என் மலர்tooltip icon

    இந்தியா

    10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை - மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு | West Bengal
    X

    10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை - மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு | West Bengal

    • 21 வயது முதல் 40 வயது வரை.
    • உடனடியாக அமலுக்கு வந்தது.

    மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையில் நேரடி போட்டி நிலவி வருகிறது.

    இந்த சூழல் மேற்கு வங்கத்தில் பத்தாம் வகுப்பு முடித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி வழங்கும் யுவசக்தி திட்டத்தை மம்தா பானர்ஜி அறிவித்தார்.

    10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலையில்லாமல் இருக்கும் 21 வயது முதல் 40 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

    நேற்று (மார்ச் 7) முதலே இது உடனடியாக அமலுக்கு வருவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

    தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இருந்து பெருமளவிலான பெயர்களை நீக்கியுள்ளதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது மம்தா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

    இது வெறும் தேர்தல் காலத்து இலவச அறிவிப்பு என்று பாஜக விமர்சித்துள்ளது.

    Next Story
    ×