என் மலர்
இந்தியா
- இந்தியா- சீனா இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது.
- தைவான் தங்களுடைய பகுதிய என தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது.
பென்டகன் அளித்த அறிக்கை அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அருணாச்சலம் பிரதேசம் சீனாவின் முக்கிய நலன். அருணாச்சல பிரதேசம் நலனில் பேச்சுவார்த்தை அல்லது சமரசத்திற்கு சீனா தயாராக இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் தலைமை தனது 'முக்கிய நலன்களின்' வரம்பை விரிவுபடுத்தி அதில் தைவான், தென் சீனக் கடலில் உள்ள இறையாண்மை கோரிக்கைகள் மற்றும் கடல்சார் பிரச்சினைகள், சென்காகு தீவுகள் மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியா- சீனா இடையே எல்லை பிரச்சினை நீணட காலமாக இருந்து வருகிறது. அருணாச்சல பிரதேசத்தின் பெரும் பகுதியை தங்களுடையது எனக் கூறி வருகிறது. மேலும், அருணாச்சல மாநில எல்லை அருகே குடியிறுப்புகளை கட்டி வருகிறது. கட்டமைப்புகளையும் விரிவுப்படுத்தி வருகிறது.
- பிறந்த நாள் விழா பார்ட்டில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது சம்பவம் நடைபெற்றுள்ளது.
- மயக்க பொருள் கொடுத்து உயர் அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் தனியார் ஐ.டி. நிறுவன பெண் மானேஜரை, சக நிறுவன சிஇஓ மற்றும் பெண் அதிகாரியின் கணவர் ஓடும் காரில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் மானேஜராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை பிறந்த நாள் விழா பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
இதே விழாவில் அந்த நிறுவனத்தின் சிஇஓ, பெண் நிர்வாகத் தலைவர் மற்றும் அவரது கணவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பார்ட்டி முடிந்து ஒவ்வொருவராக அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். பெண் மானேஜர் மட்டும் தனியாக இருந்துள்ளார். சிஇஓ, பெண் நிர்வாகத் தலைவர் ஆகியோர் அந்த பெண்ணை தங்கள் காரில் ஏறச் சொல்லியுள்ளனர். அவரும் தன் நிறுவத்தின் உயர் அதிகாரிகள்தானே, என நினைத்து காரில் ஏறியுள்ளார்.
கார் கொஞ்சம் தூரம் சென்ற பின், ஒரு கடை அருகே நின்றுள்ளது. ஒருவர் காரில் இருந்து இறங்கி சிகரெட் போன்ற ஒன்றை வாங்கி வந்துள்ளார். அதை பயன்படுத்துமாறு பெண் மானேஜரிடம் கொடுத்துள்ளனர். அவரும் பயன்படுத்தியுள்ளனர். உடனே மயக்க நிலைக்கு சென்றுள்ளார். அப்போது காரில் இருந்த சிஇஓ, பெண் நிர்வாகத் தலைவரின் கணவர் ஆகியோர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
காலையில் மயக்கம் தெளிந்த பின்னர்தான், தனக்கு நடந்த கொடூரத்தை உணர்ந்துள்ளார் பெண் மானேஜர். உடனடியாக காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.
போலீசார் புகார் அடிப்படையில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் மானேஜரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அறிக்கை கிடைத்த பின் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
- டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.
- காற்று சுத்திகரிப்பான அவசியம் என்ற நிலையில் ஜி.எஸ்.டி. 18 சதவீதம் வசூலிப்பதாக மனு.
டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமாக உள்ளது. இதனால் காற்று சுத்திகரிப்பானை மருத்துவ உபகரணம் கீழ் கொண்டு வந்து, அதற்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அவசரமான சூழ்நிலையில் ஜிஎஸ்டி வரியில் இருந்து காற்று சுத்திகரிப்பானுக்கு விலக்கு அளிக்காதது மகிழ்ச்சி அளிக்கவில்லை என தங்களது வருத்தத்தை தெரிவித்தனர்.
மேலும், முன்னதாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டு, ஜிஎஸ்டி வரியை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அத்துடன், கூட்டத்தை முன்னதாக கூட்டுவது குறித்து அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வருகிற 26-ந்தேதி (நாளை மறுதினம்) தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
- கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் துணை கேப்டன் ஹர்திக் சிங் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
- இந்த முறை கிரிக்கெட் வீரர்கள் யாரும் இதில் இடம் பெறவில்லை.
