என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Prime Minister Kisan Scheme"
- நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 என ஆண்டுக்கு ரூ.6000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
- விவரங்களை பதிவு செய்தால் தான் 14-வது தவணை ஊக்கத்தொகை வழங்கப்படும்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள் தங்கள் விவரங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்தால் 14-வது ஊக்கத் தொகை வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள பி.எம்.கிசான் (விவசாயிகள் கவுரவ நிதி திட்டம்) திட்டத்தில் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 என ஆண்டுக்கு ரூ.6000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இதுவரை 13 தவணைகள் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 14வது தவணை ஊக்கத்தொகை பெற ஆன்லைனில் விவசாயிகளின் விவரங்களை பதிவு செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜூன் 30ம் தேதிக்குள் கே.ஒய்.சி பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இதேபோல் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் தங்களது வங்கியை தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் அல்லது அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களை அணுகி வங்கி கணக்கு தொடங்கி 14வது தவணையை சரியாக பெற்று பயன்பெறாலாம். பி.எம்.கிசான் திட்டத்தில் ஊக்கத்தொகை பெறும் விவசாயிகளுக்கு கே.ஒய்.சி முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும் தவணையை பெற ஆதார் விபரங்கள் சரிபார்ப்பது அவசியமாகும். முதல் வழிமுறையாக, ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் வலைதளத்தில் தங்களது ஆதார் எண், விபரங்களை உள்ளீடு செய்து, ஒருமுறை பயன்படுத்தும் கடவு மூலம் சரிபார்க்கலாம். 2 வது வழிமுறையாக ஆதார் எண்ணுடன் கைபேசி எண் இணைக்காதவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் திட்ட வலைதளத்தில் ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து, விரல் ரேகையை பதிவு செய்து சரிபார்க்கலாம். 3வது வழிமுறையாக பி.எம்.கிசான் செயலி மூலம் முக அடையாளம் கொண்டோ அல்லது அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகி இ.கே.ஒய்.சி. செய்து கொள்ளலாம். வரும் 30-ஆம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) இதை செய்தால் தான் 14-வது தவணை ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் பழனி கூறியுள்ளார்.
- ஆண்டுக்கு ரூ.6000, மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.
- பி.எம். கிஷான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெருமாநல்லூர் :
தமிழ்நாட்டில் "பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி" திட்டமானது 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவித்தொகையாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 விதம் ஆண்டுக்கு ரூ.6000, மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி பண பரிமாற்றம் அந்தந்த பகுதியின் ஒன்றியங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் 13-வது தவணையாக அதாவது 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் முடிய உள்ள காலத்திற்கான தவணைத் தொகை பி.எம். கிஷான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது ஊத்துக்குளி வட்டார விவசாயிகள் பொது சேவை மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ தங்கள் ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறையில் பதிவு செய்து கொள்ளலாம். ஆகவே தங்களது அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று தனது பெயரை பி.எம். கிஷான் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசியின் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை பி.எம்.கிஷான் இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். மேலும் விவரங்களுக்கு ஊத்துக்குளி வட்டார வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என உதவி இயக்குனர் சசிரேகா தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்