என் மலர்tooltip icon

    இந்தியா

    • உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
    • இந்த விவகாரத்தில் யது கிரிசின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

    இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள், அதன் மூலம் தெரிந்தவர்கள்-தெரியாதவர்கள் என பலருடன் நட்பு வைத்துக்கொள்கிறார்கள். சமூக வலைதள பக்கங்களை பெரும்பாலானோர் நட்பு ரீதியாக பழகுவதற்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள்.

    ஆனால் சில மோசடி ஆசாமிகள், அதனை தங்களின் மோசடிக்கான தளமாக சமூகவலைதள பக்கங்களை மாற்றிக் கொள்கிறார்கள். அது போன்ற நபர்கள், தங்களின் சிந்தனைக்கு ஏற்ப பல்வேறு விதமான மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

    அப்படித்தான் கேரள மாநிலத்தில் ஒரு நபர், இன்ஸ்டாகிராமின் மூலம் கிடைத்த இளம்பெண்களுடன் நட்பை ஏற்படுத்தி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கேரள மாநிலம் திருச்சூர் தான்யம் பகுதியை சேர்ந்தவர் யது கிரிஷ்(வயது38). சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்கும் அவருக்கு, அதன் மூலமாக ஏராளமான புதிய நண்பர்கள் அறிமுகமாகி இருக்கின்றனர். அவர்களில் கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள் என பல இளம்பெண்களும் அடங்குவர்.

    அவர்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்ட யது கிரிஷ், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி தனது வலையில் சிக்கவைத்து சீரழித்துள்ளார். தான் கூறும் ஆசை வார்த்தையில் ஏமாந்து பழகும் பெண்களை தனியாக பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

    பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகளை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அதனை காண்பித்து மிரட்டி அந்த பெண்களுடன் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டபடி இருந்திருக்கிறார். யது கிரிசின் வலையில் சிக்கி ஏமாந்த இளம்பெண்களில் 3பேர், அவரைப்பற்றி திருச்சூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் யது கிரிஷ் ஏராளமான இளம் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

    அவர் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி பழகிய 20-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    மேலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்வதை வீடியோ எடுத்து, சம்பந்தப்பட்ட இளம்பெண்களை மிரட்டி பணமும் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து யது கிரிசின் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். அவரின் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

    யது கிரிஷ் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த 3 இளம்பெண்களிடமும் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். ஆனால் அவரிடம் சிக்கி ஏமாந்த மற்ற பெண்கள், அவமானத்துக்கு பயந்து புகார் அளிக்கவில்லை. ஆனால் அவர்களையும் கண்டுபிடித்து வாக்கு மூலம் பெறும் முயற்சியில் திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விவகாரத்தில் யது கிரிசின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர். அதில் அவர் பாலியல் வன்கொடுமை செய்த இளம்பெண்களின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் இருந்துள்ளன. அவற்றை போலீசார் தொழில்நுட்ப ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காலி செய்யாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சகம் எச்சரித்துள்ளது.
    • மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும்.

    டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள குடிசை வாசிகள் மார்ச் 6ம் தேதிக்குள் அங்கிருந்து காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    பிரதமர் இல்லம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலை பகுதி, டெல்லியின் மிக முக்கியமான பாதுகாப்பு வளையத்திற்குள் வருகிறது.

    எனவே அங்கு அமைந்துள்ள பாய் ராம் முகாம், மஸ்ஜித் முகாம், டி.ஐ.டி முகாம் ஆகியவற்றில் உள்ள குடிசைவாசிகள் காலி செய்யுமாறு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நோட்டீஸ் அவழங்கியுள்ளது.

    மார்ச் 6-க்குள் காலி செய்யாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சகம் எச்சரித்துள்ளது.

    வெளியேற்றப்படும் குடும்பங்களுக்குப் புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ், வடமேற்கு டெல்லியில் உள்ள சாவ்தா கெவ்ரா பகுதியில் நிரந்தர வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    டெல்லி மேம்பாட்டு ஆணையம் மற்றும் டெல்லி நகர்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய ஆய்வின் அடிப்படையில், தகுதியுள்ள 717 குடும்பங்களுக்கு ஏற்கனவே பிளாட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    முன்னதாக 2025 அக்டோபரில் நோட்டீஸ் அளிக்கப்பட்டபோது, இந்த விவகாரம் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு சென்றது.

    சட்டபூர்வமான நடைமுறைகளைப் பின்பற்றி வெளியேற்றத்தை மேற்கொள்ளுமாறு நவம்பர் 13, 2025 அன்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு மாற்று இடமாக வழங்கியுள்ள 'சாவ்தா கெவ்ரா' பகுதி, தற்போதைய ரேஸ் கோர்ஸ் சாலையில் இருந்து மிகவும் தொலைவில் உள்ளது.

    இதனால் அங்கிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    • நீதிமன்றமே, தந்திரிக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் இல்லை.
    • விசாரணையின் குளறுபடி, தலைவர்கள் ஈடுபட்டுள்ளதை நாங்கள் அம்பலப்படுத்துவோம்.

    சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தந்திரி கண்டவரரு ராஜீவரு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டார்.

    தந்திரி கைது தொடர்பான விவகாரத்தில் கொல்லம் ஊழல் தடுப்பு நீதிமன்றம், தந்திரிக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் இல்லை என தெரிவித்தது.

    இந்த விவகாரத்தை பாஜக தற்போது கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது:-

    முன்னாள் தேவசம் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தொடர்பில் இருந்து கவனத்தை திசைதிருப்ப தந்திரி கைது செய்யப்பட்டார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. நீதிமன்றமே, தந்திரிக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

    சுரேந்திரன் அல்லது தற்போது தேவசம் மந்திரியாக இருக்கும் வி.என். வாசவன் ஆகியோருக்கு எதிராக எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை.

    விசாரணையின் குளறுபடி, தலைவர்கள் ஈடுபட்டுள்ளதை நாங்கள் அம்பலப்படுத்துவோம். இந்த விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    எதிர்க்கட்சி தலைவரான வி.டி. சதீசன் சட்டசபையில் "தந்திரி கைதுக்கு பின்னால் உள்ள காரணம் மற்றும் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் இவர் செய்த குற்றம் என்ன? என்பதை சிறப்பு விசாரணைக் குழு விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

    • 15 வயது சிறுவன் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வளைகுடா நாட்டிற்கு சென்றுவிட்டார்.
    • இந்த வழக்கில் தொடர்புடைய 45 வயது மதிக்கத்தக்க ஆண் கைது செய்யப்படவில்லை.

    கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் சந்தேரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை, 15 வயது சிறுவன் உள்பட 5 பேர் கடந்த சில மாதங்களாக பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    கடை ஊழியர் நவுசாத் பொருட்களை வினியோகம் செய்ய சிறுமியின் வீட்டுக்கு வந்தபோது, தனியாக இருந்த அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதேபோல் சிறுவன் உள்பட மற்ற 4 பேரும் சிறுமி தனியாக வீட்டில் இருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.

    இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள், அதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், சிறுமியை சீரழித்த 15 வயது சிறுவன், சிறுமியின் மைத்துனர் உள்பட 5 பேர் மீதும் வழக்கு பதிந்தனர். இந்த சம்பவத்தில் நவுசாத், பயாஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

    15 வயது சிறுவன் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வளைகுடா நாட்டிற்கு சென்றுவிட்டார். ஆகவே அவரையும், இந்த வழக்கில் தொடர்புடைய 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஆகிய இருவரும் கைது செய்யப்படவில்லை. சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அவரது மைத்துனர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒட்டுமொத்த நாடும் காங்கிரஸ் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது.
    • இந்தியா வளரும்போது, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கவலைப்படுகிறார்கள்.

    ஏ.ஐ. மாநாடு நடைபெற்ற இடத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் மேலாடையின்றி போராட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 4 தலைவர்களை கைது செய்து டெல்லி போலீசார் விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:-

    * காங்கிரஸ் இளைஞர் பிரிவினர் ஏ.ஐ. மாநாட்டில் நடத்திய போராட்டம் தவறாக நடத்தப்பட்டது அல்ல. நன்றாக திட்டமிட்ட சதி.

    * நாட்டை அவமானப்படுத்த காங்கிரஸ் இளைஞர்களை பயன்படுத்துகிறது. இஐது விட பெரிய அவமானம் இருக்க முடியுமா?.

    * இளைஞர்கள் பிரிவு மூலம் ஏ.ஐ. மாநாட்டில் போராட்டம் நடத்தியம் காங்கிரஸ் நாட்டிற்கு எதிராக மிகப்பெரிய பாவம் செய்துள்ளது.

    * ஒட்டுமொத்த நாடும் காங்கிரஸ் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்தியா வளரும்போது, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கவலைப்படுகிறார்கள்.

    * தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதை எப்போது நிறுத்துவீர்கள்?.