ஆண்டுதோறும் விளையாட்டு வீரர்களை கவுரவிக்கும் வகையில் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது வழங்கப்பட்டு வருகிறது.
கேல் ரத்னா விருது என்பது இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதாகும். இது அதிகாரப்பூர்வமாக மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என்று அழைக்கப்படுகிறது.
மற்றொரு விருதான அர்ஜுனா விருது என்பது இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சிறந்த செயல்பாட்டை அங்கீகரிக்கும் 2-வது உயரிய விருதாகும்.
இந்த விருது விளையாட்டு அமைச்சகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. விருதுடன் ரூ.15 லட்சம் பரிசுத்தொகை, சான்றிதழ் மற்றும் அர்ஜுனா சிலை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் துணை கேப்டன் ஹர்திக் சிங் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் அர்ஜூனா விருதுக்கு தடகளம், ஹாக்கி, செஸ், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், பேட்மிண்டன், கபடி ஆகிய போட்டிகளில் சாதித்த 24 பேர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட் வீரர்கள் யாரும் இல்லை.
மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா: ஹர்திக் சிங் (ஹாக்கி)
அர்ஜுனா விருதுகள்:
தேஜஸ்வின் சங்கர் (தடகளம்), பிரியங்கா (தடகளம்), நரேந்தர் (குத்துச்சண்டை), விதித் குஜ்ராத்தி (செஸ்), திவ்யா தேஷ்முக் (செஸ்), தனுஷ் ஸ்ரீகாந்த் (காதுகேளாதோர் துப்பாக்கி சுடுதல்), பிரணதி நாயக் (ஜிம்னாஸ்டிக்ஸ்), ராஜ்குமார் பால் (ஹாக்கி), சுர்ஜித்ரான்ஹோக்கி கண்டேல்வால் (பாரா-ஷூட்டிங்), ஏக்தா பியான் (பாரா தடகளம்), பத்மநாப் சிங் (போலோ), அரவிந்த் சிங் (ரோயிங்), அகில் ஷியோரன் (துப்பாக்கிச் சுடுதல்), மெஹுலி கோஷ் (துப்பாக்கிச் சுடுதல்), சுதிர்தா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்), சோனம் மாலிக் (மல்யுத்தம்), டிமிண்டோன், அராட்டி கோபிசந்த் (பேட்மிண்டன்), லால்ரெம்சியாமி (ஹாக்கி), முகமது அப்சல் (தடகளம்), பூஜா (கபடி).
- மேற்கு வங்க மாநிலத்தில் சாமி சிலைகள் போலீஸ் உதவியுடன் சிறைச்சாலை வேன்களில் ஏற்றி செல்லப்பட்டன.
- இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக குற்றச்சாட்டு.
மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி, மாநிலத்தில் சனாதன தர்மம் பாதுகாப்பனது அல்ல எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
தெற்கு 24 பர்கானசில் உள்ள சாகர் ஐலேண்டில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு சுவேந்து அதிகாரி பேசியதாவது:-
சாமி சிலைகள் சிறைச்சாலை வேன்களில் போலீஸ் உதவியுடன் ஏற்றப்பட்டன. ஆனால் ஒரு நபர் கூட கைது செய்யப்படவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் சனாதன தர்மம் மற்றும் இந்துக்களுக்கு மேற்கு வங்க மாநிலம் பாதுகாப்பானது அல்ல என்பதற்கு வழிவகுத்துள்ளன.
காவல்துறையினர் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் சட்டசபை தேர்தலுக்குப் பிறகு விளைவுகளை சந்திக்க நேரிம்.
இவ்வாறு சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.
சாகர் ஐலேண்டில் பேரணி நடத்த சுவேந்து அதிகாரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்றம் அவரது பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
- ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 12.72 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்தனர்.
- சொத்துகளின் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாயை தாண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்ட துணை போக்குவரத்து ஆணையர் மூட் கிஷன். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது.
