என் மலர்tooltip icon

    இந்தியா

    • பல் மருத்துவரான இவர், நடனம் மற்றும் ஆடை அலங்கார போட்டிகளில் பங்கேற்பு.
    • 'மிஸ் கிராண்ட் இந்தியா' போட்டியில் பங்கேற்க உள்ளார்.

    கேரள மாநிலம் மூவாட்டுப்புழாவை சேர்ந்தவர் டாக்டர் கே.எஸ்.அஸ்வினி. பல் மருத்துவரான இவர், நடனம் மற்றும் ஆடை அலங்கார போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

    தொடர்ந்து அழகி போட்டியில் பங்கேற்ற அஸ்வினி, தற்போது 'மிஸ் கிராண்ட் கேரளா 2026' பட்டம் வென்றுள்ளார்.

    இதன் மூலம் அவர் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ள 'மிஸ் கிராண்ட் இந்தியா' போட்டியில் பங்கேற்க உள்ளார்.

    இவரது தந்தை ஸ்ரீராஜ், தெற்கு ரெயில்வேயில் மின் பொறியாளராகவும், தாயார் பிந்துமேனன், கேரள நீர் ஆணையத்தில் கணக்கு அதிகாரியாகவும் பணியாற்றி வருகின்றனர்.

    • மணமக்கள் திருமண உடை அணிந்து மணமேடையில் உட்கார்ந்து இருந்தனர்.
    • மண்டபத்தில் இருந்த சிலர் வாலிபரை பிடித்து தாக்கத் தொடங்கினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம்,என்.டி.ஆர் மாவட்டம், மைலாரத்தை சேர்ந்த இளம்பெண் பக்கத்து கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிந்தது. இதனால் பெண் வீட்டார் அவசர அவசரமாக வேறு ஒரு வாலிபரை தேர்ந்தெடுத்து திருமண தேதியை நிச்சயித்தனர்.

    நேற்று முன்தினம் திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. திருமணத்தில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் ஏராளமானோர் திருமண மண்டபத்தில் குவிந்தனர். பாட்டு கச்சேரியுடன் மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. பாடல்களுக்கு ஏற்றவாறு ஆண்களும், பெண்களும் நடனமாடி குதூகலித்தனர். மண்டபத்தில் திருமண விழா களைக்கட்டி இருந்தது.

    காலை மணமக்கள் திருமண உடை அணிந்து மணமேடையில் உட்கார்ந்து இருந்தனர். புரோகிதர் வேத மந்திரங்களை வாசிக்க மங்கள வாத்தியம் முழங்க திருமண மண்டபம் பரபரப்பாக இருந்தது. சிறிது நேரத்தில் மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்ட இருந்தார்.

    அப்போது திடீரென வாலிபர் ஒருவர் ஓடி வந்து மணமக்கள் முன்பாக நின்றார். வாலிபரைக் கண்ட மணமகள் மணமேடையில் இருந்து எழுந்து ஓடி சென்று நீ வந்து விட்டாயா எனக் கூறியபடி வாலிபரை கட்டிப்பிடித்துக் கொண்டார். இதனை கண்ட மணமகன் மற்றும் திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அப்போது மணமகள் எங்கள் பக்கத்து கிராமத்தை சேர்ந்த இவரை நான் காதலிக்கிறேன். இவருடன் மட்டுமே சேர்ந்து வாழ விரும்புகிறேன் என தெரிவித்தார். மண்டபத்தில் இருந்த சிலர் வாலிபரை பிடித்து தாக்கத் தொடங்கினர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் திருமண மண்டபத்திற்கு வந்து வாலிபரை மீட்டனர். உடனடியாக திருமணம் நிறுத்தப்பட்டது.

    மணமகளின் பெற்றோர் எங்களுக்கு ஒரே மகள் என்பதால் பல லட்சம் செலவு செய்து ஆடம்பரமாக திருமண ஏற்பாடுகளை செய்து இருந்தோம். மணமகளின் செயலால் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம் என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வரும் நாட்களில் மேலும் பல இந்தியர்கள் விமானங்கள் மூலம் நாடு திரும்புவார்கள்.
    • சிறப்பு விமானங்களும் இயக்கப்படுகின்றன.

    ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல், அதைத்தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது.

    கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய மோதல் ஒரு வாரத்தை கடந்து நீடித்து வருகிறது. பல்வேறு நாடுகளின் வான்வழி மூடப்பட்டதால் பலர் அங்கு சிக்கித் தவித்தனர்.

