரீஷ்(33), முத்து சபரிநாதன் (37) ஆகியோர் என்பதும் பணம் வைத்து சூதாடியதும் தெரிய வந்தது.

    இது தொடர்பாக கரு ங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.7, 850 பணம் மற்றும் 5 மோட்டார் சைக்கி ள்கள் பறிமுதல் செய்ய ப்பட்டன. 

    • சீட்டாட்டம் விளையாடி வந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
    • ரூ.1,130 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு அடுத்த சோளங்காபாளையம் பகுதியில் மலையம்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது, அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில், அவர்கள், கணபதிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார்(39), காமராஜபுரத்தை சேர்ந்த பழனிசாமி(43), பி.கே.வலசு பகுதியை சேர்ந்த கோபி(38), கிளாம்பாடியை சேர்ந்த குமார்(50) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1,130 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • பணம் மற்றும் சீட்டு கட்டுகளுடன் சூதாடி கொண்டு இருந்தனர்.
    • போலீசார் அவர்கள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் காமாட்சி அம்மன் கோவில் அருகே பங்களாப்புதுார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் சிலர் அமர்ந்து கொண்டு பணம் மற்றும் சீட்டு கட்டுகளுடன் சூதாடி கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி னர்.

    இதில் அவர்கள் கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டடிபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (52), திருப்பூர் ஜே.பி.நகரை சேர்ந்த அருள்மணி (46), டி.என்.பாளையம் காமராஜ் வீதியை சேர்ந்த ஈஸ்வரன் (58), டி.என்.பாளையம் குமரன் கோவில் வீதியை சேர்ந்த ராஜகோபால் (50) மற்றும் டி.என்.பாளையம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த ஈஸ்வரன் (56) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.4,700 பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து பங்களா ப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 5 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்தியூர் அடுத்த தாமரைக்கரை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதேபோல் தாமரைக்கரை பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த தாமரைக்கரை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    சப் -இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது 8 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

    இதனையடுத்து அந்தியூர் பகுதியை சேர்ந்த கருப்புசாமி, தாமரைக்கரை பகுதியை சேர்ந்த சித்தன், பெருந்துறையை சேர்ந்த அருணாச்சலம், சேகர், சந்தோஷ், ராஜா, குமார், ஊசி மலையை சேர்ந்த கிரியன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் 11,960 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் தாமரைக்கரை பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 13 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

    • ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ரூ.39 ஆயிரத்து 260 மற்றும் 5 மோட்டார் சைக்ள்கள், 9 செல்போன்கள், 15 சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது தேவப்பா என்பவர் தோட்டத்தில் உள்ள வீட்டில் 11 பேர் சூதாடி கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் மல்லன்குழி கிரா மத்தை சேர்ந்த பிரசாந்த் (29), ஜெகதீஷ் (50), ராமண்ணா (45), பிரபாகரன் (23), தோவப்பா (35), கல்மண்புரத்தை சேர்ந்த மல்லேதேவர் (40), தமிழ்புர த்தை சேர்ந்த சித்தமல்லு (35), அருள்வாடி சித்தமல்லு (35), சிவசங்கர் (40), சுப்பிர மணி (42), சுப்பிரமணி (45) என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.39 ஆயிரத்து 260 மற்றும் 5 மோட்டார் சைக்ள்கள், 9 செல்போன்கள், 15 சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் சூதாட்டம் நடத்திய கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
    • இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரூ.3,340 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம் பகுதியில் ஒரு கடைக்கு பின் புறம் உள்ள மரத்தடியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி தலைமையிலான போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற போது அந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரோஜ்லஷ்கர் (35), ஜாகிர் நௌரேன்காஜி (22), அஜ்கர் முல்லா (22), சகஜீஸ் மொல்லா(21), கார்தின் மொல்யா(30), சத்தம்பியாதா(30), அஜிகல்சர்தார் (22), மஜ்னா ஆழிபாஸ்க் (31) ஆகியோர் என்பதும் இவர்கள் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரூ.3,340 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ×