search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா தொடங்கியது
    X

    மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா தொடங்கியது

    • பொள்ளாச்சி நகரின் மத்தியில் கோவில் உள்ளது.
    • அன்னதானம் நடைபெறுகிறது.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி நகரின் மத்தியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 3 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப் பட்டது. இதையடுத்து விமான பாலாலயம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. மேலும் திருப்பணிகள் தொடங்கி நடந்தது. பழமை வாய்ந்த விமான கோபுரத்துக்கும், சிற்பங்களுக்கும் வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

    இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 12-ந்தேதி யாக சாலை அமைக்கும் பணிக்கு கால்கோள் போடப்பட்டது. நேற்று கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையொட்டி விநாயகர் வழிபாடு, புண்யாகம், அனுக்ஞை, தன பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

    இன்று காலை 8.45 மணிக்கு விநாயகர் பூஜை, 10.30 மணிக்கு திரவியாகுதி, 11 மணிக்கு மூலவருக்கு பிரசன்னாபிஷேகம், நாளை (புதன்கிழமை) 9.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, இரவு 7 மணிக்கு யாக 5 சாலை பிரவேசம், முதற்கால 5 யாக பூஜை நடக்கிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாகபூஜை நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான கும் பாபிஷேகம் வருகிற 27-ந்தேதி காலை 9.45 மணிக்கு ராஜகோபுரம், மாரியம்மன் விமான கோபுர மகா கும்பாபிஷேகமும், காலை 9.55 மணிக்கு விநாயகர், முருகன், அங்காளம்மன் மற்றும் அன்னை மாரியம்மன் மூலாலய மகா கும்பாபிஷேகமும் நடைபெ றுகிறது.

    இதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார வழிபாடு, அன்னதானம் நடைபெறுகிறது. மாலையில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    Next Story
    ×