    இதனிடையே கடந்த சில நாட்களில் வான்வழிகள் பகுதியளவு திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்திய மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளன.

    இந்நிலையில் மார்ச் 1 முதல் மார்ச் 7 வரையிலான காலகட்டத்தில், பல்வேறு விமானங்கள் மூலம் மொத்தம் 52,000 இந்தியர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பியுள்ளனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    வரும் நாட்களில் மேலும் பல இந்தியர்கள் விமானங்கள் மூலம் நாடு திரும்புவார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    வழக்கமான விமானச் சேவைகள் மட்டுமின்றி, சிறப்பு விமானங்களும் இயக்கப்படுகின்றன.

    பதற்றம் நீடிப்பதை தொடர்ந்து மேற்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் சுமார் ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

    அத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகம் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி விநியோகம் தடையின்றி தொடர்வதையும் உறுதி செய்ய இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    • பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமா்வு நாளை முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடக்கிறது.
    • கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 28-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கடந்த 13-ந் தேதியுடன் முதல்கட்ட அமா்வு முடிவு அடைந்தது.

    முதல்கட்ட அமர்வின்போது ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் பாராளுமன்ற மக்களவையில் எதிா்க்கட்சிகள் அமளியை தொடங்கின.

    முன்னாள் ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணேயின் வெளியிடப்படாத சுயசரிதை நூல் சா்ச்சை, இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் ஆவணங்கள் விவகாரம் எனப் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி, மத்திய அரசுடன் எதிர்க்கட்சிகள் மோதல் போக்கை கடைபிடித்தன.

    கடந்த 3-ந்தேதி மக்களவையில் காகிதங்களை கிழித்து அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 8 போ் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

    சபாநாயகர் ஓம் பிா்லா முற்றிலும் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி, அவரைப் பதவி நீக்கம் செய்யக்கோரி தீா்மானம் கொண்டுவர காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

    இந்த பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்றம் நாளை கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமா்வு நாளை முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடக்கிறது.

    பாராளுமன்ற கூட்டத்தின் முதல் நாளிலேயே மக்களவையில் சபாநாயகர் ஓம்பிர்லா மீதான பதவி நீக்க தீர்மான விவாதம் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றே தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிகிறது.

    இந்த தீர்மானத்தை காங்கிரஸ் எம்.பி.க்களான முகமது ஜாவத், கே.சுரேஷ், மல்லு ரவி ஆகியோர் முன்மொழிகிறார்கள். இந்த தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பின் போது அனைத்து உறுப்பினரும் அவையில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் தங்கள் எம்.பி.க்களுக்கு கொறடா மூலம் உத்தரவை பிறப்பித்துள்ளன.

    அரசமைப்பு சட்டத்தின் 94சி பிரிவின் கீழ் பெரும்பான்மையான வாக்குகளுடன் தீர்மானம் நிறைவேற்றி சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய முடியும். தற்போது பா.ஜ.க. கூட்டணிக்கு 293 எம்.பி.க்கள் உள்ளனர்.

    கடந்த காலங்களில் பாராளுமன்ற மக்களவை சபாநாயகர்களாக இருந்த ஜி.வி. மாவலங்கர் (1954), ஹூக்கம் சிங் (1966), பல்ராம் ஜாக்கர் (1987) ஆகியோர் இதேபோல் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டனர். ஆனால் எந்த தீர்மானமும் வெற்றி பெறவில்லை.

    தற்போது எம்.பி.க்கள் பலத்தின் அடிப்படையில் ஓம்பிர்லாவுக்கு எதிரான தீர்மானமும் தோல்வியை சந்திக்கும்.

    இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேற்கு ஆசியா நிலவரம் குறித்தும், இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பல் தாக்கப்பட்டது குறித்தும், ரஷிய கச்சா எண்ணெய் விவாதத்தில் அமெரிக்காவின் மிரட்டல் குறித்தும் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சியினர் பிரச்சனையை கிளப்புவார்கள். மத்திய அரசு இந்த விவகாரங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கும் என்று கருதப்படுகிறது.

    இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட அமர்விலும் கடும் அமளி நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • முகமூடி அணிந்த நான்கு பேர் வீட்டின் கதவை உடைத்தனர்.
    • மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்தனர்.

    மத்தியப் பிரதேசத்தில் 90 வயது மூதாட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை கொடூரம் அரங்கேறியுள்ளது.

    மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 90 வயது மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    கடந்த மார்ச் 6 நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த நான்கு பேர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

    தனியாக இருந்த மூதாட்டியை அவர்கள் நால்வரும் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.

