90 வயது மூதாட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. வீட்டுக்குள் புகுந்து நால்வர் வெறிச்செயல் | Madhya Pradesh

முகமூடி அணிந்த நான்கு பேர் வீட்டின் கதவை உடைத்தனர்.மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்தனர்.
90 வயது மூதாட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. வீட்டுக்குள் புகுந்து நால்வர் வெறிச்செயல் | Madhya Pradesh
Published on

மத்தியப் பிரதேசத்தில் 90 வயது மூதாட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை கொடூரம் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 90 வயது மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

கடந்த மார்ச் 6 நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த நான்கு பேர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

தனியாக இருந்த மூதாட்டியை அவர்கள் நால்வரும் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.

பலத்த காயமடைந்த மூதாட்டி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வு காரணமாக அவரது நிலைமை தற்போது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுப் போராட்டம் நடத்தினர். 

X

Maalai Malar
www.maalaimalar.com