search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "infected"

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • கொரோனா பாதிப்புடன் 253 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 384 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 253 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • புதுவையில் படிப்படியாக கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது.
    • புதுவையில் 898, காரைக்காலில் 118, ஏனாமில் 24 பேர், மாகியில் ஒருவர் என ஆயிரத்து 36 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் படிப்படியாக கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. புதுவையில் 2 ஆயிரத்து 240 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 174, காரைக்காலில் 36, ஏனாமில் 2, மாகியில் ஒருவர் என புதிதாக 213 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    புதுவையில் 11, ஏனாமில் ஒருவர் என 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 898, காரைக்காலில் 118, ஏனாமில் 24 பேர், மாகியில் ஒருவர் என ஆயிரத்து 36 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.

    புதுவையில் 159, காரைக்காலில் 19, ஏனாமில் 2, மாகியில் ஒருவர் என 181 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். மாநி லத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 59 ஆயிரத்து 665 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இந்த தகவலை சுகாதாரத்துறை தெரி வித்துள்ளது. புதுவையில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவது பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுவையில் 2 ஆயிரத்து 341 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
    • இதில் புதுவையில் 143, காரைக்காலில் 25, ஏனாமில் 6 பேர் என புதிதாக 174 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் 2 ஆயிரத்து 341 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 143, காரைக்காலில் 25, ஏனாமில் 6 பேர் என புதிதாக 174 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 6, ஏனாம் 4, மாகியில் ஒருவர் என 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் 762, காரைக்காலில் 119, ஏனாமில் 22 பேர், மாகியில் ஒருவர் என 904 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 132, காரைக்காலில் 34, ஏனாமில் 82 பேர் என 174 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 58 ஆயிரத்து 319 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இத்தகவலை சுகாதா ரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா நெறிமுறை களை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.
    • கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 265 ஆக உயர்ந்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 13 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 265 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 67 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 534 பேர் இறந்துவிட்ட நிலையில், 150 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டும், ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இது வரை இல்லாத அளவாக ஒரே நாளில் மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது தொற்று அதிகரித்து வரும் நிலையில் தினசரி கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இது வரை இல்லாத அளவாக ஒரே நாளில் மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 39 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 81 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது தொற்று அதிகரித்து வரும் நிலையில் தினசரி கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இதேபோல் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி இன்னும் தொடங்கவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை மேற்கொண்டு முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 756 ஆக உயர்ந்துள்ளது.
    • மாவட்ட த்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாவ ட்ட சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த 2 வாரமாக மீண்டும் அதிகரித்து வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளி யிட்டுள்ள பட்டியல்படி இதுவரை இல்லாத அளவாக மேலும் ஒரே நாளில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்ப ட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 756 ஆக உயர்ந்துள்ளது.

    சிகிச்சையில் இருந்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 980 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 20 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்ட த்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து மாவ ட்ட சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். 

    ×