என் மலர்
இந்தியா

மத்திய கிழக்கில் இருந்து பத்திரமாக நாடு திரும்பிய 52,000 இந்தியர்கள் - மத்திய அரசு | Middle east crisis
- வரும் நாட்களில் மேலும் பல இந்தியர்கள் விமானங்கள் மூலம் நாடு திரும்புவார்கள்.
- சிறப்பு விமானங்களும் இயக்கப்படுகின்றன.
ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல், அதைத்தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய மோதல் ஒரு வாரத்தை கடந்து நீடித்து வருகிறது. பல்வேறு நாடுகளின் வான்வழி மூடப்பட்டதால் பலர் அங்கு சிக்கித் தவித்தனர்.
இதனிடையே கடந்த சில நாட்களில் வான்வழிகள் பகுதியளவு திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்திய மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் மார்ச் 1 முதல் மார்ச் 7 வரையிலான காலகட்டத்தில், பல்வேறு விமானங்கள் மூலம் மொத்தம் 52,000 இந்தியர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பியுள்ளனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரும் நாட்களில் மேலும் பல இந்தியர்கள் விமானங்கள் மூலம் நாடு திரும்புவார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வழக்கமான விமானச் சேவைகள் மட்டுமின்றி, சிறப்பு விமானங்களும் இயக்கப்படுகின்றன.
பதற்றம் நீடிப்பதை தொடர்ந்து மேற்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் சுமார் ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
அத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகம் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி விநியோகம் தடையின்றி தொடர்வதையும் உறுதி செய்ய இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.






