என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cashier"
- கிருஷ்ணகுமார் தந்தையுடன் இணைந்து சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகிறார்.
- அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை பீளமேடு தண்ணீர் பந்தலை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 46). இவர் அந்த பகுதியில் தனது சகோதரர் மற்றும் தந்தையுடன் இணைந்து சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகிறார்.
இங்கு சில மாதங்களாக நீலகிரி மாவட்டம் சேரன்கோடு பகுதியை சேர்ந்த சுரேந்தர் (31) என்பவர் காசாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நிறுவன வங்கி கணக்கில் இருந்து ரூ.6,05,000 பணத்தை சுரேந்தர் தனது வங்கி கணக்கிற்கு வரவு வைத்து மோசடி செய்தார்.
இந்த விவரம் நிறுவனத்தில் நடத்தப்பட்ட கணக்கு தணிக்கையில், தெரியவந்தது. இது குறித்து நிறுவன உரிமையாளர் கிருஷ்ணகுமார் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சுரேந்தரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- பிரகாஷ் டாஸ்மாக் பாரில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.
- போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
புதுக்கோட்டையை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30). இவர் ரத்தினபுரியில் உள்ள டாஸ்மாக் பாரில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவரது பாருக்கு டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பு 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் பிரகாஷிடம் மதுபாட்டில் வாங்கி வரும்படி கூறினர். அதற்கு அவர் டாஸ்மாக் கடை திறந்தால் தான் மது கிடைக்கும் என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை காட்டி மிரட்டி பிரகாஷிடம் இருந்த ரூ. 200 பணத்தை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து அவர் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் பார் காசாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்ற கண்ணப்ப நகரை சேர்ந்த பெயிண்டர் கார்த்திக் (30), லிங்கபூபதி (23), காமாட்சி நகரை சேர்ந்த விக்னேஷ்வரன் (26) ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை:
கோவை வெள்ளலூர் குடிைச மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முத்து (வயது 25). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மாமாவுடன் வெரைட்டிஹால் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். அப்போது முத்து போதை தலைக்கேறிய நிலையில் அருகே உள்ள நாற்காலி மீது சரிந்தார்.
இதனை பார்த்த டாஸ்மாக் பாரில் காசாளராக வேலை பார்க்கும் தஞ்சாவூரை சேர்ந்த முத்து கருப்பையா (21) என்பவர் முத்துவிடம் வந்து தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்து கருப்பையா அங்கு இருந்த பீர் பாட்டிலை எடுத்து முத்துவின் தலையில் தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த அவரரை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மது குடிக்க வந்த தொழிலாளியை தாக்கிய டாஸ்மாக் காசாளர் முத்து கருப்பையாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்