இதைத் தொடர்ந்து தெலுங்கானா ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அவருக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது அவர் ரூ.12.72 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்களை வாங்கி இருந்தது கண்டறியப்பட்டது. இந்த சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதனால் அவர் வாங்கிய சொத்துக்களின் மதிப்பு ரூ.100 கோடி வரை செல்லலாம் என்று கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின் 13 (1), (பி) மற்றும் 13 (2) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- 16 வயதான சிறுமி செங்காரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
- 2019 ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரின் சிறைத்தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனிப்பட்ட பிணையில் செங்காரை ஜாமினில் விடுவித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டைச்சுற்றி 5 கி.மீ. தூரத்திற்கு செங்கார் செல்லக்கூடாது என்றும், அப்பெண்ணையோ அல்லது அவரது தாயாரையோ அச்சுறுத்தக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது. வாரம் ஒருமுறை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் ஜாமின் ரத்து செய்யப்படும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு 16வயதான சிறுமி செங்காரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே இந்த குற்றத்திற்கு நீதிக்கேட்டு போராடியதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் இருக்கும்போது இச்சிறுமியின் தந்தை உயிரிழந்தார். இந்த காவல் மரண வழக்கிலும் செங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் இதுதொடர்புடைய பிற வழக்குகள் அனைத்தும் ஆகஸ்ட் 1, 2019 அன்று உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் உத்தரபிரதேசத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்திலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் செங்காரின் மேல்முறையீட்டில் டெல்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்தது.
இன்னலையில், செங்காருக்கு ஆயுள் தண்டனையை, டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்ததற்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
மேலும், டெல்லி இந்தியா கேட் பகுதியில் அப்பெண், போராட்டத்தில் ஈடுபட போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்
- ராஜ் தாக்கரே 2006-ஆம் ஆண்டு மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா கட்சியை தொடங்கினார்
- உத்தவ் மற்றும் ராஜும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றாக கைகோர்த்தனர்.
சிவசேனா கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா (எம்என்எஸ்) என்ற கட்சியை தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் உத்தவ் மற்றும் ராஜும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மராத்தி மொழிக்காக ஒன்றாக கைகோர்த்தனர்.
தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு பேரணி நடத்தியது.
இந்நிலையில், வரவிருக்கும் நகராட்சித் தேர்தல்களுக்காக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா காட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
கூட்டணி முடிவை அறிவித்த பிறகு தாக்கரே சகோதரர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
உத்தவ்-ராஜ் கூட்டணி இந்தியா கூட்டணிக்கும் வலுவானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளும் மும்பை, தானே, கொங்கன் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் பலமாக உள்ளன.
- ஆப்பிரிக்க பயிற்சியாளரிடம், நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
- இந்தி கற்கவில்லை என்றால் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும் என பாஜக கவுன்சிலர் மிரட்டினார்.
டெல்லியில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி, ஆப்பிரிக்க கால்பந்து பயிற்சியாளர் ஒருவரை ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோவில், உள்ளூர் குழந்தைகளுக்கு கால்பந்து பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த ஆப்பிரிக்க பயிற்சியாளரிடம், நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை என கேள்வி எழுப்பினார். அவர் அதற்கு பதிலளிக்காததால், நான் சொல்வதை நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை? ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் இங்கே பணம் சம்பாதிக்கிறீர்கள் என்றால், இந்தியும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்" எனப் பேசியுள்ளார். மேலும் மற்றொருவரிடம் (பூங்கா காவலாளியா என்பது சரியாக தெரியவில்லை) நான் உங்களுக்குச் சொல்கிறேன், பூங்கா இரவு 8 மணிக்குள் மூடப்பட வேண்டும். இல்லையெனில் ஏதேனும் குற்றச் செயல் நடந்தால், நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார்,.
இந்த வீடியோ வைரலாக ரேணு சவுத்ரிக்கு பெரும் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து வீடியோ தொடர்பாக விளக்கமளித்த அவர், பூங்காவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போதைப்பொருள் தொடர்பாக தனக்குப் பலமுறை புகார் வந்தது. அதனால்தான் தான் பூங்காவிற்கு வருகை தந்தேன். ஆனால், யாரையும் அச்சுறுத்தும் நோக்கம் தனக்கு இல்லை. தகவல்தொடர்பை எளிதாக்க இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினேன்" என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, பாஜக மேலிடத்தின் வற்புறுத்தலின் பேரில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார்.
- உள்ளூர் டிரைவர்களுக்கு உறுதியான வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலமும் சுற்றுலாவை மேம்படுத்துவதாகும்.
