என் மலர்
விளையாட்டு
- 2006-ல் இருந்து 40 இடத்திற்கு மேல் சரிந்ததில்லை.
- தற்போது 4-வது இடத்தில் உள்ளார்.
2026-ல் இன்னும் டென்னிஸ் சீசனை தொடங்காத முன்னணி வீரரான ஜோகோவிச், ஆண்களுக்கான தரவரிசையில் 20 வருடமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஜோகோவிச் 2026-ல் இளம் வீரராக முதல் பிரெஞ்ச் ஓபன் போட்டியிலேயே காலிறுதிக்கு முன்னேறி உலகின் பார்வையை தன் பக்கம் திருப்பினார். அதில் இருந்து டென்னிஸ் உலக தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
பல ஜாம்பவான்கள் வந்து சென்றுள்ளனர். எல்லோரையும் சந்தித்துள்ளார். பெடரர் முதல் நடால் வரை சந்தித்துள்ளார். தற்போது இளம் தலைமுறையினரையும் சந்தித்துள்ளார்.
டென்னிஸ் போட்டியில் ஏற்றம் இறக்கத்தையும் சந்தித்துள்ளார். இருந்தபோதிலும், 2006-ல் இருந்து டென்னிஸ் தரவரிசையில் 40 இடங்களுக்கு மேல் ஒருபோதும் போனதில்லை.
தற்போது ஜோகோவிச் 4-வது இடத்தில் உள்ளார். அல்காரஸ், ஜெனிக் சின்னெர், ஸ்வெரேவ் ஆகியோர் முதல் 3 இடத்தில் உள்ளனர்.
- ஜெர்மனி வீராங்கனையிடம் நேர்செட் கணக்கில் தோல்வி.
- கடந்த வாரம் நடைபெற்ற தொடரிலும் தொடக்க சுற்றிலேயே தோல்வியடைந்தார்.
ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்க இருக்கும் நிலையில், முதல் சுற்று போட்டி இன்று தொடங்கியது. ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாட வைல்டு கார்டு அனுமதி பெற்ற 45 வயதான வீனஸ் வில்லியம்ஸ், ஹோபார்ட் ஓபனில் விளையாடவும் வைல்டு கார்டு அனுமதி பெற்றார்.
இன்று வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் ஜெர்மனியைச் சேர்ந்த தட்ஜனா மரியாவை எதிர்கொண்டார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 3-6 என நேர்செட்டில் கணக்கில் தோல்வியை சந்தித்தார்.
கடந்த வாரம் நியூசிலாந்தில் நடைபெற்ற ஆக்லாந்து போட்டியிடும் வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார்.
ஆஸ்திரேலியா ஓபனில் இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இரண்டு முறையும் தனது சகோதரி செரீனா வில்லியம்ஸிடம் தோல்வியடைந்துள்ளார்.
மெல்போர்ன் பார்க்கில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபனில் 5 வருடங்கள் கழித்து விளையாட இருக்கிறார்.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது 11 பேர் பலியாகினர்.
- இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற தடை விதிக்கப்பட்டது.
பெங்களூர்:
நடப்பு ஐபிஎல் சாம்பியனாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மறுநாள் பெங்களூரில் வெற்றி கொண்டாட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியாகினர். இதையடுத்து பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படவில்லை.
ஓய்வு பெற்ற கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அரசுக்கு அளித்த அறிக்கையில் பெங்களூர் மைதானத்தில் ஏற்பட்ட இடநெருக்கடி தான் 11 பேர் பலியாக முக்கிய காரணம் என்று கூறினார். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற தடை விதிக்கப்பட்டது.
