அசாம் மக்களில் ஒருவனாக நாளை காலை நான் இருப்பேன் - பிரதமர் மோடி

அசாமில் 1.06 லட்சம் நில பட்டாக்கள் மற்றும் சான்றிதழ்களை நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வழங்குகிறார்.
இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் 4.5 கி.மீட்டரில் கிராமம்- தனது பகுதி என நியாயப்படுத்தும் சீனா

இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேச பகுதியில் 4.5 கி.மீட்டரில் கிராமம் ஒன்றை சீனா அமைத்துள்ளது. இதனை சீனா தனது பகுதி என நியாயப்படுத்தி உள்ளது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

மாநிலங்களவை உறுப்பினரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான ரஞ்சன் கோகாய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 2 ஆயிரத்து 779 பேருக்கு கொரோனா - 50 பேர் பலி

மகாராஷ்டிராவில் இன்று 2 ஆயிரத்து 779 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 753 பேருக்கு கொரோனா - 17 பேர் பலி

கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 753 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் மீண்டும் பரவும் மர்மநோய் - 22 பேர் பாதிப்பு

ஆந்திராவின் எலுரு பகுதியில் மீண்டும் மர்மநோய் பரவி வருகிறது. இந்த நோய்க்கு 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் தங்கள் முடிவை நாளை தெரிவிக்க வேண்டும் - மத்திய வேளாண் மந்திரி தோமர்

விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டுமெனவும், நல்லது எதுவும் நடந்துவிடக்கூடாது எனவும் சில சக்திகள் விரும்புகின்றன என மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.
3 1/2 மணி நேரம் காக்கவைத்து அவமதித்துவிட்டனர்... திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி - விவசாய சங்க பிரதிநிதிகள்

மத்திய அமைச்சர்கள் எங்களை 3 1/2 மணி நேரம் காக்கவைத்து அவமதித்துவிட்டனர்... டிராக்டர் பேரணி 26-ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாய சங்கங்கள் - மத்திய அரசு இடையேயான 11-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி

விவசாய சங்கங்கள் - மத்திய அரசு இடையே நடந்த 11-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.
இந்திய பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு - கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மீது சிபிஐ வழக்குப்பதிவு

இந்திய பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட சம்பவத்தில் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
தேசிய பாதுகாப்பு முற்றிலும் சமரசம் செய்யப்பட்டுள்ளது - காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு

விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது என்று சோனியா காந்தி கூறி உள்ளார்.
மேற்குவங்களம்: மம்தா பானர்ஜி அமைச்சரவையில் இருந்து மேலும் ஒரு மந்திரி ராஜினாமா

மேற்கு வங்க வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி ராஜினாமா,ஒரு மாதத்தில் மம்தா பானர்ஜி அரசிலிருந்து ராஜினாமா செய்த மூன்றாவது அமைச்சர் இவர் ஆவார்.
ஜூன் மாதத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் தேர்வு - கே.சி.வேணுகோபால் தகவல்

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் வரும் ஜூன் மாதம் தேர்ந்தெடுக்கப்படுவார் என கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்கள் விஷயத்தில் இறங்கி வந்த மத்திய அரசு... மாற்றத்திற்கான முக்கிய காரணங்கள்



கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் எல்லைகளில் விவசாயிகள் நடத்திய முற்றுகைப் போராட்டம், கோரிக்கையை வென்றெடுப்பதில் இருந்த உறுதிப்பாடு ஆகியவை, மத்திய அரசின் அணுகுமுறையை மாற்றியிருக்கிறது.
கப்பலை மோதவிட்டு 4 மீனவர்கள் கொலை- இலங்கைக்கு மத்திய அரசு கடும் கண்டனம்

கப்பலை மோதவிட்டு 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை தூதரிடம் மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடக்குமா? -விவசாயிகளுடன் மத்திய அரசு 11வது சுற்று பேச்சுவார்த்தை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தையை தொடங்கியது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 7 சிறுமிகளின் கர்ப்பத்தை கலைக்க கேரள ஐகோர்ட்டு அனுமதி

கொரோனா ஊரடங்கு காலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 7 சிறுமிகளின் கர்ப்பத்தை கலைக்க கேரள ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை

சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை செய்ய கர்நாடகா சிறைத்துறை முடிவு செய்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் சிறுமி கற்பழித்து கொலை - கோடாரியால் வெட்டிக் கொன்ற கொடூரம்

உத்தரபிரதேசத்தில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி கோவில் அன்னதான திட்டத்திற்கு 3 டன் காய்கறி வழங்கிய முஸ்லிம் வியாபாரிகள்

சித்தூர் மாவட்டம் கேஜி கண்டரிக பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் இஸ்லாமியர்கள் சிலர் இணைந்து திருப்பதி ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு 3 டன் காய்கறிகளை நன்கொடையாக வழங்கி உள்ளனர்.
பேரறிவாளன் விடுதலை விவகாரம்- ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம்

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் வழங்கி உள்ளது.