- உள்ளூரில் பதிவு செய்யப்பட்டு, போக்குவரத்துத் துறையால் சாலைக்கு ஏற்றதாக சான்றளிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
ஆந்திர அரசு, ஜனவரி முதல் வாரத்தில் விஜயவாடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான டாக்ஸி மற்றும் ஆட்டோ முன்பதிவு தளமான "ஆந்திரா டாக்ஸி"-ஐத் தொடங்க உள்ளது.
தனியார் நிறுவனங்களால் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணங்களைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில், மலிவு, பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான போக்குவரத்து சேவைகளை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
கனகதுர்கா கோவில், பவானி தீவு மற்றும் கிருஷ்ணா நதிக்கரையோரக் கோவில்கள் போன்ற முக்கிய இடங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிக்கனமான பயண விருப்பங்களை வழங்குவதன் மூலமும், உள்ளூர் டிரைவர்களுக்கு உறுதியான வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலமும் சுற்றுலாவை மேம்படுத்துவதாகும். உள்ளூரில் பதிவு செய்யப்பட்டு, போக்குவரத்துத் துறையால் சாலைக்கு ஏற்றதாக சான்றளிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
பயணிகள் பாதுகாப்பில், குறிப்பாக பெண்களுக்கு, சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பயணம் மற்றும் வாகனத் தரவுகள் உள்ளூர் போலீஸ் நிலையங்களுடன் பகிரப்பட்டு, மாநில தரவு மையத்திற்கு அனுப்பப்படும், அதிகாரிகள் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என தெரிவித்தனர்.
- நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
- கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பான பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
நாளை உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பான பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஒடிசாவில் தெருவோரத்தில் கிறிஸ்தவப் பொருட்களை விற்பனை செய்து வந்த மக்களை மிரட்டிய மதவாத கும்பல், உடனடியாக அவர்களை காலி செய்ய சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவில், :இது இந்து ராஷ்டிரம்.. இங்க கிறிஸ்தவப் பொருட்களை விற்கக் கூடாது.." என்று அந்த கும்பல் மிரட்டியுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் தொடர்ந்து 10-வது ஆண்டாக பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.
- கொச்சியைச் சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டில் மட்டும் 368 முறை கறிவேப்பிலையை ஆர்டர் செய்ததாக ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் தெரிவித்துள்ளது.
இந்த இயந்திரமான வாழ்க்கையில் நம்மில் பலரால் அதிகம் விரும்பப்படுவது பிரியாணி. இதனை நாம் வீட்டில் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக ஓட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடவே பலரும் விரும்புவர். இதனால் இந்தியாவில் ஆன்லைனில் பல உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் தொடங்கி உள்ளன. இதில் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் உணவு டெலிவரி செயலியாக ஸ்விக்கி உள்ளது.
இந்த நிலையில், தற்போது நாம் 2025-ம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி நடப்பாண்டில் தங்களுடைய ஸ்விக்கி செயலி வாயிலாக எந்த உணவு அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டது என்பது குறித்த சுவாரசியமான தகவல்களை வெளியிட்டு உள்ளது.
இதன்படி இந்தியர்கள் அதிகமாக ஆர்டர் செய்த உணவுகளின் பட்டியலில் பிரியாணி, பர்கர் ஆகியவை முதல் இடத்தை பிடித்திருக்கின்றன. 2025-ம் ஆண்டில் ஸ்விக்கி தளத்தில் மட்டும் 9 கோடியே 30 லட்சம் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது. அதாவது ஒவ்வொரு நிமிடத்திற்கும் 194 பிரியாணி ஆர்டர் ஸ்விக்கிக்கு வந்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் தொடர்ந்து 10-வது ஆண்டாக பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2-ம் இடம் பிடித்த மேற்கத்திய உணவான பர்கருக்கு மட்டும் 4 கோடியே 42 லட்சம் மில்லியன் ஆர்டர்கள் வந்துள்ளது. மூன்றாவது இடத்தில் பீட்சா இருக்கிறது. இதன் ஆர்டர், 4 கோடியே 1 லட்சம் வந்திருப்பதாக ஸ்விக்கி தெரிவித்திருக்கிறது.
மேலும் கொச்சியைச் சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டில் மட்டும் 368 முறை கறிவேப்பிலையை ஆர்டர் செய்ததாக ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் தெரிவித்துள்ளது.