இதனால் வரும் ஐபிஎல் போட்டியில் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி அணி விளையாடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல்லில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி இந்த முறை பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு குறைவு என்ற தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்துக்கு பதில் ஆர்சிபி அணியின் ஹோம் கிரவுண்ட்டாக நவி மும்பை அல்லது ராய்ப்பூர் மாறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் போட்டி நெருங்கி வரும் நிலையில் தற்போது வரை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் போட்டிகளை பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடத்துவதற்கு ஆர்வம் காட்டவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
- டி20 உலக கோப்பையில் தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
- இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்ததாக தகவல் வெளியானது.
புதுடெல்லி:
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் எதிரொலியாக ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக டி20 உலக கோப்பையில் இந்தியாவில் விளையாட மாட்டோம் என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்ததாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து ஐ.சி.சி. இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இதற்கிடையே வங்கதேச அணி இந்தியாவில் விளையாடுவதற்கு ஏற்றவாறு சென்னை, திருவனந்தபுரம் மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த அணி கொல்கத்தாவில் 3 போட்டியிலும், மும்பையில் ஒரு ஆட்டத்திலும் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) செயலாளர் சைகியா கூறியதாவது:-
வங்கதேசப் போட்டிகளை சென்னைக்கோ அல்லது வேறு இடத்துக்கோ மாற்றுவது குறித்த எந்த தகவலும் பி.சி.சி.ஐ.க்கு வரவில்லை. இது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இது ஐ.சி.சி. மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு இடையேயான தகவல் பரிமாற்ற விஷயமாகும்.
ஏனெனில் ஐ.சி.சி.தான் ஆளும் அமைப்பு. இடமாற்றம் குறித்த முடிவை ஐ.சி.சி. எங்களுக்குத் தெரிவித்தால், பி.சி.சி.ஐ., தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். தற்போது எங்களுக்கு அத்தகைய தகவல் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பிளே ஆப் சுற்று வாய்பில் நீடிக்க தமிழ்நாடு அணி வெற்றி பெறுவது அவசியமானது.
- அக்கார்டு தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 7 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
ராஞ்சி:
8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது ஹாக்கி இந்தியா லீக்கின் 2-வது கட்ட போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது
சென்னையை மையமாக கொண்ட அக்கார்டு தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 7 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. முதல் போட்டியில் ஐதராபாத் டூபான்சையும், 2-வது ஆட்டத்தில் சூர்மா ஹாக்கி கிளப்பையும், 3-வது போட்டியில் எஸ்.ஜி.பை பர்சையும் வீழ்த்தி இருந்தது.
நேற்றைய போட்டியில் அந்த அணி 2-4 என்ற கோல் கணக்கில் எச். ஐ.எல். ஜி.சி.யிடம் வீழ்ந்து முதல் தோல்வியை தழுவியது . தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்காக பிளேக் கோவர்ஸ் (32-வது நிமிடம்), உத்தம் சிங் ( 56) ஆகியோர் கோல் அடித்தனர். எச்.ஐ. எல்.ஜி.சி. தரப்பில் கானே ரஸ்ஸல் 3 கோலும் (14,33 மற்றும் 47-வது நிமிடங்கள்), சாம் வார்டு ஒரு கோலும் (23) பதிவு செய்தனர்.
அமித் ரோகித் தாஸ் தலைமையிலான தமிழ்நாடு டிராகன்ஸ் 5-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்கால் டைகர்சை இன்று இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது.
தமிழ்நாடு டிராகன்ஸ் அணி பெங்கால் டைகர்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பிளே ஆப் சுற்று வாய்பில் நீடிக்க வெற்றி பெறுவது அவசியமானது. இதனால் தமிழ்நாடு டிராகன்ஸ் வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்துவார்கள்.
பெங்கால் டைகர்ஸ் 1 வெற்றி, 3 தோல்வியுடன் 1 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.
- நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
- இந்த போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல்போட்டி வதோதராவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு 301 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவரில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் 93 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன்மூலம் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற 2-வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். விராட் 71 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். முதல் இடத்தில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அவர் 75 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.