    இவ்வாறு கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    • திடீரென்று, லிஃப்ட் கதவுகள் மூடத் தொடங்குகின்றன
    • சிறுமி லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் நின்று கதவுகளை மூட விடாமல் தடுக்கிறாள்

    லிஃப்டில் சிக்கி கொள்ளவிருந்த இரண்டு குழந்தைகளை சிறுமி ஒருவர் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.

    வீடியோவில், "2 குழந்தைகள் லிஃப்டுக்குள் நிற்கின்றனர். ஒரு சிறுமி வெளியே நின்று அவர்களுடன் பேசுகிறார். அப்போது திடீரென்று, லிஃப்ட் கதவுகள் மூடத் தொடங்குகின்றன. அப்போது அந்த சிறுமி லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் நின்று கதவுகளை மூட விடாமல் தடுக்கிறாள். இதை கவனித்த மற்றவர்கள் உடனடியாக இவர்களுக்கு உதவி செய்து குழந்தைகளை மீட்டனர்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் துணிச்சலாக செயல்ப்ட்ட சிறுமியை பாராட்டி வருகின்றனர். அதே சமயம் இந்த வீடியோ லிஃப்ட் பாதுகாப்பு குறித்த கேள்விகளை இணையத்தில் எழுப்பியுள்ளது. 

    • பிரேசில் அதிபர் மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
    • டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பிரேசில் அதிபர் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார்.

    புதுடெல்லி:

    பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இந்தியாவுக்கு வந்து உள்ளார். அவர் டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி-பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

    முன்னதாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அப்போது பிரேசில் அதிபரை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர். பின்னர் பாரம்பரிய வரவேற்பை லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஏற்றுக்கொண்டார். 

    • சுற்றுலா தலங்களையும் தகர்க்க முடிவு செய்துள்ளதாக உளவு அமைப்பு தனது எச்சரிக்கையில் தெரிவித்து உள்ளது.
    • செங்கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ந்தேதி நிகழ்த்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் காரை இயக்கிய பயங்கரவாதி டாக்டர் உமர் நபி உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

    இந்த சம்பவத்தில் உமர் நபியின் கூட்டாளிகளான சில டாக்டர்கள் உள்பட 10-க்கும் மேற்பேட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட டாக்டர்கள் அரியானாவின் பரிதாபாத்தில் செயல்படும் அல்பலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் டெல்லியில் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

    செங்கோட்டை அருகே உள்ள பகுதிகள், சாந்தினி சவுக்கின் சில பகுதிகள் மற்றும் டெல்லியில் உள்ள மத வழிபாட்டு தலங்கள், பாரம்பரிய கட்டிடங்களை தாக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவு அமைப்பு அந்த எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.

    சாந்தினி சவுக்கில் உள்ள ஒரு கோவிலும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் இருப்பதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களையும் தகர்க்க முடிவு செய்துள்ளதாக உளவு அமைப்பு தனது எச்சரிக்கையில் தெரிவித்து உள்ளது.

    இதை தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதை தவிர தீவிரவாதிகள் இலக்காக நிர்ணயித்த இடங்களில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    கண்காணிப்பு கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்துக்கிடமான பொருட்கள் அல்லது செயல்பாடுகள் குறித்து போலீசாருக்கு தெரிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பீதி அடைய வேண்டாம் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 6-ந்தேதி மசூதியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 31 பேர் பலியானார்கள். 160 பேர் காயம் அடைந்தார்கள். இதற்கு பழி வாங்கவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் டெல்லியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தலாம் என்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    • அதிகாலை வெட்டப்பட்ட கரும்புகளை டிராக்டரில் அடுக்கி அதன் மேல் அமர்ந்து பயணம் செய்தனர்.
    • திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் கவிழ்ந்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் ஜகமண்டி தாலுகா பகுதிக்கு கரும்பு வெட்டுவதற்காக மகாராஷ்டிரா மாநிலம் யுவத்மால் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் வெட்டப்பட்ட கரும்புகளை டிராக்டரில் அடுக்கி அதன் மேல் அமர்ந்து பயணம் செய்தனர்.

    அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் பயணம் செய்த மகாராஷ்டிராவை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் மணீஷ் பாண்டே (23), லட்சுமிசிராமதி (27), ரேகா பூகே மற்றும் 2 வயது குழந்தை ஹலகி பாண்டே ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்கள்.

