search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slipper"

    • கவுன்சிலர் தேர்தலின்போது மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என உறுதி அளித்திருந்தார்.
    • அவற்றை நிறைவேற்றாததால் வருத்தமடைந்த கவுன்சிலர் ஒருவர் தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்டார்.

    அமராவதி:

    ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி அமைந்துள்ளது. நர்சிபட்டினம் நகராட்சி கவுன்சிலராக தெலுங்கு தேசம் கட்சியின் முலபர்த்தி ராமராஜு இருந்து வருகிறார்.

    கவுன்சில் தேர்தலின்போது, நகராட்சியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதி, தரமான சாலைகள், கழிவுநீர் வடிகால்கள் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

    இதற்கிடையே, அவர் கேட்ட திட்டங்களுக்கு அரசு நிதி வழங்கவில்லை. இதனால் 31 மாதங்கள் சென்றுவிட்டன. அவரால் தனது தொகுதிக்கு தான் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லையே என ராமராஜு வருத்தம் அடைந்தார்.

    இந்நிலையில், நேற்று நகரசபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ராமராஜு எழுந்து, என்னை நம்பிய மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என ஆதங்கத்துடன் கூறிய அவர், திடீரென தான் அணிந்திருந்த செருப்பை எடுத்து தன்னைத்தானே சரமாரியாக அடித்துக் கொண்டார் ராமராஜு. அதன்பின் கூட்டத்தில் இருந்து அழுதபடியே வெளியேறினார்.

    மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் வருத்தமடைந்த கவுன்சிலர், தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சாத்தான்குளத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
    சாத்தான்குளம்:

    திசையன்விளை பாலகுமபர மண்டப தெருவை சேர்ந்தவர் வேம்படி மகராஜன் (வயது 44). இவர் அங்குள்ள ஒரு காய்கறி கடையில் வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 24-ந் தேதி காய்கறிகளை கொள்முதல் செய்வதற்காக சாத்தான்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் அடைப்புவிளை அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். 

    இதில் காயமடைந்த அவர் சாத்தான்குளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று வேம்படி மகராஜனுக்கு மீண்டும் உடல் நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு வேம்படி மகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×