3 முதல் 5 இடங்கள் முறையே இலங்கை வீரர் ஜெயசூர்யா (58), தென் ஆப்பிரிக்கா வீரர் கல்லீஸ் (57) இலங்கை வீரர் சங்ககாரா (50) ஆகியோர் உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்தப்படியாக விராட் கோலி 2-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி அலிசா ஹீலி.
- இளம் வீராங்கனைகளுக்கு வழிவிட நினைப்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலிசா ஹீலி. இவர் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி ஆவார். இவர் ஒரு அதிரடி தொடக்க ஆட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பர் ஆவார். மெக் லானிங்கின் ஓய்வுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்று அணியை வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அலிசா ஹீலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெறும் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது. அந்த தொடருக்குப் பிறகு ஓய்வு பெற உள்ளார். தனது போட்டித்தன்மை சற்று குறைந்துவிட்டதாக உணர்வதாலும், இளம் வீராங்கனைகளுக்கு வழிவிட நினைப்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
35 வயதாகும் அலிசா மார்ச் 6 முதல் 9 வரை பெர்த்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டி அவரது கடைசி சர்வதேச ஆட்டமாக இருக்கும்.
தனது 15 ஆண்டுகால வாழ்க்கையில், 7,000-க்கும் மேற்பட்ட சர்வதேச ரன்கள் மற்றும் 275 விக்கெட் கீப்பிங் டிஸ்மிசல்களை செய்துள்ளார். மேலும், 8 உலகக் கோப்பை பட்டங்களை வென்ற அணியின் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.
மகளிர் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகளில் ஒருவர். இவர் 2022 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 170 ரன்கள் குவித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நான் ஒரு ஆல்-ரவுண்டராக உருவெடுக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது.
- ஒரு ஆல்-ரவுண்டராக 8-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே அணி நிர்வாகத்தின் விருப்பம்.
வதோதராவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 301 ரன் இலக்கை இந்திய அணி 49 ஓவர்களில் எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 2 விக்கெட் வீழ்த்தியதுடன், பேட்டிங்கில் 29 ரன்கள் விளாசி (23 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
பின்னர் டெல்லியைச் சேர்ந்த 24 வயதான ஹர்ஷித் ராணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் ஒரு ஆல்-ரவுண்டராக உருவெடுக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது. அதற்கான முயற்சியில் ஈடுபடுவது எனது கடமையாகும். வலை பயிற்சியின் போது பேட்டிங்கிலும் கவனம் செலுத்துகிறேன். இது தன்னம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். இந்த ஆட்டத்தில் நான் பேட்டிங் செய்ய களம் கண்ட போது, லோகேஷ் ராகுல் மிகவும் உதவிகரமாக இருந்தார். அதனால் நன்றாக கவனம் செலுத்தி ரன்கள் திரட்டினேன்.
ஒரு ஆல்-ரவுண்டராக 8-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே அணி நிர்வாகத்தின் விருப்பம். அதனால் தான் வலைபயிற்சியில் என்னால் எவ்வளவு நேரம் ஒதுக்க முடியுமோ அதில் நான் கவனம் செலுத்துகிறேன். தேவைப்படும் போதெல்லாம் அணியின் பின்வரிசையில் என்னால் 30 முதல் 40 ரன்கள் எடுக்க முடியும் என்று நம்புகிறேன். என்னால் இதை செய்ய முடியும் என்று அணியும் நம்புகிறது.
விராட் கோலி களத்தில் நின்றது வரை 5-6 ஓவர்கள் முன்கூட்டியே ஆட்டம் முடிந்து விடும் போல் தோன்றியது. ஆனால் அவர் வெளியேறியதும் ஆட்டத்தின் போக்கு மாறியது. கிரிக்கெட்டில் எதையும் கணிக்க முடியாது. எந்த நேரத்திலும் மாறும்.
