என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • அக்ரம் 104 டெஸ்டில் 414 விக்கெட் வீழ்த்தி 16-வது இடத்தில் உள்ளார்.
    • ஸ்டார்க் 102 டெஸ்டில் 414 விக்கெட் கைப்பற்றி அவரை சமன் செய்துள்ளார்.

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஸ் தொடரின் 2-வது டெஸ்ட் பகல் இரவாக பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிச்சேல் ஸ்டார்க்கின் அபாரமான பந்து வீச்சால் தொடக்க வீரர் பென் டக்கெட் , ஒலி போப் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்கள். 5 ரன்னில் இங்கிலாந்து 2 விக்கெட்டை இழந்தது.

    2 விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்) சாதனையை ஸ்டார்க் சமன் செய்தார். அக்ரம் 104 டெஸ்டில் 414 விக்கெட் வீழ்த்தி 16-வது இடத்தில் உள்ளார். ஸ்டார்க் 102 டெஸ்டில் 414 விக்கெட் கைப்பற்றி அவரை சமன் செய்துள்ளார்.

    மேலும் டெஸ்ட் போட்டிகளில் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகளை (26) வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (19) மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெமர் ரோச் (10) உள்ளனர்.

    • ஒரு நாள் போட்டியில் இரு இந்திய வீரர்கள் ஒரே இன்னிங்சில் சதம் அடிப்பது இது 44-வது நிகழ்வாகும்.
    • விராட் கோலி சதம் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது இது 8-வது முறையாகும்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் பல சாதனைகளை படைத்துள்ளது. அதேசமயம் சோதனைகளையும் சந்தித்துள்ளது.

    அதன்படி கோலி- ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய ஜோடி ஒன்றின் சிறந்த பார்ட்னர்ஷிப் இதுவாகும். இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு குவாலியரில் நடந்த ஆட்டத்தில் சச்சின் தெண்டுல்கர்- தினேஷ் கார்த்திக் இணை 2-வது விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

    விராட் கோலி 33 முறை 150 ரன்களுக்கு மேலான பார்ட்னர்ஷிப்புக்கு பங்களித்துள்ளார். அதிக தடவை 150 ரன்னுக்கு மேலான பார்ட்னர்ஷிப்புக்கு உதவியதில் அவர் டெண்டுல்கரை (32 முறை) முந்தியுள்ளார்.

    ஒரு நாள் போட்டியில் இரு இந்திய வீரர்கள் ஒரே இன்னிங்சில் சதம் அடிப்பது இது 44-வது நிகழ்வாகும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3-வது முறையாகும்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 135 ரன்கள் விளாசிய விராட் கோலி, 2-வது ஆட்டத்தில் 102 ரன்கள் எடுத்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் கோலி சதம் காண்பது இது 11-வது முறையாகும். இச்சாதனையில் அவரை நெருங்க கூட ஆளில்லை. அவருக்கு அடுத்தபடியாக தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் 6 முறை அடுத்தடுத்த ஆட்டங்களில் சதம் கண்டுள்ளார்.

    ராய்ப்பூர் மைதானத்தில் விராட் கோலி அடித்த சதம், அவரது 53-வது சதமாகும். இதையும் சேர்த்து ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் 34 இடங்களில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் அதிக வெவ்வேறு இடங்களில் சதம் அடித்தவரான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை (இவரும் 34 இடத்தில் சதம்) சமன் செய்தார்.

    ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி சேர்த்து) விராட் கோலி எடுத்த சதங்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. இந்த சாதனை பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு (100 சதம்) அடுத்த இடத்தில் தொடருகிறார்.

    ருதுராஜ் கெய்க்வாட் 77 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய வீரர் ஒருவரின் 2-வது அதிவேக சதமாக இது பதிவானது. 2011-ம் ஆண்டு செஞ்சுரியனில் நடந்த ஆட்டத்தில் யூசுப் பதான் 68 பந்தில் சதம் அடித்ததே சாதனையாக தொடருகிறது.

    2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இருந்து ஒரு நாள் போட்டியில் இந்திய அணி டாசில் ஜெயிக்கவில்லை. நேற்றைய போட்டியுடன் தொடர்ச்சியாக 20 ஆட்டங்களில் டாசை இழந்துள்ளது. விராட் கோலி சதம் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது இது 8-வது முறையாகும்.

    இந்திய அணிக்கு எதிராக அதிகபட்ச சேசிங்காக ஆஸ்திரேலியாவின் சாதனையை தென் ஆப்பிரிக்கா சமன் செய்துள்ளது. 

    • 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.
    • மற்ற அணிகள் 9 முதல் 24-வது இடத்துக்கான ஆட்டங்களில் விளையாடும்.

    சென்னை:

    14-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்சில் உள்ள சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதின. லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி (ஏ), இந்தியா (பி), அர்ஜென்டினா (சி), ஸ்பெயின் (டி), நெதர்லாந்து (இ), பிரான்ஸ் (எப்) ஆகியவை தங்கள் பிரிவில் முதலிடம் பிடித்தும், 2-வது இடம் பிடித்த இரண்டு சிறந்த அணிகளான நியூசிலாந்து (சி), பெல்ஜியம் (டி) என 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. மற்ற அணிகள் 9 முதல் 24-வது இடத்துக்கான ஆட்டங்களில் விளையாடும்.

    இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். இன்று மதுரையில் நடைபெறும் 17 முதல் 24-வது இடத்தை நிர்ணயிப்பதற்கான ஆட்டங்களில் நமிபியா-ஆஸ்திரியா (காலை 9 மணி), வங்காளதேசம்-ஓமன் (காலை 11.30 மணி), தென்கொரியா-எகிப்து (பிற்பகல் 2 மணி), சீனா-கனடா (மாலை 4.30 மணி) அணியும், சென்னையில் நடைபெறும் 9 முதல் 16-வது இடத்தை தீர்மானிப்பதற்கான ஆட்டங்களில் இங்கிலாந்து- சிலி (பகல் 12.30 மணி), தென்ஆப்பிரிக்கா- மலேசியா (பிற்பகல் 3 மணி), சுவிட்சர்லாந்து- அயர்லாந்து (மாலை 5.30 மணி), முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா -ஜப்பான் (இரவு 8 மணி) அணியும் மோதுகின்றன.

    • இந்திய தரப்பில் ருதுராஜ், விராட் கோலி சதம் அடித்தனர்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்க்ரம் சதம் அடித்தார்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.

    இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ருதுராஜ் 105 ரன்னும் விராட் கோலி 102 ரன்னும் கே.எல்.ராகுல் 66 ரன்னும் அடித்தனர்.

    இதையடுத்து 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது.

    தொடக்க ஆட்டக்காரரான மார்க்ரம் 98 பந்துகளில் 110 ரன்கள் விளாசி அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய பவுமா 46 ரன்னிலும் அதிரடியாக விளையாடிய ப்ரேவிஸ் 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    நிதானமாக விளையாடிய ப்ரீட்ஸ்கி 68 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கிய போஸ் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்.

    49.2ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் அடித்து தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    • இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.
    • டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ராய்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மைதானத்தில் ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் சேர்ந்து ஜெர்சியை அறிமுகப்படுத்தினர்.

    டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

    இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    துணை கேப்டனாக சுப்மன் கில் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், அவரது உடல்தகுதியை பொறுத்து போட்டிகளில் விளையாடுவது முடிவு செய்யப்படும் என பிசிசிஐ கூறியுள்ளது

    இந்திய அணி விவரம்:-

    சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (WK), சஞ்சு சாம்சன் (WK), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா, வாஷிங்டன் சுந்தர்.

     

    • இந்திய தரப்பில் ருதுராஜ், விராட் கோலி சதம் அடித்தனர்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.

    இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - ரோகித் களமிறங்கினர். இதில் ரோகித் 8 பந்தில் 14 ரன்னிலும் ஜெய்ஸ்வால் 22 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து ருதுராஜ்- விராட் கோலி ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

    ருதுராஜ் 105 ரன்னிலும் விராட் கோலி 102 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    இதனை தொடர்ந்து கேஎல் ராகுல் - ஜடேஜா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சிறப்பாக விளையாடிய ராகுல் அரை சதம் கடந்தார்.

    இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    • முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
    • இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி காபா மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி காபா மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

    இந்த நிலையில், காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் காபா மைதானத்தின் தன்மையை பொறுத்தே கம்மின்ஸ் விளையாடுவது குறித்து அணி நிர்வாகம் முடிவு செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போட்டிக்கான ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அணி அறிவிக்கமால் இருந்து வருகிறது.

    • ஒருநாள் கிரிக்கெட்டில் ருதுராஜ் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் 14 ரன்களிலும் ஜெய்ஷ்வால் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்ததாக ஜோடி சேர்ந்த விராட் கோலி - ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது.

    அதிரடியாக விளையாடிய ருதுராஜ் 77 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 12 பவுண்டரிகள், 2 சிக்சருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் ருதுராஜ் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 105 ரன்கள் அடித்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து ருதுராஜ் ஆட்டமிழந்தார்.

    மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய கோலி தனது 53 ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்து புதிய சாதனை படைத்தார். 90 பந்துகளில் கோலி சதமடித்தார். 

    38 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் அடித்துள்ளது. 

    • முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியின் இந்திய வீரர் ஹர்ஷித் ராணா ஐசிசி விதிகளை மீறியுள்ளார்.

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது.

    இதில் அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பிரெவிஸ் விக்கெட்டை இந்திய வீரர் ஹர்ஷித் ராணா வீழ்த்துவார். வீழ்த்திய வேகத்தில் அவரை முறைத்தபடி வெளியே செல்லுமாறு கை சைகை காட்டுவார்.

    இந்நிலையில் டெவால்ட் பிரெவிஸை அவுட்டாக்கிய போது ஹர்ஷித் ராணா செய்த சைகைக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் விதியை மீறியதாக கூறி அவருக்கு ஒரு Demerit புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.

    • இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் வருகிற 6-ந் தேதியுடன் முடிவடைகிறது.
    • இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடர் டிசம்பர் 9-ந் தேதி தொடங்குகிறது.

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

    இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இரு அணிகள் மோதும் டி20 தொடர் நடைபெற உள்ளது. அதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

    இந்நிலையில் காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவாரா இல்லையா என சந்தேகம் எழுந்த நிலையில் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் ஹர்திக் பாண்ட்யா, ரியான் பராக் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • பேட்டர் தரவரிசையில் ரோகித் முதல் இடத்தில் தொடர்கிறார்.
    • பந்து வீச்சு தரவரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 6-வது இடத்தில் உள்ளார்.

    ஆடவருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

    சுப்மன் கில் ஒரு இடம் பின்தங்கி 5-வது இடத்தில் உள்ளார். இதை தவிர டாப் 10-ல் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ரோகித் முதல் இடத்தில் தொடர்கிறார். கேஎல் ராகுல் 2 இடம் முன்னேறி 14-வது இடத்தில் உள்ளார்.

    ஒருநாள் பந்து வீச்சு தரவரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தில் உள்ளார். மற்றபடி பந்து வீச்சு தரவரிசையில் பெரிய மாற்றம் இல்லை.

    ×