என் மலர்
விளையாட்டு
- இறுதிப் போட்டி தோல்வியால் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர்.
- இனி விளையாட விரும்பாமல் ஓய்வு பெற நினைத்தேன்.
புதுடெல்லி:
இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. 3 வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாக பணியாற்றிய அவர் டெஸ்ட், 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்.
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த உலக கோப்பையை கைப்பற்றிய பிறகு ரோகித் சர்மா 20 ஓவர் போட்டியில் இருந்து விடை பெற்றார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து பயணத்துக்கு முன்பு டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
மற்றொரு சீனியர் வீரரான விராட் கோலியும் இதே பாணியில் 20 ஓவர், டெஸ்ட்டில் விடை பெற்று இருந்தார். இருவரும் தற்போது ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்கள். 2027 உலக கோப்பையில் விளையாடுவதை இருவரும் இலக்காக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் 2023 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற பிறகு ஓய்வு பெற முடிவு செய்ததாக ரோகித் சர்மா புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
ரோகித் கூறியதாவது:-
2023 உலக கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு நான் முற்றிலும் மனமுடைந்து போனேன். இந்த விளையாட்டு என்னடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டதால் இனி விளையாட விரும்பாமல் ஓய்வு பெற நினைத்தேன். என்னிடம் எதுவும் மிச்சமில்லை என்று தோன்றியது. அதில் இருந்து மீள சிறிது காலம் ஆனது.
இறுதிப் போட்டி தோல்வியால் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். என்ன நடந்தது என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் கடினமான நேரமாக இருந்தது. ஏனென்றால் அந்த உலக கோப்பைக்காக நான் 2 ,3 மாதங்களுக்கு முன்பு மட்டு மல்ல 2022-ல் கேப்டன் பதவியை ஏற்றதில் இருந்தே எல்லாவற்றையும் அர்ப்பணித்து இருந்தேன்,
20 ஓவர் உலககோப்பையாக இருந்தாலும் சரி, 2023 உலக கோப்பையாக இருந்தாலும் சரி, உலக கோப்பையை வெல்வது மட்டுமே எனது ஒரே இலக்காக இருந்தது. அது நடக்காத போது நான் முற்றிலும் நிலைகுலைந்து போனேன். எனது உடலில் எந்த சக்தியும் இல்லை. அதில் இருந்து மீண்டு பழைய நிலைக்குத் திரும்ப 2 மாதங்கள் ஆனது.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
2023 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அவரது தலைமையில் 2024-ல் 20 ஓவர் உலக கோப்பை கிடைத்தது. ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவர் அதில் மட்டும் தற்போது ஆடி வருகிறார்.
- ஷர்துல் தாகூர் வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் வேலையாடவுள்ளார்.
- ஷர்துல் தாகூரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2 கோடி கொடுத்து வாங்கியது.
இந்திய கிரிக்கெட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவிக்கும் ஷர்துல் தாகூர் வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் வேலையாடவுள்ளார்.
ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னதாக லக்னோ வீரர் ஷர்துல் தாகூரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2 கோடி கொடுத்து வாங்கியது.
ஷர்துல் தாகூர் 2022 ஆண்டு தன் நீண்ட நாள் காதலியான மிதாலியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஷர்துல் தாகூர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அறிவித்துள்ளார். இதனையடுத்து பலரும் வருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
- சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா 4,000 ரன்கள் எடுத்தார்.
விசாகப்பட்டினம்:
இந்தியா, இலங்கை பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஸ்மிருதி மந்தனா 153 போட்டிகளில் விளையாடி 4,000 ரன்கள் எடுத்துள்ளார்.
இதன்மூலம், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 4,000 ரன்கள் குவித்த முதல் இந்திய வீராங்கனை என்ற உலக சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
சர்வதேச அளவில் 2வது வீராங்கனை ஆவார். இதற்கு முன் நியூசிலாந்தைச் சேர்ந்த சுசி பேட்ஸ் மட்டுமே 4000 ரன்களைக் கடந்துள்ளார்.