    இந்த விபத்து பற்றி தெரியவந்ததும் ஜகமண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டிரம்புக்கு வரி விதிக்க அதிகாரம் இல்லை என அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
    • டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனவும் நீதிமன்றம் விமர்சனம்.

    இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து வந்தார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகையில் "பிரதமர் சமரசம் செய்து கொண்டார். அவரது துரோகம் இப்போது அம்பலமாகியுள்ளது. அவரால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர் மீண்டும் சரணடைவார்" என்றார்.

    முன்னதாக காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடியின் முடிவை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏ.ஐ. மாநாட்டு பகுதியில் இளைஞர் காங்கிரசார் மேலாடையின்றி போராட்டம் நடத்தினர்.
    • 4 காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    டெல்லி ஏ.ஐ. மாநாட்டு பகுதியில் காங்கிரசார் மேலாடையின்றி போராட்டம் நடத்தியதுடன் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டுக்கான செயற்கை நுண்ணறிவு மாநாட்டை இந்தியா நடத்தி வருகிறது. இன்றுடன் முடிவடைகிறது.

    டெல்லி பாரத் மண்டபத்தில் மாநாடு நடைபெற்று வரும் இந்த மாநாட்டின் நேற்றைய நிகழ்ச்சியில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ், கிரீஸ் பிரதமர் கிரிகோஸ், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே, பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில் டெல்லி பாரத் மண்டப பகுதிக்குள் திடீரென புகுந்த இளைஞர் காங்கிரசார், தங்கள் மேலாடையை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா- இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதுடன், பிரதமர் மோடிக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் இளைஞர் பிரிவு நடத்திய போராட்டத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

    பாஜக எம்.பி. மனோஜ் திவாரி "இந்த செயலுக்காக நாட்டு மக்கள் காங்கிரசை மன்னிக்க மாட்டார்கள். 80-க்கும் மேற்பட்ட நாட்டினர் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவின் முயற்சியை அவர்கள் பாராட்டியுள்ளனர்" என்றார்.

    இதற்கிடையே போராட்டம் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

    • வர்த்தக ஒப்பந்தத்தை டிரம்ப் அறிவிப்பதை உறுதி செய்ய பிரதமர் மோடியை கட்டாயப்படுத்தியது எது?.
    • அன்று மதியம் மக்களவையில் என்ன நடந்தது.

    இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து வந்தார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வரிகளை விதிப்பதற்கு அதிபர் டிரம்புக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது எனக்கூறிய அமெரிக்க உச்சநீதிமன்றம், அவர் விதித்துள்ள வரிகள் செல்லாது என உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி, வர்த்தக ஒப்பந்தத்திற்கு அவசரம் காட்டியதாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தனது பலவீனமான பிம்பத்தைப் பாதுகாக்க விரக்தியை வெளிப்படுத்தாமல், இன்னும் 18 நாட்கள் மட்டுமே காத்திருந்திருந்தால் இந்திய விவசாயிகள் தங்கள் வேதனையிலிருந்தும் துயரத்திலிருந்தும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். மேலும் இந்திய இறையாண்மை பாதுகாக்கப்பட்டிருக்கும்.

    நேற்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தனது வரிக் கொள்கையை ரத்து செய்த பிறகு, ஜனாதிபதி டிரம்ப் (i) மோடி தனது சிறந்த நண்பர் (ii) இந்தியா- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டபடி தொடரும் (iii) இந்தியா பாகிஸ்தான் மீதான தாக்குதலை (ஆபரேசன் சிந்தூர்) நிறுத்தாவிட்டால் அமெரிக்காவிற்கு இந்திய ஏற்றுமதிகள் மீதான வரிகளை அதிகரிப்பதாக மிரட்டி மே 10, 2025 அன்று அவர் தனிப்பட்ட முறையில் ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தை நிறுத்தினேன் என அறிவித்துள்ளார்.

    பிப்ரவரி 2 ஆம்தேதி இரவு இந்தியா- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை டிரம்ப் அறிவிப்பதை உறுதி செய்ய பிரதமர் மோடியை கட்டாயப்படுத்தியது எது?. அன்று மதியம் மக்களவையில் என்ன நடந்தது. மோடி இவ்வளவு விரக்தியடைந்து, வெள்ளை மாளிகையில் உள்ள தனது நல்ல நண்பரை அணுகி ஒரு திசைதிருப்பலை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கியது எது?. இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உண்மையில் பிரதமரின் விரக்தி மற்றும் சரணடைதலால் இந்தியா சோதனைக்குள்ளாகியுள்ளது

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

    ×