search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Buttermilk"

    • திண்டிவனம் நகரின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.
    • சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துக் கொண்டார்/

    விழுப்புரம்:

    திண்டிவனம் நகரின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேரு வீதியில் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு துறை அணி சார்பாக விளையாட்டுத்துறை மாவட்ட அமைப்பாளரும், நகர மன்ற உறுப்பினருமாகிய சந்திரன் தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிப்பழம், குளிர்பானங்கள், நுங்கு, இளநீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். 

    இதில் மாவட்ட அவை தலைவர் டாக்டர் சேகர், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர் ரிஸ்வான் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த பகுதியில் கோடை காலம் முழுவதும் நீர் மோர் பந்தல் தொடர்ந்து இயங்கும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

    • இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா கடலூர் ஓம் சிவ சக்தி டைம்ஸ் கடை முன்பு நடைபெற்றது.
    • விழாவில் மாவட்ட செயலாளர் ஓ.எல்.பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கோடை வெயிலை முன்னிட்டு இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா கடலூர் ஓம் சிவ சக்தி டைம்ஸ் கடை முன்பு நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் ஓ.எல். பெரியசாமி, மாவட்ட இணை செயலாளர் ஆசை தாமஸ், இளைஞரணி செயலாளர் ஆர். எஸ்.ரஜினி விக்னேஷ் ஆகியோர் தலைமை தாங்கி பொது மக்களுக்கு இலவச நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கினர்.

    இதில் மன்ற நிர்வாகிகள் ராஜேந்திரன், இனியன், முருகன்,வினோத், எழிலரசன், கோபால், ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை வெயில் கடுமையாக உள்ளது.
    • பணியில் உள்ள போலீசாருக்கு வெப்பத்தினால் உடல் சோர்வு ஏற்படுகிறது.

    பல்லடம் :

    தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை வெயில் கடுமையாக உள்ளது. இந்த நிலையில் பல்லடத்தில் போக்குவரத்து போலீசாருக்கு வெப்பத்தை தணிக்கும் வகையில் மோர் வழங்கப்ப ட்டது. இது குறித்து போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் திருநாவு க்கரசு கூறுகையில், தற்போது கோடை காலம் என்பதால், வெப்பம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் போக்குவரத்தை சீர் செய்ய பணியில் உள்ள போலீசா ருக்கு வெப்பத்தினால் உடல் சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர்வை தடுக்கும் வகையில் அவர்களுக்கு காலை,மாலை, இரு வேளைகளிலும் மோர் மற்றும் பழச்சாறு கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    அந்த வகையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில்,பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா அறிவுறுத்தலின்படி போக்குவரத்து போலீசாருக்கு வெப்பத்தை தணிக்கும் வகையில் மோர் வழங்கப்ப டுகிறது. தினமும் காலை 11 மணிக்கு மோர் அல்லது பழச்சாறு, அதேபோல மாலை 3 மணிக்கு பழச்சாறு அல்லது மோர் வழங்கப்படு கிறது.இந்த மோர் வழங்கும் பணி மே மாதம் வெப்பம் தணியும் வரை கொடுக்கப்படும் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நடைபாதை மற்றும் தள்ளுவண்டி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
    • குளிர்ந்த மோரில் கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்புடன் சீரகம் தூள் தூவி விற்பனை செய்யப்படுகிறது.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக, அதிக வெப்பம் நிலவுகிறது. வெயிலில் வேலை செய்பவர்கள், வெளியில் பயணிப்போர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதன் காரணமாக, குளிர்பானம் மற்றும் பழரச கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. சீசனுக்கேற்ற தற்காலிக கம்பங்கூழ், நீர் மோர், மிக்ஸர் பழரசம் என நடைபாதை மற்றும் தள்ளுவண்டி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பலரும் மோர் மற்றும் கம்பங்கூழ் குடித்து வெயில் தாக்கத்தை தணித்து வருகின்றனர்.

    இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், குளிர்ந்த மோரில் கொத்த மல்லி, கறிவேப்பிலை, மிதமான உப்புடன் சீரகம் தூள் தூவி விற்பனை செய்யப்படுகிறது. மண்பானையில் ஊற்றி வைத்து மோர் மற்றும் கம்பங்கூழ் விற்பதால் குளிர்ச்சியாக உள்ளது. மக்கள் விரும்பி பருகுகின்றனர் என்றனர். 