    பலத்த காயமடைந்த மூதாட்டி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வு காரணமாக அவரது நிலைமை தற்போது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.

    குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுப் போராட்டம் நடத்தினர். 

    • 21 வயது முதல் 40 வயது வரை.
    • உடனடியாக அமலுக்கு வந்தது.

    மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையில் நேரடி போட்டி நிலவி வருகிறது.

    இந்த சூழல் மேற்கு வங்கத்தில் பத்தாம் வகுப்பு முடித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி வழங்கும் யுவசக்தி திட்டத்தை மம்தா பானர்ஜி அறிவித்தார்.

    10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலையில்லாமல் இருக்கும் 21 வயது முதல் 40 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

    நேற்று (மார்ச் 7) முதலே இது உடனடியாக அமலுக்கு வருவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

    தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இருந்து பெருமளவிலான பெயர்களை நீக்கியுள்ளதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது மம்தா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

    இது வெறும் தேர்தல் காலத்து இலவச அறிவிப்பு என்று பாஜக விமர்சித்துள்ளது.

    • பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துகொண்டார்.
    • ஜனாதிபதியை வரவேற்க மம்தா பானர்ஜியோ அல்லது அவர் சார்பில் எந்த ஒரு அமைச்சரோ செல்லவில்லை.

    மேற்கு வங்கத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துகொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பிதாநகர் பகுதியிலிருந்து பாக்தோக்ரா விமான நிலையம் அருகேயுள்ள கோஷாய்பூருக்கு மாற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சி இடமாற்றத்தால் சொற்ப எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே அதில் பங்கேற்றனர் எனவும், இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இதற்கிடையே, ஜனாதிபதி வருகையின்போது அவரை வரவேற்க மம்தா பானர்ஜியோ அல்லது அவர் சார்பில் எந்த ஒரு அமைச்சரோ செல்லவில்லை என்றும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இவை அனைத்தையும் நிகழ்ச்சியில் மேடையேறிய ஜனாதிபதி முர்மு தமது உரையில் சுட்டிக்காட்டிப் பேசினார். இந்தக் குற்றச்சாட்டுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி பதிலளித்தார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "திரிணாமுல் காங்கிரஸ் அரசு உண்மையில் எல்லைகளை மீறிச் செயல்பட்டு வருகிறது. ஜனாதிபதி அவமதிக்கப்பட்டதற்கு அவர்களது நிர்வாகமே பொறுப்பாகும். இது வெட்கக்கேடானது; பழங்குடியின சமூகங்களின் முன்னேற்றத்தின்மீது நம்பிக்கை பூண்டுள்ள ஒவ்வொருவரும் மனம் நொந்து போயுள்ளனர்.

    பழங்குடியின சமூகப் பின்புலத்திலிருந்து வந்துள்ள ஜனாதிபதி முர்மு வெளிப்படுத்தியிருக்கும் வேதனையானது, இந்திய மக்களின் மனங்களிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதன் மாண்பு எப்போதுமே மதிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    பிரதமர் மோடியின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்து மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சிலிகுரியில் நடைபெறும் 9வது சர்வதேச ஆதிவாசி சந்தால் மாநாட்டிற்கு ஜனாதிபதியை தனியார் அமைப்பான சர்வதேச சந்தால் கவுன்சில் அழைத்தது.

    சிலிகுரி நகராட்சி மேயர், சிலிகுரி காவல் ஆணையர் ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர். மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை.

    பாஜக தனது சொந்த கட்சியின் அஜெண்டாவிற்கு நாட்டின் மிக உயர்ந்த தலைவரை அவமதித்து தவறாகப் பயன்படுத்துவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று தெரிவித்துள்ளார்.

    • பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துகொண்டார்.
    • ஜனாதிபதியை வரவேற்க மம்தா பானர்ஜியோ அல்லது அவர் சார்பில் எந்த ஒரு அமைச்சரோ செல்லவில்லை.

    புதுடெல்லி:

    மேற்கு வங்கத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கலந்துகொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பிதாநகர் பகுதியிலிருந்து பாக்தோக்ரா விமான நிலையம் அருகேயுள்ள கோஷாய்பூருக்கு மாற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சி இடமாற்றத்தால் சொற்ப எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே அதில் பங்கேற்றனர் எனவும், இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இதற்கிடையே, ஜனாதிபதி வருகையின்போது அவரை வரவேற்க மம்தா பானர்ஜியோ அல்லது அவர் சார்பில் எந்த ஒரு அமைச்சரோ செல்லவில்லை என்றும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இவை அனைத்தையும் நிகழ்ச்சியில் மேடையேறிய ஜனாதிபதி முர்மு தமது உரையில் சுட்டிக்காட்டிப் பேசினார். இந்தக் குற்றச்சாட்டுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி பதிலளித்தார்.