ஜஸ்பிரித் பும்ரா இல்லாததால் புதிய பந்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுப்பதற்கு தடுமாறுகிறார்களா? என கேட்கிறீர்கள். நீங்கள் என்ன கிரிக்கெட்டை பார்க்கிறீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை. நாங்கள் தொடக்கத்தில் விக்கெட்டுகளை எடுக்காவிட்டாலும் கூட முகமது சிராஜ் உண்மையிலேயே அருமையாக பந்து வீசினார்.
புதிய பந்தில் நாங்கள் அதிகமான ரன்களை விட்டுக்கொடுக்காமல் கட்டுப்படுத்தினோம். கிரிக்கெட்டில் இது போல் நடப்பது சகஜம். ஆரம்பத்தில் விக்கெட்டுகளை எடுக்காவிட்டால், மிடில் வரிசையில் விக்கெட்டுகளை சாய்ப்போம். அதைத் தான் நாங்கள் செய்தோம். ஒரு நாள் கிரிக்கெட்டில் வெவ்வேறு கட்டங்கள் உள்ளன. ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. பெரிய அளவில் பவுன்ஸ் ஆகவில்லை.
இவ்வாறு ஹர்ஷித் ராணா கூறினார்.
- மொத்தம் ரூ.8½ கோடி பரிசுத் தொகைக்கான இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் டெல்லியில் இன்று தொடங்குகிறது.
- இந்த தொடர் இன்று தொடங்கி 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.
புதுடெல்லி:
மொத்தம் ரூ.8½ கோடி பரிசுத் தொகைக்கான இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஷி யூ கி (சீனா), குன்லாவுத் விதித்சரண் (தாய்லாந்து), ஜோனதன் கிறிஸ்டி (இந்தோனேசியா), ஒலிம்பிக் சாம்பியனான அன் சே யங் (தென்கொரியா), அகானே யமாகுச்சி (ஜப்பான்), வாங் ஜி யி (சீனா), பி.வி.சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய வீரர் லக்ஷயா சென், சக நாட்டவரான ஆயுஷ் ஷெட்டியை சந்திக்கிறார். மற்ற இந்திய வீரர்களான ஸ்ரீகாந்த், சீன தைபேயின் லின் சுன் யியையும், பிரனாய், சீனாவின் லீ சுக் யூயையும் எதிர்கொள்கின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனும், கடந்த வாரம் நடந்த மலேசிய ஓபனில் அரைஇறுதி வரை முன்னேறியவருமான இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, வியட்நாமின் நுயென் துய் லின்னுடன் தனது மோதலை தொடங்குகிறார். மற்றொரு இந்திய வீராங்கனை மாள்விகா பான்சோத், சீன தைபேயின் பாய் யூ போவை சந்திக்கிறார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்பவர்கள் என்று எதிர்பார்க்கப்படும் முன்னாள் சாம்பியனான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை, அமெரிக்காவின் சென் ஜி யி-பிரெஸ்லி சுமித் ஜோடியுடன் தனது சவாலை தொடங்குகிறது.
பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் கூட்டணி, தாய்லாந்தின் ஒர்னிச்சா சோங்சதாபோர்ன்பார்ன்- சுகிதா சுவாச் இணையோடு பலப்பரீட்சை நடத்துகிறது. பிரியா- ஸ்ருதி மிஸ்ரா, கவிபிரியா- சிம்ரன் சிங் (பெண்கள் இரட்டையர்), துருவ் கபிலா- தனிஷா கிரஸ்டா (கலப்பு இரட்டையர்) உள்ளிட்ட இந்தியர்களும் இந்த போட்டியில் களம் காணுகிறார்கள்.
- உ.பி. வாரியர்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.
- கிரேஸ் ஹாரிஸ் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் நேற்றைய 5வது லீக் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
நவி மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
உ.பி. வாரியர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் மேக் லென்னிங் , ஹெர்லின் டியோல் களமிறங்கினர்.