    • சங்கரன்கோவிலில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர், மோர் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • வெயில் காலம் முடியும் வரை தினமும் நீர், மோர், பழங்கள் வழங்கப்படும் என ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    சங்கரன்கோவில்:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதிலிருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சங்கரன்கோவிலில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர், மோர் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நீர், மோர், பழங்கள் ஆகியவற்றை வழங்கினார். மேலும் வெயில் காலம் முடியும் வரை தினமும் நீர், மோர், பழங்கள் வழங்கப்படும் என ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    இதில் மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நகர அவைத் தலைவர் முப்பிடாதி, இளைஞர் அணி சரவணன், நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ்.மாரியப்பன், முத்துக்குமார், வக்கீல் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கம்பெனிகளில் உள்ளூர், வெளிமாவட்ட, மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள்.
    • பஸ்சிலும், இரண்டு சக்கர வாகனத்திலும் தங்களது பணி நிமித்தமாக அதிகளவில் சென்று வருகிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதிலிருந்து தப்பிக்க மக்கள், இளநீர், மோர் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை வாங்கி அருந்துகிறார்கள். திருப்பூர் நகரத்தை பொறுத்தவரை வருடத்தில் சில நாட்கள் மழை பெய்கிறது. மற்ற நகரத்தை போல் அல்லாமல் இங்கு வெயில் அதிகம். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-

    திருப்பூரில் அமைந்துள்ள சாயப்பட்டறைகள், பனியன் கம்பெனிகளில் உள்ளூர், வெளிமாவட்ட, மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள். திருப்பூர் சுற்றுவட்டார நகரங்களான உடுமலை, பல்லடம், அவினாசி, தாராபுரம், உள்ளிட்ட நகரங்களுக்கு தினந்தோறும் பஸ்சிலும், இரண்டு சக்கர வாகனத்திலும் தங்களது பணி நிமித்தமாக அதிகளவில் சென்று வருகிறார்கள். அவர்கள் மதிய நேரங்களில் வெயில் தாக்கத்தால் அவதி அடைகின்றார்கள். சிலருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டு உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது. தண்ணீர் தேடி தனியார் ஓட்டல்கள் மற்றும் குளிர்பான கடைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. அடைத்து விற்கப்படும் பாட்டில் நீரின் விலை நிர்ணயித்ததை விட கூடுதலாக விற்கிறார்கள். தரம் அப்படி சொல்லிக்கொள்ளும் படி இல்லை. இதனால் மதிய நேரங்களில் கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வருவோர், வேலை காரணமாக அலையும் தொழிலாளர்கள், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் விற்பனை பிரதிநிதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் தாகத்தால் அவதி அடைகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு தனியார் அமைப்பைச் சேர்ந்த சிலர் நீர் மோர் பந்தலை அமைத்து மக்களின் தாகத்தை தீர்க்க வழி செய்கிறார்கள் என்பது சற்று ஆறுதலான விஷயம். நீர் மோர் அருந்துவதால் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், கால்சியம், ரிபோப்ளேவின் பாஸ்பரஸ், புரோட்டீன், என்சைம்கள் கிடைக்கின்றன. மேலும் பொட்டாசியம் அதிகம் உள்ள கொழுப்பு சத்து மற்றும் கலோரி இதில் மிக மிக குறைவு. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால் விட்டமின் குறைபாடு ஏற்படுவதை தடுக்கலாம். அதே போன்று உடல் வறட்சி போன்றவற்றால் நீரிழப்பு ஏற்படுகிறது .அதிலும் கோடையில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இதை ஈடு செய்யும் அருமையான மருந்து இந்த நீர்மோர். இது சுவை மட்டுமல்ல மருத்துவ குணங்கள் நிறைந்தது. எனவே தினமும் மோர் குடிப்பது நல்லது . எலும்புகளின் வலிமைக்கு பற்களின் ஆரோக்கியத்துக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம்.