    இந்நிலையில், ஜனாதிபதி பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது என பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    திரிணாமுல் காங்கிரஸ் அரசு உண்மையில் எல்லைகளை மீறிச் செயல்பட்டு வருகிறது. ஜனாதிபதி அவமதிக்கப்பட்டதற்கு அவர்களது நிர்வாகமே பொறுப்பாகும். இது வெட்கக்கேடானது; பழங்குடியின சமூகங்களின் முன்னேற்றத்தின்மீது நம்பிக்கை பூண்டுள்ள ஒவ்வொருவரும் மனம் நொந்து போயுள்ளனர்.

    பழங்குடியின சமூகப் பின்புலத்திலிருந்து வந்துள்ள ஜனாதிபதி முர்மு வெளிப்படுத்தியிருக்கும் வேதனையானது, இந்திய மக்களின் மனங்களிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதன் மாண்பு எப்போதுமே மதிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    • கச்சா எண்ணெய் வாங்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    • ரஷிய எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.

    ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி பாதையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், போட்டித்தன்மை வாய்ந்த விலைகளை வழங்கும் எந்தவொரு இடத்தில் இருந்தும் இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் எரிசக்தி விநியோககத்தில் தடைகள் இருந்தபோதிலும், பாதுகாப்பாக உள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.

    "ஹார்முஸ் பாதையில் பதட்டங்கள் அதிகரித்து வரும் போதிலும், இந்தியாவின் எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாகவும் நிலையானதாகவும் உள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் ஆதாரங்களை 27 நாடுகளில் இருந்து 40 நாடுகளாக பன்முகப்படுத்தியுள்ளது, இது பல மாற்று விநியோக வழிகளை உறுதி செய்கிறது. தேசிய நலனுக்காக, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் மலிவு விலையில் கிடைக்கும் எங்கிருந்து எண்ணெய் வாங்குகிறது.

    ரஷிய எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா எந்த நாட்டின் அனுமதியையும் ஒருபோதும் நம்பி இருக்கவில்லை. இந்தியா பிப்ரவரி 2026 இல் கூட ரஷிய எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது, மேலும் ரஷியா இன்னும் இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையராக உள்ளது.

    ரஷியா-உக்ரைன் போரின் மூன்று ஆண்டுகளாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆட்சேபனைகளை மீறி இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்கிக் கொண்டே இருந்தது. 2022-க்கு பிறகு தள்ளுபடி விலைகள் மற்றும் சுத்திகரிப்பு தேவை காரணமாக இறக்குமதி கணிசமாக அதிகரித்தது," என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா வழங்கிய தற்காலிக விலக்கைத் தொடர்ந்து, ரஷ்யாவின் எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்வதாகவும் இந்தியா சனிக்கிழமை உறுதிப்படுத்தியது. மத்திய கிழக்கில் போர் காரணமாக இந்த விலக்கு அளிக்கப்பட்டது. அத்தகைய கொள்முதல்களை செய்ய மத்திய அரசு எந்த நாட்டிடம் இருந்தும் அனுமதி பெற தேவையில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

    • 21 நாட்களுக்கு பின்பே இரண்டாவது சிலிண்டர் முன்பதிவு என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
    • இடையில் சிலிண்டர் தீர்ந்து போனால் வீட்டிற்கு நேரடியாக உணவு டெலிவரி செய்வீர்களா?

    மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சமையல் சிலிண்டருக்கான விலை இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் விலை உயர்வுடன் முன்பதிவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதற்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில் "சமையல் சிலிண்டர் விலை இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது, அத்துடன் 21 நாட்களுக்கு பின்பே இரண்டாவது சிலிண்டர் முன்பதிவு என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு ஏன்?.

    இடையில் சிலிண்டர் தீர்ந்து போனால் வீட்டிற்கு நேரடியாக உணவு டெலிவரி செய்வீர்களா? மற்றவர்கள் உங்களை பார்த்து பயப்படலாம். நான் பயப்படமாட்டேன்" என்றார்.

