என் மலர்
இந்தியா

காஷ்மீரில் மீண்டும் கொலை.. சமூக ஆர்வலரை வீடு புகுந்து சுட்டுத் தள்ளிய பயங்கரவாதிகள்
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
- கடந்த நான்கு நாட்களில், 2,000 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் 45 வயது சமூக ஆர்வலர் ஒருவர் மீது பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.
நேற்று (சனிக்கிழமை) இரவு கண்டி காஸில் வசித்து வந்த சமூக ஆர்வலர் குலாம் ரசூல் மாக்ரேயின் வீட்டிற்குள் பயங்கரவாதிகள் நுழைந்து அவரை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரசூலைக் கொன்ற பயங்கரவாதிகளைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்கள் என்று கூறப்படும் வீடுகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட்களில், 2,000 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.