மேலும், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்கள் அடித்த முதல் ஆசிய வீராங்கனை என்ற வரலாற்றையும் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
- இப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட் வீழ்த்தினார்.
- ஸ்டார்க் இந்தத் தொடரில் இதுவரை 22 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.
அடிலெய்டு:
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3வது போட்டி அடிலெய்டில் நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அத்துடன் ஆஷஸ் டெஸ்ட் தொடரையும் மீண்டும் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டும், 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் வீழ்த்தினார். இந்தத் தொடரில் இதுவரை 22 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.
இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 750 விக்கெட் வீழ்த்திய 3வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 424 விக்கெட்டும், ஒருநாள் போட்டிகளில் 247 விக்கெட்டும், டி20 போட்டிகளில் 79 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
இந்தப் பட்டியலில் ஷேன் வார்ன் 999 விக்கெட்டும், கிளென் மெக்ராத் 948 விக்கெட்டுகளும் வீழ்த்தி முதல் இரு இடங்களில் உள்ளனர்.
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிசிஐ வெஸ்டர்ன் இந்தியா ஸ்குவாஷ் தொடர் மும்பையில் நடைபெற்றது.
- இதில் பெண்கள் ஒற்றையரில் ஜோஷ்னா சின்னப்பா வெற்றி பெற்றார்.
மும்பை:
சிஐஐ வெஸ்டர்ன் இந்தியா ஸ்குவாஷ் தொடர் மும்பையில் நடைபெற்றது.
பெண்களுக்கான இறுதிப்போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா, சன்யா வார்ஸ் உடன் மோதினார். இதில் ஜோஷ்னா 7-11, 11-8, 11-8, 11-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
இதேபோல், ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் வீர் சோட்ரானி, சூரஜ் சந்த் உடன் மோதினார். இதில் வீர் சோட்ரானி 11-9, 11-9, 11-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்தது.
விசாகப்பட்டினம்:
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி வீராங்கனைகள் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியை கட்டுப்படுத்தினர்.
இதையடுத்து, 122 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா 9 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 25 ரன்னும் எடுத்தனர்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து அரை சதம் கடந்தார்.
இறுதியில், இந்திய பெண்கள் அணி 14.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஜெமிமா 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- பிரசாந்த் வீர் என்ற ஆல் ரவுண்டர் வீரரை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலம் எடுத்தது.
- 19 வயதான கார்த்திக் சர்மாவை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலம் எடுத்தது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் நடந்தது. இந்த ஏலத்தில் பிரசாந்த் வீர் என்ற (அன்கேப்ட் வீரர்) ஆல் ரவுண்டர் வீரரை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஜடேஜாவிற்கு மாற்றாக பிரசாந்த் வீர் இருப்பர் என்று சி.எஸ்.கே அணி எதிர்பார்த்து இந்த விலையை கொடுத்துள்ளது.
இதனையடுத்து ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான கார்த்திக் சர்மா (அன்கேப்ட் வீரர்) அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரையும் சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன 2 அன்கேப்ட் வீரர் வீரர்களையும் சி.எஸ்.கே அணி வாங்கியுள்ளது.
பிரபல சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சஹாரை ரூ. 5.20 கோடிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் அகீல் ஹொசைனை ரூ. 2 கோடிக்கும் சி.எஸ்.கே. ஏலம் எடுத்தது. மேலும் சர்ஃபராஸ் கான் ரூ. 75 லட்சம், மேத்யூ ஷார்ட் ரூ. 1.50 கோடி மற்றும் மாட் ஹென்றி ரூ. 2 கோடிக்கும் சிஎஸ்கே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், 2026 ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்சின் பிளேயிங் 11 இதுவாக தான் இருக்கும் என்று முன்னாள் சிஎஸ்கே அஸ்வின் கணித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அஸ்வினின் CSK பிளேயிங் 11
ஆயுஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, டெவால்ட் ப்ரீவிஸ், பிரசாந்த் வீர், எம்.எஸ். தோனி, அகீல் ஹொசைன்/மாட் ஹென்றி, கலீல் அகமது, நாதன் எல்லிஸ், நூர் அகமது,
இம்பாக்ட் வீரர்கள் : அன்ஷுல் கம்போஜ் / கார்த்திக் சர்மா / ஷ்ரேயாஸ் கோபால் / சர்ஃப்ராஸ் கான் (சூழ்நிலையின் அடிப்படையில்)
- முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.
- இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.
சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும்.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ரன் குவிக்க திணறியது. இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 121 மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 122 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
- பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது.
- அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அடித்தார்.
19 வயதுக்குட்பட்ட வருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஆயுஸ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
லீக் போட்டியில் இந்தியாவிடம் மட்டும் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டி UAE இல் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அடித்தார்.
இந்திய அணி தரப்பில் தீபேஸ் ரவீந்திரன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 348 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 26.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்து 191 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் 19 வயதுக்குட்பட்ட வருக்கான 12-வது ஆசிய கோப்பையை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. 172 ரன்கள் விளாசிய சமீர் மின்ஹாஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் U19 ஆசிய கோப்பை வெல்வது இதுவே முதல்முறை ஆகும்.
- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
- தொடக்க வீரர்களான கான்வே இரட்டை சதமும் (227 ரன்), கேப்டன் டாம் லாதம் சதமும் (137) அடித்தனர்.
நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்களான கான்வே இரட்டை சதமும் (227 ரன்), கேப்டன் டாம் லாதம் சதமும் (137) அடித்தனர். ரச்சின் ரவீந்திரா 72 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் ஷீல்ஸ் , ஆண்டர்சன் பிலிப், ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 420 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 2 ஆவது இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்களான கான்வே, டாம் லாதம் ஆகிய இருவரும் சதமடித்து அசத்தினர்.
இதனையடுத்து 462 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் அடித்துள்ளது.
கடைசி நாளில் 88 ஓவர்களில் 419 ரன்கள் அடித்தால் வெஸ்ட் இண்டீஸ் இந்த போட்டியில் வெற்றி பெறுமா? என்பதை நாளை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய முதல் தொடக்க வீரர்கள் என்ற புதிய சாதனையை டாம் லேதம், கான்வே ஜோடி படைத்தது.
இந்த டெஸ்டில் கான்வே (227, 100), லேதம் (137,101) ஆகியோர் சதம் விளாசி இருந்தனர்.
- ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் 2009 முதல் 2018 வரை விளையாடினார்.
- ரியல் மாட்ரிட் அணியில் ரொனால்டோ மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) ரியல் மாட்ரிட் அணியில் விளையாடிய காலத்தில் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவர் ரியல் மாட்ரிட் அணியில் 2009 முதல் 2018 வரை விளையாடினார்.
2009-ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து ரூ.94 மில்லியன் கொடுத்து வாங்கப்பட்டார். அப்போது இது உலக சாதனை தொகையாக இருந்தது.
2018-ம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணியில் இருந்து ஜுவென்டஸ் அணிக்கு சென்றார். அவரை அந்த அணி ரூ.100 மில்லியன் கொடுத்து வாங்கப்பட்டார்.
ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் மொத்தம் 438 போட்டிகளில் விளையாடி 450 கோல்கள் அடித்தார். இது அந்த அணியின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், ரியல் மேட்ரிட் அணிக்காக ஓராண்டில் அதிக கோல்கள் (59) அடித்தவர் என்ற ரோனால்டோவின் சாதனையை கில்லியன் எம்பாப்பே சமன் செய்துள்ளார்.
- டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அடித்தார்.
19 வயதுக்குட்பட்ட வருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஆயுஸ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
லீக் போட்டியில் இந்தியாவிடம் மட்டும் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டி UAE இல் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அடித்தார்.
இந்திய அணி தரப்பில் தீபேஸ் ரவீந்திரன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 348 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது. இந்த இமாலய இலக்கை துரத்தி இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.






