என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரில் வாரிசு அரசியல்.. நிதிஷ் குமார் மகன் JDU-வில் ஐக்கியம்- அடுத்த துணை முதல்வர் ஆக வாய்ப்பு | Bihar Politics
    X

    பீகாரில் வாரிசு அரசியல்.. நிதிஷ் குமார் மகன் JDU-வில் ஐக்கியம்- அடுத்த துணை முதல்வர் ஆக வாய்ப்பு | Bihar Politics

    • நீண்ட காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
    • சாம்ராட் சவுத்ரி அடுத்த முதலமைச்சராக அதிக வாய்ப்புள்ளது.

    அண்மையில் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக நிதிஷ் குமார் அறிவித்து, மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கு என்டிஏ சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    பீகாரின் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு) உடன் கூட்டணியில் உள்ள பாஜகவை சேர்ந்த ஒருவர் அடுத்த முதல்வராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நீண்ட காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் இன்று (மார்ச் 8) பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியில் இணைந்தார்.

    50 வயதான நிஷாந்த் குமார், ஜே.டி.யு கட்சியின் தேசிய செயல் தலைவர் சஞ்சய் ஜா முன்னிலையில் கட்சியின் உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொண்டார்.

    இந்த நிகழ்வின் போது மத்திய அமைச்சர் லாலன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.

    நிதிஷ் குமார் தனது குடும்பத்தினரை இதுவரை அரசியலில் இருந்து தள்ளியே வைத்திருந்த நிலையில், தற்போது நிஷாந்த் குமாரின் வருகை ஜே.டி.யு கட்சியின் அடுத்தகட்ட தலைமை மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

    அதேநேரம் பீகார் துணை முதல்வராக நிஷாந்த் குமார் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அதேநேரம் தற்போது பீகார் துணை முதல்வராக உள்ள பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி அடுத்த முதலமைச்சராக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×