search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றிய 5 பேர் கைது
    X

    மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றிய 5 பேர் கைது

    • மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அதனை மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்தனர்.


    மதுரை

    மதுரை கீரைத்துறை சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் அனுப்பானடி பொண்ணுதோப்பு அருகில் சென்றபோது சந்தேகத்துக் கிடமான வகையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களை போலீசார் சோதனை செய்தபோது, அவர்களிடம் அரிவாள் மற்றும் ஆயுதங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் அனுப்பானடி அம்பேத்கர் நகரை சேர்ந்த அண்ணன்-தம்பியான போஸ் மகன்கள் பிரவீன் குமார் என்ற அய்யர் (வயது25), செந்தில்குமார் (19) என்று தெரியவந்தது. அவர்கள் தாக்குதலுக்கு பதுங்கியிருந்ததால் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மற்றொரு சம்பவம்

    திருநகர் சப்-இன்ஸ்பெக்டர் குமாரி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் தனக்கன்குளம் போஸ்ட் ஆபீஸ் அருகில் சென்றபோது அவர்களை கண்டதும் 4 மர்ம நபர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 3 பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அவர்களிடம் சோதனை செய்தபோது கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தன. அதனை மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்தனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் திருநகர் மெயின்ரோடு ஜோசப் நகர் சின்னசாமி மகன் சுந்தரமூர்த்தி (23), விளாச்சேரி ஆதி சிவன் நகர் உதயன் மகன் அலெக்ஸ் (23), திருநகர் ஜோசப் நகர் 3-வது தெரு பிச்சை மகன் சுரேஷ் (23), நெல்லையப்பபுரம் அருண் (41) என்று தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அருண் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×