search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா தொற்று
    X

    ஈரோட்டில் ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா தொற்று

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இது வரை இல்லாத அளவாக ஒரே நாளில் மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது தொற்று அதிகரித்து வரும் நிலையில் தினசரி கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இது வரை இல்லாத அளவாக ஒரே நாளில் மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 39 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 81 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது தொற்று அதிகரித்து வரும் நிலையில் தினசரி கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இதேபோல் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி இன்னும் தொடங்கவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை மேற்கொண்டு முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×