லென்னிங் 14 ரன்னிலும், டியோல் 11 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த லிட்ச்பில்ட் 20 ரன்கள் , கிரன் 5 ரன்கள் எடுத்தனர். ஷிராவத் டக் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய டெண்ட்ரா , தீப்தி சர்மாவுடன் ஜோடி நிதானமாக ரன்கள் சேர்த்தது.
20 ஓவர்கள் முடிவில் உ.பி. வாரியர்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.
144 ரன்கள் வெற்றி இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் கிரேஸ் ஹாரிஸ் களமிறங்கினர்.
கிரேஸ் ஹாரிஸ் 22 பந்துகளில் அரைசதமும் 40 பந்துகளில் 85 ரன்களும் அடித்து ஷிகா பாண்டேவிடம் பந்தில் அவுட் ஆனார். மந்தனா ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் குவித்தார்.
இறுதியில் 12.1 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை பெங்களூரு அணி வீழ்த்தியது.
- தவான் முன்னதாக 2012-ல் ஆயிஷா முகர்ஜியை மணந்தார்
- கருத்து வேறுபாடு காரணமாக 2021-ல் பிரிந்த இவர்களுக்கு, அக்டோபர் 2023-ல் டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான், தனது நீண்டகால காதலியான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோஃபி ஷைனை பிப்ரவரி மாதம் திருமணம் செய்யவுள்ளார். இந்தத் திருமணம் டெல்லி-என்சிஆர் பகுதியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மட்டுமே பங்கேற்கும் ஒரு தனியார் நிகழ்வாக நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன் துபாயில் சந்தித்த இவர்களுக்கு இடையே முதலில் நட்புறவு மலர்ந்து, பின்னர் காதலாக மாறியது. 2025 மே மாதம் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
சோஃபி ஷைன், அமெரிக்காவைச் சேர்ந்த நிதிச் சேவை நிறுவனமான 'நார்தர்ன் டிரஸ்ட் கார்ப்பரேஷன்'-இல் இரண்டாம் துணைத் தலைவர். மேலும், ஷிகர் தவானின் 'டா ஒன் ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தின் தொண்டுப் பிரிவான 'ஷிகர் தவான் ஃபவுண்டேஷன்' அமைப்பின் தலைவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.
தவான் முன்னதாக 2012-ல் ஆயிஷா முகர்ஜியை மணந்தார். இவர்களுக்கு சோராவர் என்ற மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக 2021-ல் பிரிந்த இவர்களுக்கு, அக்டோபர் 2023-ல் டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோஃபி ஷைனுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார். இருவரும் தங்கள் நிச்சயதார்த்தத்தை இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் அறிவித்துள்ளனர்.
- 18 ஓவரில் அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 154 ரன்கள் எடுத்திருந்தது.
- இறுதியில் மெல்போர்ன் அணி 20 ஓவரில் 170 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர் பிக் பாஷ் லீக். இந்தத் தொடரின் 15-வது சீசன் நடந்து வருகிறது. இதில் இன்று மெல்போர்ன் ரெனெகேட்ஸ்- சிட்னி தண்டர் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹசன் கான் 46 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்நிலையில் 4-வது பேட்டராக களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் முகமது ரிஸ்வான் ரன்களை குவிக்க தடுமாறினார். 18 ஓவரில் அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 154 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ரிஸ்வானை வெளியேறுமாறு அணியின் கேப்டன் கை சைகை காட்டி அழைத்தார். இதனையடுத்து ரிஸ்வான் வெளியேறினார்.
இறுதியில் மெல்ர்போன் அணி 20 ஓவரில் 170 ரன்கள் எடுத்தது. குறிப்பாக அவர் வெளியேறியதையடுத்து கடைசி 2 ஓவரில் அந்த 16 ரன்கள் எடுத்தது. இது தொடர்பான நெட்டிசன்கள் பாகிஸ்தான் வீரர்களை அசிங்கப்படுத்தும் செயல் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






