search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "11 people"

    • சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார கிராமங்களை குறி வைத்து லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு புகார்கள் வந்தன.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓலூர் வட்டார கிராமங்களை குறி வைத்து லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஓமலூர் நகர், புளியம்பட்டி, கோட்ட மேட்டுப்பட்டி, பல்பாக்கி, இந்திராநகர், பச்சனம்பட்டி, திமிரிகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு நம்பர், 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு புகார்கள் வந்தன.

    அதே போல சட்ட விரோதமாக சந்துகடைகள் வைத்து மது பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. சந்துகடைகள் ஒவ்வொரு கிராமத்திலும் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்யபடு கிறது. குறிப்பாக காமலாபுரம் கிராமத்தில் தான் அதிகள வில் சந்துகடைகள் வைத்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பாட்டிலை திறந்து கலப்படம் செய்தும் மது விற்பதாக புகார்கள் கூறப்படுகிறது. அதனால், சந்துகடை வைத்து மது விற்பனை செய்யும் அனை வரும் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவக்குமார் உத்தர விட்டார்.

    இதனை தொடர்ந்து ஓமலூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்கும ரன் மற்றும் போலீசார் அனைத்து பகுதிகளிலும் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில், ஒரே நாளில் லாட்டரி விற்பனை செய்த 5 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    இவர்கள் நேரடியாக விற்பனை செய்யாமல், செல்போன் மூலம் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதே போல சந்து கடை மூலம் மது விற்பனை செய்த பெண் உட்பட 6 பேரை போலீசார் அதிரடி யாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

    தொடர்ந்து ஒரே நாளில் கைது செய்யப்பட்ட 11 பேரி டமும் லாட்டரி விற்பனை செய்யக்கூடாது என்றும் சட்டவிரோதமாக மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று ஆலோசனை மற்றும் விழிப் புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து இதே வேலையை செய்து வந்தால் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து ஜாமீனில் விடுவித்தனர்.

    • ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ரூ.39 ஆயிரத்து 260 மற்றும் 5 மோட்டார் சைக்ள்கள், 9 செல்போன்கள், 15 சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது தேவப்பா என்பவர் தோட்டத்தில் உள்ள வீட்டில் 11 பேர் சூதாடி கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் மல்லன்குழி கிரா மத்தை சேர்ந்த பிரசாந்த் (29), ஜெகதீஷ் (50), ராமண்ணா (45), பிரபாகரன் (23), தோவப்பா (35), கல்மண்புரத்தை சேர்ந்த மல்லேதேவர் (40), தமிழ்புர த்தை சேர்ந்த சித்தமல்லு (35), அருள்வாடி சித்தமல்லு (35), சிவசங்கர் (40), சுப்பிர மணி (42), சுப்பிரமணி (45) என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.39 ஆயிரத்து 260 மற்றும் 5 மோட்டார் சைக்ள்கள், 9 செல்போன்கள், 15 சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 756 ஆக உயர்ந்துள்ளது.
    • மாவட்ட த்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாவ ட்ட சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த 2 வாரமாக மீண்டும் அதிகரித்து வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளி யிட்டுள்ள பட்டியல்படி இதுவரை இல்லாத அளவாக மேலும் ஒரே நாளில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்ப ட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 756 ஆக உயர்ந்துள்ளது.

    சிகிச்சையில் இருந்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 980 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 20 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்ட த்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து மாவ ட்ட சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். 

    ×