search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்பு படம் 

    குமரி மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    • குறைந்தபட்ச கல்வி தகுதியில் 60 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
    • கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-202-ம் கல்வியாண்டில் முதலா மாண்டு தொழிற்கல்வி பட்டப்படிப்புகளான பி.இ., பி.டெக், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.எட். மேலும் இதுபோன்ற படிப்புகள் பயிலும் படை அலுவலர் தகுதிக்குகீழ் உள்ள முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறு வதற்கான விண்ணப் பங்கள் www.ksb.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இக்கல்வி உதவித்தொகை பெற குறைந்தபட்ச கல்வி தகுதியில் 60 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இக்கல்வி உதவித்தொகை பெற தகுதி உள்ள அனைத்து முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவைகள் முதற்கட்டமாக இணையதளத்தில் தங்களது பெயரை பதிவு செய்து கல்வி சலுகை பெற இணையதளத்தில் பி.எம்.எஸ்.எஸ். என்ற தலைப்பின் கீழ் சான்றுகளுக்கான படிவங்களை பதிவிறக்கம் செய்து கல்வி நிலையம், வங்கி மற்றும் இவ்வலுவ லகத்திலிருந்து உரிய சான்று பெற்று தேவையான ஆவ ணங்களுடன் இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள வேண்டும்.

    பின்னர் அதன் அசல் களை உடனடியாக (மூன்று நாட்களுக்குள்) நாகர்கோவில் கோட்டாரில் உள்ள மாவட்ட முன் னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து சரிபார்த்து கொள்ள வேண்டும்.

    இணையதளத்தில் விண்ணப் பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாள் ஆகும். தேர்வு செய்யப்படும் பெண் குழந்தை களுக்கு ஆண்டொன் றுக்கு ரூ.36 ஆயிரம், ஆண் குழந்தை களுக்கு ரூ.30 ஆயிரம் கல்வி இறுதி ஆண்டுவரை தொடர்ச்சியாக வழங்கப் படும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு குமரி மாவட்ட முன் னாள் படைவீரர் நல அலுவலகத்தை (தொலை பேசி எண்.04652-243515) தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×