    இதனை கருத்தில் கொண்டு அரசின் சார்பில் மாவட்ட நிர்வாகம் மக்கள் கூடும் முக்கிய இடங்களான பஸ், ரெயில் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், முக்கிய மார்கெட் பகுதிகள், பூங்காக்கள், கோவில்கள், பள்ளிகள் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படும் வகையில் தற்காலிக நீர் மோர் பந்தல்களை அமைக்கலாம். இதற்கு என்று பெரிதாக செலவுகள் ஓன்றும் ஆகாது. பொதுமக்களும் வெப்பத்தி லிருந்து தப்பித்துக் கொள்ள நீர் மற்றும் மோரை வாங்கி பருகி செல்வார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    வெயில் காலத்தில் மோர் குடிப்பது உடல் சூட்டை தணிக்கும். உடல் சூட்டை குறைக்கும் குளுகுளு மசாலா மோர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கெட்டித் தயிர் - 1 கப்
    தண்ணீர் - 1 கப்
    கொத்தமல்லி - சிறிதளவு
    மோர் மிளகாய் - 1
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு - 1/4 டீஸ்பூன்

    அரைப்பதற்கு...


    பச்சை மிளகாய் - 1/2
    கறிவேப்பிலை - 3 இலை
    இஞ்சி - 1/4 இன்ச்



    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தயிரை ஒரு பௌலில் போட்டு, அதனை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

    அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ள வேண்டும்.

    அரைத்த விழுதை மோரில் சேர்த்து, அத்துடன் மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறினால், மசாலா மோர் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோடைகாலத்தில் கிடைக்கும் நுங்கை வைத்து சுவையான சத்தான உணவுகளை செய்யலாம். இன்று நுங்கு சேர்த்து மோர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோல் நீக்கி பொடியாக நறுக்கிய நுங்குத் துண்டுகள் - ஒரு கப்,
    கடைந்த மோர் - கால் லிட்டர்,
    உப்பு - தேவையான அளவு,
    கொத்தமல்லித்தழை, தோல் சீவிய இஞ்சி - தலா சிறிதளவு,
    பச்சை மிளகாய் - சிறியது ஒன்று,



    செய்முறை :

    இஞ்சியுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து அரைக்கவும்.

    அரைத்த விழுதுடன் அதனுடன் மோர் சேர்த்து ஒரு சுற்று விடவும்.

    பிறகு நுங்குத் துண்டுகள் சேர்த்து நுரை வர அடித்தெடுத்து கண்ணாடி டம்பளர்களில் ஊற்றி பரிமாறலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெயில் காலத்தில் வயிற்று கோளாறு, உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் கற்றாழை மோர் பருகலாம். இன்று இந்த மோரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புளிக்காத தயிர் - அரை கப்
    கற்றாழை - 4 சிறு துண்டுகள்
    இஞ்சி - சிறு துண்டு
    பெருங்காய தூள் - சிறிதளவு
    கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கற்றாழைத்துண்டுகளை நீரில் பத்து முறை நன்கு கழுவ வேண்டும். இல்லையென்றால் கசக்கும்.

    மிக்ஸியில் இஞ்சித்துண்டை தூளாக்கிய பின் கற்றாழைத்துண்டுகளை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் தயிர், பெருங்காய தூள், தேவையான அளவு உப்பும் சேர்த்து அரைத்து அதில் பின்னர் இரண்டு டம்ளர் நீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றி நிறுத்தவும். (தயிர் அரைத்த பின் கற்றாழைப் போட்டால் கற்றாழை நன்றாக அரையாது).

    இதனை டம்ளரில் ஊற்றி அதில் கொத்துமல்லித் தழை போட்டு பருகவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மோர் வயிற்றை குளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும்.
    மோரில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், விட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    காரசாராமான உணவுகளை உட்கொண்ட பின்னர் ஒரு டம்ளர் மோர் குடித்தால் வயிறு எரிச்சல் அடங்கும். வயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு கொழுப்பையும் கரைக்கும். மோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும். அதிலும் உங்கள் வயிறு உப்புசமாக, ஒருவித அசௌகரியமாக உணரும் போது, இதைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.



    இதில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், இதனை கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். மோரில் இரத்த அழுத்ததைக் குறைக்கும் தனித்துவமான பயோஆக்டிவ் புரோட்டீன், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருள் நிறைந்துள்ளதாக தெரிவிக்கிறது.

    மேலும் நிபுணர்களும் தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கின்றனர். மோரில் நிறைந்துள்ள நன்மைகளில் முக்கியமானது அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் தரும் என்பது தான். மோர் வயிற்றை குளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும்.

    கோடை காலத்தில் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசி வரைக்கும் புளிக்காமல் இருக்கும். ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும் போது மோர் சாப்பிடக்கூடாது. மோர் சாதமும் கூடாது.
    ×