    • தேரா சச்சா சவுதா அமைப்பிற்குள் நடந்த பாலியல் சுரண்டல்கள் குறித்து அவர் செய்தி வெளியிட்டதே கொலைக்கு காரணம்.
    • சுமார் 320 நாட்களுக்கும் மேலாக சிறைக்கு வெளியே பரோலில் இவர் கழித்துள்ளார்

    அரியானா, ராஜஸ்தான், உ.பி உள்ளிட்ட வட மாநிலங்களில் பிரபல சாமியாராக திகழ்ந்து வருபவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். 'தேரா சச்சா சவுதா' என்ற பெயரில் பல மாநிலங்களில் இவர் ஆசிரமம் நடத்தி வருகிறார்.

    தனது ஆசிரமத்தில் 2 பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு மற்றும் பத்திரிகையாளர் கொலை வழக்கு ஆகியவற்றில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

    இதில் பத்திரிகையாளர் கொல்லப்பட்ட வழக்கில் ராம் ரஹீமுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அரியானாவின் சிர்சாவில் உள்ளூர் பத்திரிகை நடத்தி வந்த ராம் சந்தர் சத்ரபதி, 2002ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவரது வீட்டின் வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார்.

    தேரா சச்சா சவுதா அமைப்பிற்குள் நடந்த பாலியல் சுரண்டல்கள் குறித்து அவர் செய்தி வெளியிட்டதே இந்த கொலைக்குக் காரணம் என்று சிபிஐ தனது விசாரணையில் தெரிவித்தது.

    2019ஆம் ஆண்டு பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், சத்ரபதி கொலை வழக்கில் குர்மீத் சிங் குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

    இந்தத் தண்டனையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது.

    இந்நிலையில் இன்று நீதிபதி விக்ரம் அகர்வால் தலைமையிலான அமர்வு, குர்மீத் சிங்கிற்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து அவரை விடுவித்தது.

    குர்மீத் சிங் விடுவிக்கப்பட்டாலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இரண்டு குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அவர்களுக்கான தண்டனையை உறுதி செய்துள்ளது.

    பத்திரிகையாளர் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டாலும், பாலியல் வன்கொடுமை மற்றும் பிற வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளதால் குர்மீத் ராம் ரஹீம் சிங் தொடர்ந்து சிறையிலேயே இருப்பார்.  

    ஆனால் 2017-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மொத்தம் 15 முறை பரோலில் வெளியே வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 320 நாட்களுக்கும் மேலாக சிறைக்கு வெளியே பரோலில் இவர் கழித்துள்ளார் என்பது சர்ச்சையான நிலையில் தற்போது கொலை வழக்கில் அவரின் விடுதலை விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. 

    • ஈரான் கப்பலில் இருந்து 87 பேர் கொல்லப்பட்டனர்.
    • 183 பேரும் கொச்சியில் தங்கியுள்ளனர்.

    இந்தியாவின் கடற்படை அழைப்பை ஏற்று விசாகப்பட்டினத்தில் நடந்த 'மிலன்-2026' சர்வதேசக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க ஈரான் போர் கப்பலான 'ஐரிஸ் டெனா' வந்திருந்தது.

    பயிற்சி முடிந்து மார்ச் 4 அன்று இலங்கை அருகே இந்திய பெருங்கடலில்சென்றுகொண்டிருந்த ஐரிஸ் டெனாவை அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் தாக்கி மூழ்கடித்தது. இதில் ஈரான் கப்பலில் இருந்து 87 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்தியாவின் விருந்தினராக சென்ற எங்கள் கப்பலை முன்னறிவிப்பின்றி தாக்கிய அமெரிக்கா விரைவில் வருத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு சில நாட்கள் முன்னர் மற்றொரு ஈரான் போர் கப்பலான ஐரிஸ் லாவன் கப்பலுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் நடைபெற்ற சர்வதேசக் கடற்படை ஆய்வில் பங்கேற்பதற்காக இந்தக் கப்பல் வந்திருந்தது.

    தனது பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில், இந்தக் கப்பலில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

    இதனை சரிசெய்வதற்காக கொச்சித் துறைமுகத்தில் கப்பலை நிறுத்த அனுமதிக்கக் கோரி பிப்ரவரி 28 அன்று ஈரான் அதிகாரிகள் விண்ணப்பித்தனர்.

    மறுநாளே (மார்ச் 1) இந்திய அதிகாரிகள் இதற்கான அனுமதியை வழங்கியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    தற்போது இந்தக் கப்பலும், அதில் உள்ள 183 பேரும் கொச்சியில் தங்கியுள்ளனர். 

    ×